புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 நவ., 2014

இலங்கை உதைபந்தாட்ட சம்மேளன தலைவர் ரஞ்சித் ரொட்ரிக்கோ யாழ்ப்பாணம் விஜயம்

யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் ரஞ்சித் றொட்றிக்கோ வட மாகாண உதைபந்தாட்ட லீக்குகளின் நிர்வாக சபை உறுப்பினர்கள் மற்றும் கழகங்களின் பிரதி நிதிகளுடன் கலந்துரையாடலை நடத்தியுள்ளார்.
2015 ம்ஆண்டு நடைமுறைகள்
செயற்பாடுகள் சம்பந்தமாக கலந்துரையாடியதுடன் எதிர் காலத்தில் கழகங்களின் செயற்பாடுகளில் கடுமையான விதிமுறைகள் பின்பற்றப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அனைத்து கழகங்களும் இலங்கை உதைபந்தாட்ட லீக்கில் பதிவு செய்யப்பட்டு இருப்பதுடன் கட்டாயமாக லீக்குகளில் பதிவு செய்யப்பட்ட கழகங்களின் வீரர்கள் இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் அடையாள அட்டையை கொண்டு இருக்க வேண்டும் எனவும் அடையாள அட்டைகள் இன்றி இருப்பவர்கள் யாரும் லீக்போட்டிகளில் விளையாட அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்தக் கலந்துரையாடலில் வவுனியா, மன்னார், முல்லைத்தீவு கிளிநொச்சி, யாழ்ப்பாணம், வலிகாமம், பருத்தித்துறை, வடமராட்சி லீக்குகளின் பிரதி நிதிகள் கழகங்கள் கலந்துகொண்டமை குறிப்பி;டத்தக்கதாகும்.

ad

ad