புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 ஏப்., 2014


பரந்தனில் இளைஞனின் சடலம் கண்டு பிடிப்பு 
பரந்தனில் மதுவரி திணைக்களத்திற்கு பின்புறமாக உள்ள புகையிரத வீதிக்கருகில் அடிகாயங்களுடன் மரணமான இளைஞரின் சடலம் இன்று 9 ஆம் திகதி கிளிநொச்சி மரண விசாரணை அதிகாரி டாக்டர் கே. திருலோகமூர்த்தி முன்னிலையில் உறவினர்களால் அடையாளம் காட்டப்பட்டுள்ளது.

மரணமானவனின் நவனில்ல தோட்டம் கலகா வாசியான சிவலிங்கம் ரமேஷ் (வயது21) என தந்தையான பெரியண்ணன் சிவலிங்கத்தாலும் சகோதரர் சிவலிங்கம் பெரியசாமியாலும் அடையாளம் காணப்பட்டு தந்தையால் சடலம் பொறுப்பேற்கப்பட்டு அடக்கம் செய்வதற்காக சொந்த இடம் கொண்டு செல்லப்பட்டது.
 
கடந்த 09/03/2014 இல் மீட்கப்பட்டு கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டிருந்தது. தொலைபேசி சிம்கார்ட் ஒன்றின் உதவியுடன் இறந்தவர் இருப்பிடம் பொலிஸாரால் கண்டறியப்பட்டது. 
 
கடந்த 05.03.2014 இல் கிளிநொச்சி நீதிமன்றில் இடம்பெற்ற திருட்டு வழக்கு ஒன்றில் மரணமான ரமேஸ் என்பவரின் தந்தையான சிவலிங்கம் பிணை எடுத்ததாகவும் பின்னர் இவர் கிளிநொச்சியில் தங்கிவிட்டதாகவும் மரண விசாரணையில் சாட்சியமளிக்கப்பட்டுள்ளது. 
 
அத்துடன் மரணமாவர் மீது மேலும் சில திருட்டு வழக்குகள் உள்ளதாகவும் மரண விசாரணையின் போது பொலிஸார் குறிப்பிட்டனர்.
 
அப்பரிசோதனையை சட்ட வைத்திய அதிகாரி டாக்டர் சிவரூபன் மேற்கொண்டார். மரணம் தொடர்பில் மரண விசாரணை அதிகாரி டாக்டர்.திருலோகமூர்த்தி பகிரங்க தீர்ப்பு வழங்கினார். 

ad

ad