மாநிலங்களவையில் கடும் அமளி: மைக்கை உடைக்க முயற்சி
மாநிலங்களவையில் திங்கள்கிழமை தனித் தெலங்கானா உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து அமளியில் ஈடுபட்ட உறுப்பினர்கள், அவைத் துணைத் தலைவரின் மைக்கை உடைக்க முயன்றனர்.
அவையின் மையப் பகுதிக்கு வந்த மாநிலங்களவை உறுப்பினர்கள், அவையில் இருந்த காகிதங்களை எடுத்து கிழித்தனர். மேலும், துணைத் தலைவரின் மைக்கை உடைக்க முயன்றனர். இதற்கு துணைத் தலைவர் குரியன் கண்டனம் தெரிவித்தார். மாநிலங்களவையை உடனடியாக ஒத்திவைத்தார்.