தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு தென்னாபிரிக்கா வருமாறு அழைப்பு
நல்லிணக்க ஆணைக்குழு அமைப்பது தொடர்பாக பேச்சு நடத்த வருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு தென்னாபிரிக்கா அழைப்பு விடுத்துள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
பிந்திய செய்தி இலங்கைக்கு எதிராக இங்கிலாந்து பொருளாதார தடை? இலங்கைக்கு எதிராக பொருளாதார தடைகளை கொண்டு வர இங்கிலாந்து முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடந்த காமன்வெல்த் நாடுகளின் மாநாட்டில் கலந்து கொண்ட இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன், இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக வெளிப்படையான மற்றும் சுதந்திரமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இலங்கைக்கு எதிரான அழுத்தங்களை மேலும் அதிகரிக்கும் வேலையில் இங்கிலாந்து ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. 2014ம் ஆண்டு மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெறும் மனித உரிமை பேரவையின் கூட்டத் தொடரில் இலங்கைக்கு மறக்க முடியாத பாடத்தை கற்றுக்கொடுக்க வேண்டும் என இங்கிலாந்தில் வாழும் இலங்கைத் தமிழர்கள் அந்நாட்டு பிரதமர் கேமரூனிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்த சூழ்நிலையில், வரும் மார்ச் மாதம் இலங்கை அரசு போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக போதுமான விசாரணைகளை நடத்தவில்லை என தெரிவித்து இங்கிலாந்து பொருளாதார தடைவிதிக்கும் திட்டம் இருப்பதாக அரசு வட்டாரங்களை மேற்கோள் காட்டி தகவல்கள் வெளியுள்ளது. இதன் மூலமாக சர்வதேச போர் குற்ற விசாரணைக்கு இலங்கையை உட்படுத்துவதே இங்கிலாந்து மற்றும் மேற்கத்திய நாடுகளின் நோக்கம் எனக் கூறப்படுகிறது.
சிங்களவர்கள் எதிர்ப்பு இதனிடையே, இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொண்ட இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன், இலங்கைக்கு எதிராக அங்கு நடந்து கொண்டமைக்கு அதிருப்தி தெரிவித்து இங்கிலாந்தில் உள்ள இலங்கை அரசின் ஆதரவு அமைப்பான ‘இங்கிலாந்து இலங்கையர் ஒன்றியம்’ என்ற அமைப்பு நேற்று மனு வழங்கியது. அதில், பிரதமர் டேவிட் கேமரூன், புலம்பெயர் புலிகளுக்கு ஆதரவாக வெளியிட்ட கருத்துக்கள் இங்கிலாந்தில் சிங்களவர்கள் மற்றும் புலிகளுக்கு எதிரான தமிழர்களை அவமானப்படுத்தியுள்ளதாக அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
மேலும், இங்கிலாந்தில் வாழும் தமிழ் மற்றும் முஸ்லிம் இருவர் தனித் தனியாக கருத்துக்களை முன்வைத்து இரண்டு கடிதங்களை இணைத்துள்ளதாக தெரிகிறது.
2 டிச., 2013
260 கிலோ கிராம் ஹெரோயின் பிடிப்பட்ட சம்பவத்துடன் பிரதமர் சம்பந்தப்படுவது தொடர்பில் அனுரகுமார திஸாநாயக்க கேள்வி
இலங்கை சுங்க திணைக்கள அதிகாரிகள் அண்மையில் கைப்பற்றப்பட்ட பிரவுண் சுகர் ஹெரோயின் போதைப் பொருள் சம்பவத்துடன், நாட்டின் இரண்டாவது குடிமகனான பிரதமரின் பெயர் சம்பந்தப்படுத்தப்படுவது தொடர்பில் ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் வீடுகள் அரசுடமையாக்கப்படும்!
விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வல்வெட்டித்துறை மற்றும் வன்னியில் உள்ள இரண்டு வீடுகள் உட்பட போர் காரணமாக வெளிநாடுகளுக்கு சென்று அங்கு வசித்து வரும் அதிகளவானவர்களின் சொத்துக்கள் அரசுடமையாக்கப்பட உள்ளதாக தெரியவருகிறது.
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் வீடுகள் அரசுடமையாக்கப்படும்!
விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வல்வெட்டித்துறை மற்றும் வன்னியில் உள்ள இரண்டு வீடுகள் உட்பட போர் காரணமாக வெளிநாடுகளுக்கு சென்று அங்கு வசித்து வரும் அதிகளவானவர்களின் சொத்துக்கள் அரசுடமையாக்கப்பட உள்ளதாக தெரியவருகிறது.
