புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 ஏப்., 2014

என்னை தோற்கடிப்பதற்காக இரண்டு கட்சிகள்
 கங்கனம் கட்டிக்கொண்டு நிற்கிறது: தொல்.திருமாவளவன்
சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் அரியலூர் மாவட்டம் செந்துறை ஒன்றியத்தில் ஆனந்தவாடி, கிளிமங்கலம், இரும்புலிக்குறிச்சி, குமுலியம், பரனம், சிறுகடம்பூர், உஞ்சனி,
நல்லாப்பாளையம் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் புதன்கிழமை வாக்கு சேகரித்தார்.


அப்போது சிறுகடம்பூர் காலனியில் வாக்கு சேகரித்த போது அவர்,  ‘’ இந்த தேர்தல் மிக முக்கியமான தேர்தல். பாஜக வெற்றி பெற்றால் சமூகநீதி பாதுகாப்புக்கு கேடு ஏற்படும். எனவே இத்தேர்தலில் அதனை முறியடிக்க திமுக தலைவர் கருணாநிதி வாழ்த்துக்களோடு, மோதிரம் சின்னத்தில் போட்டியிடுகிறேன்.
என்னை தோற்கடிப்பதற்காக ஆளும் கட்சியும், வேறொரு கட்சியும் கோடிக்கணக்கில் பணத்தை செலவு செய்து பணம் கொடுத்து வாக்குகளை வாங்க ஆயத்தமாகி வருகிறது. என்னை தோற்கடிப்பதற்காக இரண்டு கட்சிகள் (அதிமுக, பாமக) கங்கனம் கட்டிக்கொண்டு வேலை செய்து வருகிறது. என்னை பற்றி ஒரு கட்சி அவதூறு பரப்பி வருகிறது.  அதற்கு நீங்கள் இடமளிக்காமல், விழிப்புணர்வுடன் இருந்து மோதிரம் சின்னத் தில் வாக்களிக்க வேண்டும்’’ என திருமாவளவன் தெரிவித்தார்

ad

ad