புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 அக்., 2012


யாழில் உள்ள ஐந்து தீவுகளுக்கு சூரிய மற்றும் காற்று மூலம் சக்தியினை வழங்க நடவடிக்கை

வட மாகாணத்தைச் சேர்ந்த ஐந்து தீவுகளுக்கு சூரிய மற்றும் காற்று மூலமான சக்தியினை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கைகளை மின்சக்தி மற்றும் சக்திவலுத்துறை அமைச்சு மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இலங்கைக்கு எதிராக அமெரிக்க நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ள மேலும் ஒரு பிரேரணையை தடுத்து நிறுத்தும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.
இலங்கையில் இடம்பெற்ற யுத்தம் தொடர்பில் தனிக்குழு அமைத்து, சுயமாகவும், சுதந்திரமாகவும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்திய பிரேரணை ஒன்று அமெரிக்க நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது.

Champions League Twenty20 - Group A FULL SCORECARD
Delhi Daredevils won by 52 run
ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ்: பெடரரை வீழ்த்தி ஆன்டி முர்ரே இறுதி போட்டிக்குத் தகுதி
முன்னணி வீரர்கள் பங்கேற்றுள்ள ஷாங்காய் ரோலர்ஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி சீனாவில் நடந்து வருகிறது. இன்று நடந்த ஒரு அரை இறுதிப்போட்டியில் பெடரர்,
சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட்: கொல்கத்தாவை வீழ்த்தியது டெல்லி டேர்டெவில்ஸ்
சாம்பியன்ஸ் லீக் 20ஓவர் கிரிக்கெட் போட்டியின் 2-வது லீக் போட்டி இந்திய நேரப்படி நேற்று இரவு 9 மணிக்கு தொடங்கியது. இதில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ்- டெல்லி

வேலூர் சிறையில் இருந்து வீரபாண்டி ஆறுமுகம் விடுதலை: மு.க.ஸ்டாலின் வரவேற்பு
வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த வீரபாண்டி ஆறுமுகம் விடுதலை செய்யப்பட்டார். அவரை திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் மற்றும் கனிமொழி எம்பி ஆகியோர் வரவேற்றனர். 

கிறித்துவ மதத்தை கொச்சைப்படுத்துகிறேனா? -கவியரசு வைரமுத்து விளக்கம்!
ரெட் ஜெயண்ட் மூவிஸ் சார்பில் உதயநிதி ஸ்டாலின் தயாரித்து, சீனுராமசாமி டைரக்டு செய்துள்ள படம் நீர்ப்பறவை. இப்படத்தின் பாடல்களை கவியரசு வைரமுத்து எழுதியுள்ளார்.



யாழ்ப்பாணத்துக்கு வெளிவிவகார அமைச்சர் ஜி. எல். பீரிஸ் நேற்று விஜயம் செய்த போது, அவர் பயணித்த உலங்கு வானூர்தி விபத்தில் சிக்கியதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
பலாலி விமானத்தளத்திலிருந்து துரையப்பா விளையாட்டரங்கை நோக்கி புறப்படத் தயாரானபோதே இந்த இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.



யாழ்ப்பாணத்தில் பருவமடையாத சிறுமிகள் மீதான பாலியல் துஸ்பிரயோகங்கள் அதிகரித்துக் காணப்படுவதாக யாழ்.பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபர் எரிக் பெரேரா தெரிவித்துள்ளார்.
யாழ்.பொலிஸ் நிலையத்தில் இன்று நடைபெற்ற வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,

மாற்றான்- கே.வி.ஆனந்த் இயக்கியுள்ள மாற்றான் திரைப்படத்தில் சூர்யா ஒட்டிபிறந்த இரட்டையர்களாக நடித்துள்ளார்.
இவர்கள் இருவருக்கும் ஒரே ஜோடியாக காஜல் அகர்வால் நடித்திருக்கின்றார். சூர்யா, காஜல் அகர்வால் என சிலர் மட்டும் தான் நமக்கு நன்கு பரிட்சயமான நடிகர்கள்.
இப்படத்தில் நடித்திருக்கும் மற்றவர்கள் வெளிநாட்டு நடிகர்கள். ஒரு சமூக பிரச்சனையை கையில் எடுத்து, அதில் முடிந்த அளவிற்கு மசாலாவை சேர்த்து பெரிய கமர்ஷியல் படமாக எடுப்பார் இயக்குனர் கே.வி.ஆனந்த்.
ஒட்டிப்பிறந்த இருவர் என்பது தான் மாற்றான் படத்தின் கதைக்களம் என்ற மைண்ட் செட்டில் இருந்தனர் ரசிகர்கள். ஆனால் அதையும் தாண்டி சூர்யாவின் கடும் உழைப்பிற்கு

13 அக்., 2012


தனி ஈழத்தை உருவாக்க இந்தியா அமெ. கூட்டுச் சதி; தேசப்பற்றுள்ள இயக்கம் குற்றச்சாட்டு
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ராஜ மரியாதையுடன் அழைத்துப் பேசும் இந்தியாவுக்கு, தமிழகத்தை சீனா கைப்பற்றும்போது தான் எல்லாமே தெரிய வரும் என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது.
ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியின் கால் இறுதிக்கு முன்னேறிய சுவிட்சர்லாந்து வீரர் ரொஜர் பெடரர் தர வரிசையில் முதல் இடத்தை தக்கவைத்து கொண்டுள்ளார்.
முன்னணி வீரர்கள் பங்கேற்றுள்ள ஷாங்காய் ரோலர்ஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி சீனாவில் நடைபெற்று வருகின்றது.