கிளிநொச்சியில் கட்டாய கருத்தடையால் இளம்பெண் ஒருவர் மரணம்
கிளிநொச்சியில் கட்டாய கருத்தடைக்கு உள்ளாக்கப்பட்ட இளம் தாய் ஒருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் நேற்று மரணமானார்
கிளிநொச்சி மலையாளபுரம் பகுதியினை சேர்ந்த இரண்டு குழந்தைகளின் தாயாரான அவர் பலவீனமானவுடல் நிலையில் இருப்பதாகவும் அடுத்த கருத்தரிப்பிற்கான கால அவகாசம் தேவை எனக்கூறியே கட்டாயப்படுத்தி இந்த கர்ப்பத்தடை ஊசி போடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய பிரதமர் மன்மோகன் சிங் யாழ் சென்று முதலமைச்சரை சந்திக்கவுள்ளார்
இந்திய பிரதமர் மன்மோகன் சிங் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்வார் எனவும் அவர் அண்மையில் தெரிவு செய்யப்பட்ட வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரனுடன் பேச்சுவார்த்தைகளை நடத்துவார்
வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் - மன்னார் ஆயர் இராயப்பு சந்திப்பு
வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கும் மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகைக்கும் இடையில் இன்று ஞாயிற்றுக்கிழமை விசேட சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.மன்னார் ஆயர் இல்லத்தில் நடைபெற்றுள்ள இந்தச் சந்திப்பின் போது,
இனப்படுகொலையில் ராஜபக்ச 100 வீத பொறுப்பு என்றால் மன்மோகனுக்கு 50 வீத தார்மீக பொறுப்புண்டு!- இல.கணேசன்
இலங்கை அரசுக்கு எதிராக இந்திய நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற முடியாமல் போனதற்கு பா.ஜனதாதான் காரணம் என இந்திய மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுக்கு அந்த கட்சியின் மூத்த தலைவர் இல.கணேசன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
என் மகன் மேல இருந்த அழுக்குக் கறை போயிடுச்சு! இனியாவது அவனை வாழவிடுங்க!- பேரறிவாளனின் தாய்- விகடன்
1983-ம் வருஷம் ஈழப் பிரச்சினை தமிழ் நாட்டுல தலைதூக்கியது. ஈழத்துல இருக்கும் எல்லா ஈழத் தமிழர்களுக்கும் உதவி செய்யணும்னு தமிழ்நாட்டில் நிறைய பேர் பேசினார்கள். அவர்களுக்காக உதவியும் செய்தாங்க.
தமிழகத்திற்கு சென்றுள்ள புலிகளின் செயற்பாட்டாளரை தேடும் இந்திய அதிகாரிகள்
அமெரிக்காவில் இருந்து தமிழகத்திற்கு சென்றுள்ளதாக கூறப்படும் விடுதலைப் புலிகளின் செயற்பாட்டாளரான கத்தோலிக்க மதகுருவை இந்திய அதிகாரிகள் தேடி வருவதாக கூறப்படுகிறது.
ஜெனிவா மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிரான கூட்டு யோசனை
அடுத்தாண்டு நடைபெறும் ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவின் கூட்டத் தொடரின் போது, இலங்கைக்கு எதிராக கூட்டு யோசனை ஒன்றை கொண்டு வர கனடா, பிரித்தானியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் தீர்மானித்துள்ளன.
பாராளுமன்ற உணவகத்தில் வைத்து சம்பந்தன் மிரட்டியதாக அஸ்வர் எம்பி.குற்றச்சாட்டு
பாராளுமன்ற உணவகத்தில் வைத்து தன்னை மிரட்டும் தொனியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நடந்து கொண்டதாக அரச தரப்பு தேசியப் பட்டியல் எம்.பி. ஏ.எச்.எம்.அஸ்வர் சபாநாயகரிடம் முறையிட்டார்.
தமிழகத்திற்கு சென்றுள்ள புலிகளின் செயற்பாட்டாளரை தேடும் இந்திய அதிகாரிகள்
அமெரிக்காவில் இருந்து தமிழகத்திற்கு சென்றுள்ளதாக கூறப்படும் விடுதலைப் புலிகளின் செயற்பாட்டாளரான கத்தோலிக்க மதகுருவை இந்திய அதிகாரிகள் தேடி வருவதாக கூறப்படுகிறது.
இங்கிலாந்தில் உதைபந்தாட்ட போட்டியில் சூதாட்டம்: 3 வீரர்கள் உட்பட 6 பேர் கைது
சர்வதேச கிரிக்கெட் போட்டியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட சில வீரர்கள் சிக்கினார்கள். சமீபத்தில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட வீரர்கள், தரகர்கள் கைது செய்யப்பட்டது பெரும்
மாவட்ட அபிவிருத்திக் கூட்டத்தில் முதலமைச்சர் பங்கேற்காதது வட மாகாண மக்களுக்கு ஏமாற்றம் தரும் செயல்
மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டங்களுக்கு வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனும் அவரை சார்ந்தவர்களும் கலந்து கொள்ளாதமை வட மாகாண மக்களின் கனவுகளுக்கு மாறான செயலாகு
எமது உள்ளூர் பிரச்சினைகளை நாமே பேசி தீர்த்துக்கொள்வோம்
கூட்டமைப்புக்கு அமைச்சர் பசில் அழைப்பு
எமது உள்ளூர் பிரச்சினைகளை நாங்களே பேசி தீர்த்துக்கொள்வோம். இதற்காக நான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு அழைப்பு விடுக்கின்றேன் என்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
எமது உள்நாட்டு பிரச்சினைகளை எம்மால் மாத்திரமே தீர்த்துக்கொள்ள முடியும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். வரவு - செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான விவாதத்திற்கு
எமது பெண்கள் வலோத்காரப் பாலியல் பாதிப்புக்களுக்குள்ளாக்கப்படுகிறார்கள்! தெரிந்தும் நடவடிக்கை எடுக்க முடியாத நிலை: விக்னேஸ்வரன்
எமது தமிழ்ப் பெண்கள் வலோத்காரப் பாலியல் பாதிப்புக்களுக்கு ஆளாக்கப்படுகின்றார்கள். யாரால் இவை நடக்கின்றன என்று பொலிசாருக்கு தெரிந்தும் நடவடிக்கையை எடுக்க முடியாத நிலையில் இருக்கின்றார்கள் என வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
போலீசார் கண்காணித்த இளம்பெண்ணை மோடி சந்தித்த படங்கள் இணையதளங்களில் வெளியாகி பரபரப்பு
குஜராத்தில் முதல்வர் மோடிக்கு நெருக்கமான அமைச்சர் அமித் ஷா. இவர், போலீஸ் அதிகாரி ஜிங்காலை தொடர்பு கொண்டு இளம்பெண் ஒருவரின் நடவடிக்கைகளை கண்காணிக்க உத்தரவிட்டதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக