-
31 ஆக., 2013
நவநீதம்பிள்ளையின் அறிக்கையில் நான்கு பிரதான விடயங்கள் உள்ளடக்கப்படும்
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை, தனது இலங்கை விஜயத்தின் பின்னர் தயாரிக்க உள்ள அறிக்கையானது, நான்கு பிரதான விடயங்களை உள்ளடக்கியதாக இருக்கும் என்று இராஜதந்திர வட்டாரங்களில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
'எதேச்சாதிகார போக்கில் சிறிலங்கா' அனைத்துலக ஊடகங்களில் தலைப்புச் செய்தி! சிறிலங்காவுக்கு மற்றுமொரு கரும்புள்ளி
பரபரப்பு, பதற்றம், கோபம் என உக்கிர வடிவாக இருக்கிறார் ஜெ. என்கிறார்கள் அவரைச் சுற்றியிருப்பவர்கள். அதற்கு காரணம், பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெறும் சொத்துக்குவிப்பு வழக்கின் அரசு வழக்கறிஞர் பவானிசிங் அதிரடியாக நீக்கப்பட்டதுதான். இந்த வழக்கில் இதற்கு முன் அரசு வழக்கறிஞராக இருந்தவர் ஆச்சார்யா.
சிவில் அமைப்புக்களின் மன்றம் ஒன்றைக் கட்டியெழுப்புவோம்; கபே அமைப்பினால் ஏற்பாடு
"சிவில் அமைப்புக்களின் மன்றம் ஒன்றைக் கட்டியெழுப்புவோம்" என்ற தொனிப்பொருளில் சிவில் சமூகம் ஒன்றை அமைப்பதற்கான அங்குரார்ப்பண நிகழ்வு இன்று காலை 10 மணிக்கு ஞானம்ஸ் ஹோட்டலில் இடம்பெற்றது.
முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களை முறையிட்ட கூட்டமைப்புக்கு பாராட்டு
இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக அரசின் அனுமதியுடன் பெளத்த மத தீவிரவாத அமைப்புகளால் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள தாக்குதல்கள், நடவடிக்கைகள் குறித்து ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேற்று முறையிட்டுள்ளது.
போர்குற்ற விசாரணை நடத்தியே தீரவேண்டும்; நவிப்பிள்ளையிடம் வலியுறுத்தியது தமிழ்க் கூட்டமைப்பு
"இறுதிப்போரின் போது தமிழ் மக்கள் மீது இராணுவத்தினர் இழைத்த போர்க்குற்றங்கள் மற்றும் படைத்தரப்பினர் நடத்திய நடத்திக்கொண்டிருக்கின்ற மனித உரிமை மீறல்கள் குறித்து சுயாதீனமான சர்வதேச விசாரணை நடத்தப்பட்டே ஆக வேண்டும்.''
இலங்கை அரசின் பயங்கரவாதக் குற்றச்சாட்டுகளை விசாரிக்க முனையும் போது கலவரப்படக் கூடாது: மனோ கணேசன்
இலங்கை மீது சுமத்தப்பட்டுள்ள, அரச பயங்கரவாத குற்றச்சாட்டுகள் தொடர்பில் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் விசாரிக்க முனையும் போது, மண்ணெண்ணெயில் விழுந்த சாரைப்பாம்பு போல் இலங்கை அரசாங்கம் கலவரப்படக்கூடாது என மனோ கணேசன் தெரிவித்துள்ளார்
போர்க்குற்றம் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்படலாம்?: ஊடகவியலாளர் சந்திப்பில் நவி.பிள்ளை
போரின் இறுதிக்கட்டத்தின் போது இடம்பெற்றதாக கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் நம்பிக்கையான விசாரணைகளை நடத்த தவறினால் சர்வதேச விசாரணை ஒன்று நடத்தப்படும் வாய்ப்பு இருப்பதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்தார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)