மாத்தறை தலல்லு கடற்கரையில் வெளிநாட்டு பெண்ணொருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய நான்கு பேரை கந்தர பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஜேர்மனிய பெண்ணொருவரே இவர்களால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நான்கு சந்தேக நபர்களில் ஒரு துறவியும் அடங்குவதாக கந்தர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்தே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மாத்தறை நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளனர்.