புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 ஏப்., 2014

வடக்கில் தொடரும் சுற்றி வளைப்புக்கள் – 65 பேர் கைது

கடந்த மாதத்தின் முற்பகுதியில் கிளிநொச்சி- தர்மபுரம் கிராமத்தில் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக குற்றம்சாட்டப்பட்டதன் பின்னர், வடகிழக்கு மாகாணங்களில் குறிப்பாக கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் கடுமையான தேடுதல் நடைவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, பலர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் இன்றைய தினம் பொலிஸ் பேச்சாளர் மேற்படி தகவலை
வழங்கியிருக்கின்றார்.
அவர் வழங்கியிருக்கும் தகவலின் பிரகாரம் வடகிழக்கு மாகாணங்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீள் ஒருங்கிணைவதற்கான ஏது நிலைகள் உருவாகியிருப்பதாகவும் அதற்கமைய 65 போர் கைது செய்யப்பட்டு, 5 போர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் வடகிழக்கு மாகாணங்களில் தொடர்ச்சியாக படையினர் சுற்றிவளைப்பக்களும், சோதனை நடவடிக்கைகளும் இடம்பெற்று வருகின்றன.
கடந்த இரு தினங்களுக்கு முன்பாக யாழ்.கோப்பாய் பகுதியில் அதிகாலை 4 மணிக்கு திடீர் சுற்றிவளைப்பு சோதனை நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ad

ad