![](https://lh3.googleusercontent.com/blogger_img_proxy/AEn0k_t-2Gb0YgEBoHRV_pRHuHYmix8GAjUcCYnDlO1MC0fxoMRIXIofQfxqIFAytLgG2Wr68HiPU5Iehz52znEO8JsJ6i5ToJ4hr53wPOVQ7ww7cA=s0-d)
ஹரியானாவில் போலீஸாருக்கு போக்கு காட்டிவந்த சாமியார் ராம்பால், ஒரு வழியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
சாமியார் ராம்பாலை கைது செய்வதற்கு மாநில போலீஸாருக்கு உதவிட மத்திய பாராமிலிட்டரி படையை சேர்ந்த 500 வீரர்கள் அனுப்பப்பட்டநிலையில், இன்று இரவு அவர் கைது செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து உடனடியாக மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், நாளை வியாழக்கிழமை ஹிசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்.