2016ஆம் ஆண்டின் ராடார் சுற்றுலா மைய நாடுகளின் தரப்படுத்தலில் பத்து முதன்மை நாடுகளில் ஒன்றாக இலங்கை தெரிவு செய்யப்பட்டுள்ளது.
வெளிநாட்டு இணையத்தளம் ஒன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
இலங்கை இந்து சமுத்திர பிராந்தியத்தில் நீர்வீழ்ச்சிகள், கரையோரங்கள் மற்றும் யுனெஸ்கோவின் எட்டு உலக அதிசயங்களையும் கொண்டு அமைந்துள்ளது .
இதில் பௌத்தர்களின் புனித தந்தம் உள்ள தலதா மாளிகையும் தேயிலை பெருந்தோட்டங்களும் அடங்குவதாக அந்த இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த தரப்படுத்தலின் முதல் 10 நாடுகளில் கொலம்பியா, ஜப்பான், சுவிட்ஸர்லாந்து, கிரீன்லாந்து, ஒஹியோ, சீனா, ஜோர்ஜியா, மொன்டிக்ரோ மற்றும் நிக்கரகுவா ஆகிய நாடுகள் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.