புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 ஜூன், 2015

அநுராதபுர அரசியல் கைதிகளை சந்தித்தார் விஜயகலா


அநுராதபுர சிறைச்சாலைக்கு விஜயம் மேற்கொண்ட மகளீர் விவகார பிரதி அமைச்சர்  விஜயகலா  சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு நீண்ட காலமாக
தடுத்து வைக்கப்பட்ட  அரசியல் கைதிகள் 60 க்கு மேற்பட்டவர்களை சந்தித்து கலந்துரையாடினார்  .
அரசியல்  கைதிகள்  தாம் 10 வருடங்களுக்கு மேலாக இங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளோம் எனினும் தமக்கு  இதுவரை காலமும்  விடுதலை வழங்கப்படவில்லை. எனவே எமக்கு விரைவில் விடுதலை பெற்றுத் தருமாறு அவர்கள் விஜயகலாவிடம் கேட்டுக் கொண்டனர்.
அதற்கு மகளிர் விவகார பிரதி அமைச்சர் விஜயகலா தான் ஜனாதிபதி மற்றும் பிரதமர் இருவரிடமும் கலந்துரையாடி இதற்குரிய தீர்வை வெகுவிரைவில் பெற்றுத் தருவதாகவும்  அவர்களிடம் உறுதியளித்தார்

ad

ad