புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 ஜூன், 2015

தேர்தலில் நிற்பது உறுதி, வெற்றியும் உறுதி: விஷால் பரபரப்பு பேட்டி



திருச்சியில் நடிகர் விஷால் தலைமையில் 10 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது. இதனை திருச்சி விஷால் ரசிகர் மன்றம் ஏற்பாடு செய்திருந்தது.

இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஷால்,

மேடைக்கு நான் வந்தவுடன் என்னுடைய அம்மா, இவ்வளவு பெரிய கூட்டத்தை கூட்டி உன்னைய மாலையும் கழுத்துமா கல்யாணத்தை பார்க்கனும் ஆசைப்பட்ட எங்களுக்கு, நீ 10 பேருக்கு கல்யாணம் பண்ணி வச்சுகிட்டுயிருக்கே என்றார். நான் இன்னும் கல்யாணத்திற்கு தயார் ஆகவில்லை. எனக்கு இன்றையிலிருந்து 11 தங்கச்சிகள், என் தங்கச்சிகளை கல்யாணம் செய்து கொண்டவர்களுக்கு நான் சொல்லிக்கொள்வது எல்லாம் ஏதோ கல்யாணம் செய்து வைத்துவிட்டேன். இத்தோடு மறந்துவிடுவேன் என்று மட்டும் நினைத்துவிடாதீர்கள். என் தங்கைகள் ஏதாவது கண்கலங்கின மாதிரி நடத்தினீர்கள் என்றால் தமிழ்நாட்டில் எந்த மூலைக்கு சென்றாலும் தேடி வந்து கேள்வி கேட்பேன். தவறு நடந்தால் கேள்வி கேட்பது என்னுடைய பாணி.

நான் நடிக்கும் துறை என்னை ஏதோ ஒரு இடத்திற்கு கொண்டுவந்து நிறுத்தி விட்டது. இந்த திருமணத்தை நடத்தி வைப்பதால் வேறு ஏதோ ஒரு எண்ணத்தில் நான் செயல்படுவதாக நினைக்க வேண்டாம். நாடக நடிகர்களுக்கு ஒரு கட்டத்தை கட்டி கொடுப்பேன். எல்லோரும் தேர்தலுக்காக வாக்குறுதி கொடுப்பார்கள். ஆனால் இளம் நடிகர்கள் அப்படியில்லை. நாங்கள் தேர்தலுக்கு முன்பாக செய்து காண்பிப்போம். பதவியில் இருந்தால் தான் செய்யனும் என்று இல்லை. தனிப்பட்ட முறையில் நாங்கள் செய்து கொடுப்போம். இந்த தேர்தலில் நாங்கள் நிற்பது உறுதி, அதே போல வெற்றியும் உறுதி என்றார்.

ad

ad