மேற்கு உத்தரபிரதேசத்தில் உள்ள ஷகாரன்பூர் நாடாளுமன்ற தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடுபவர் இம்ரான் மசூத். இவர் நேற்று தேர்தல் பிரசாரம் செய்தபோதே மேற்கண்டவாறு பேசினார்.
" நான் இந்த வீதியை சேர்ந்தவன். என்னுடைய மக்களுக்காக எனது உயிரையும் கொடுக்க தயாராக உள்ளேன். நான் சாவதற்கோ அல்லது கொல்லப்படுவதற்கோ அஞ்சவில்லை. அவர் ( மோடி ) இது குஜராத் என நினைத்துக்கொள்கிறார். குஜராத்தில் 4 சதவீத முஸ்லிம்கள் மட்டுமே உள்ளனர். ஆனால் இங்கே (உத்தரபிரதேசம்) 42 சதவீதம் முஸ்லிம்கள் உள்ளனர்" என்று அவர் மேலும் பேசினார்.
இந்நிலையில் மோடியை கொல்வேன் என்ற இம்ரான் மசூத்தின் பேச்சு அப்பகுதியினரிடையே அதிர்ச்சியையும், சர்ச்சையையும் ஏற்படுத்திய நிலையில், தமது பேச்சுக்காக இம்ரான் இன்று மன்னிப்புக்கோரியுள்ளார்.
"நான் எனது தவறை ஒத்துக்கொள்கிறேன். தேர்தல் நேரத்தில் நான் அவ்வாறு பேசியிருக்கக்கூடாது" என இம்ரான் தெரிவித்துள்ளார். இதனிடையே இம்ரானின் இந்த பேச்சுக்கு காங்கிரஸ் கட்சியும் கண்டனம் தெரிவித்துள்ளது.