புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 ஜன., 2016

போர்க்குற்றங்கள் நிரூபிக்கப்படுவோர் தண்டிக்கப்படுவர்: யாழில் ரணில்

வடக்குகிழக்கு தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்தப்படும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற தைப்பொங்கல் நிகழ்வின்போது வடக்கின் முதலமைச்சர் சி வி விக்னேஸ்வரன் ஆற்றிய உரைக்கு பதில் உரை வழங்கும் வகையில் ரணில் விக்கிரமசிங்க இந்த உறுதியை வழங்கினார்.
வடக்கில் இன்னும் இராணுவ பிரசன்னம் இருப்பதாகவும் காணிவிடயங்களில் இன்னும் தீர்வுகள் காணப்படவில்லை என்று விக்னேஸ்வரன் முன்னதாக குற்றம் சுமத்தியிருந்தார்.
இந்தநிலையில் தமது உரையில் ரணில் விக்கிரமசிங்க, போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெறுவதாகவும் குற்றம் காணப்படுபவர்கள் தண்டிக்கப்படுவர் என்று குறிப்பிட்டார்.

ad

ad