புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 பிப்., 2014

ஆலங்குளத்தில் பயங்கரம் வாலிபர் வெட்டி படுகொலை
ஆலங்குளத்தில் வாலிபர் ஒருவர் 10க்கும் மேற்பட்ட மர்ம கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். அவரது நண்பர் பலத்த காயமடைந்தார்.



 ஆலங்குளம் மங்கம்மாள் சாலையைச் சேர்ந்த மாடசாமி மகன் முத்துராஜ்(27), அருந்ததியர் தெருவைச்சேர்ந்த அருணாசலம் மகன் மதன்(25). நண்பர்களான இவர்கள் இருவரும், ஞாயிற்றுக்கிழமை மாலையில் ஆலங்குளம் காவல் நிலையம் அருகில் உள்ள தொட்டியன்குளம் மைதானத்தில் சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடுவதைப் பார்த்துக் கொண்டிருந்தனராம். அப்போது 10க்கும் மேற்பட்ட வாலிபர்கள் வந்து கண்ணிமைக்கும் நேரத்தில் மதன் மற்றும் முத்துரைஜை கை,தலை, வயிறு உள்ளிட்ட இடங்களில் அரிவாள் கொண்டு வெட்டியதில் சம்பவ இடத்திலேயே பலியானார். மதன் படுகாயமடைந்தார்.
 சம்பவம் குறித்து தகவலறிந்த ஆலங்குளம் போலீஸ் டிஎஸ்பி., பிச்சை, ஆய்வாளர் பாலமுருகன் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் வந்து விசாரணை மேற்கொண்டனர். திருநெல்வேலி எஸ்பி(பொறுப்பு) சுரேஷ்குமாரும் நேரில் வந்து விசாரித்தார். இது தொடர்பாக ஆலங்குளம் போலீஸார் 5 பேரைப் பிடித்து விசாரித்து வருகின்றனர். தப்பியோடிய மேலும் சிலரையும் தேடி வருகின்றனர்.

ad

ad