விரிவுரையாளர்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தற்காலிக போர் நிறுத்தமே தவிர நிலையானதல்ல. எப்போதும் போர் வெடிக்கலாம் என்று பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அரசாங்கம் விடுதலைப் புலிகளுடன் மேற்கண்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தைப் போன்றதொரு நடவடிக்கையே தற்போது பல்கலைக்கழக விரிவுரையாளர்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தற்காலிக போர் நிறுத்தமே தவிர நிலையானதல்ல. எப்போதும் போர் வெடிக்கலாம் என்று

ஜனாதிபதியின் ஆலோசகர் பிள்ளையானின் வீடு பற்றிய விண்ணப்பம் போலியானது! மக்கள் அஞ்ச வேண்டாம் சீ.யோகேஸ்வரன்
தமது கட்சிக்கும் அரசிற்கும் சார்பாக செயற்பட்டவர்கட்கு மாத்திரம் வீடு அமைத்துத் தருவதாக புரளியை  கிளப்பி போலி விண்ணப்பங்கள் விநியோகித்து மக்களை பீதியடைய வைத்த ஜனாதிபதியின் ஆலோசகர் சி.சந்திரகாந்தனின் (பிள்ளையான்) செயற்பாட்டில் எந்தவித உண்மையும் இல்லை என பாராளுமன்ற

கைதடி முதியோர் இல்லத்தில் இணைந்த முல்லைத்தீவு வயோதிபருக்கு காத்திருந்த சந்தோச அதிர்ச்சி!
கைதடி அரச முதியோர் இல்லத்தில் இணைந்து கொண்ட முல்லைத்தீவைச் சேர்ந்த வயோதிபர் ஒருவர் 20 வருடங்களுக்கு மேலாகக் காணாமற் போயிருந்த தனது தாயாரையும் அங்கு கண்டு கட்டித்தழுவிய உணர்வு பூர்வமான சம்பவம் நேற்று முன்தினம் வியாழக்கிழமை கைதடியில் இடம்பெற்றுள்ளது.


கனடாவில் அண்மையில் விபத்துக்குள்ளான பேருந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் வலையமைப்பிற்கு சொந்தமானது என திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த விபத்தில் எட்டு பயணிகள் கயாமடைந்திருந்தனர். கனடாவின் டொரன்டோ நகரில் இந்த பேருந்து குடைசாய்ந்து விபத்துக்குள்ளானது.

இராணுவம் யாழ்ப்பாணத்தில் எங்கும் முகாம் அமைக்கலாம்!- ஈ.பி.டி.பி மேயர் யோகேஸ்வரி பற்குணராஜா
யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினர் எங்கு வேண்டுமானாலும் முகாம் அமைக்க முடியும். அவர்களை யாரும் தடுத்து விட முடியாது. என யாழ்.மாநகர சபை மேயர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளினால் சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம் கண்டுபிடிப்பு
மு்ன்னாள் போராளி ஒருவர் வழங்கிய தகவல்களுக்கு அமைய இந்த விமானத்தை கண்டுபிடிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.1998ம் ஆண்டு விடுதலைப் புலிகளினால் தாக்குதலுக்கு உள்ளான லயன் எயார் விமானத்தின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

விடுதலைப் புலி சந்தேகநபர் ஒருவர் நீதிமன்றத்தில் கழுத்தறுத்து தற்கொலைக்கு முயற்ச
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் இணைந்து செயற்பட்டதாகக் கூறப்படும் சந்தேகநபர் ஒருவர் மொனராகலை மாவட்ட நீதிமன்றில் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வணிகவரித்துறை, சட்டம், நீதித்துறை பொறுப்புகளை வகித்து வந்த அமைச்சர் சி.வி. சண்முகம் தமிழக அமைச்சரவையிலிருந்து நீக்கப்படுவதாக அரசு செய்திக்குறிப்பொன்று கூறுகிறது.

அதே நேரம் சட்டமன்ற அஇஅதிமுக கொறடா ப.மோகன் ஊரக தொழில் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக ஷண்முகம் விழுப்புரம் வடக்கு மாவட்ட அஇஅதிமுக செயலாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுவதாக கட்சியின் பொதுச்செயலாளராகவும் இருக்கும்

ad

ad