புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 பிப்., 2014

நவனீதம்பிள்ளையின் அறிக்கை தயார்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளையின் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது,இலங்கை தொடர்பில், பத்தாயிரம் சொற்களைக் கொண்ட அறிக்கை ஒன்றை நவனீதம்பிள்ளை தயாரித்துள்ளார்.
எதிர்வரும் 26ம் திகதி நண்பகல் 12.00 மணியளவில் நவனீதம்பிள்ளை இந்த அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளார்.
நவனீதம்பிள்ளை இந்த அறிக்கையை சமர்ப்பிப்பதற்கு முன்னதாக ஐந்து அரச சார்பற்ற நிறுவனங்கள் இராணுவத்தினர் குற்றம் இழைத்தாக அறிவித்த அறிக்கை அனுப்பி வைத்துள்ளனர்.
அரச சார்பற்ற நிறுவனம் அறுபது சாட்சியாளர்கள் பற்றிய தகவல்களையும் வெளியிட்டுள்ளது.
இதேவேளை, இலங்கைக்கு அண்மையில் விஜயம் செய்திருந்த அமெரிக்க துணை ராஜாங்கச் செயலாளர் நிஸா பிஸ்வால் நவனீதம்பிள்ளையை சந்தித்து ஒரு மணித்தியாலம் பேசியுள்ளார்.

ad

ad