புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 நவ., 2013

இங்கிலாந்தில் உதைபந்தாட்ட போட்டியில் சூதாட்டம்: 3 வீரர்கள் உட்பட 6 பேர் கைது


சர்வதேச கிரிக்கெட் போட்டியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட சில வீரர்கள் சிக்கினார்கள். சமீபத்தில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட வீரர்கள், தரகர்கள் கைது செய்யப்பட்டது பெரும்
பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் இங்கிலாந்தில் உதைபந்தாட்ட போட்டியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இங்கிலாந்தில் நடந்த கழகங்களுக்கு இடையேயான லீக் போட்டியில் சூதாட்டம் நடந்து இருப்பதை தேசிய குற்ற தடுப்பு முகவர் கண்டுபிடித்தனர். 3 வீரர்கள் உட்பட 6 பேர் இதில் ஈடுபட்டனர்.
இதில் ஒருவர் முன்னாள் பிரிமீயர் லீக் போட்டி வீரர் ஆவார். இவர் முகவராக செயல்பட்டு உள்ளார். இவர்கள் சிங்கப்பூரை சேர்ந்த புக்கியிடம் ஆட்டம் குறித்து தகவல்களை பரிமாறி கொண்டுள்ளனர். இதற்காக பேரம் பேசப்பட்டது.
இவர்கள் சட்ட விரோதமாக சூதாட்டத்தில் ஈடுபட்டதற்கான ஆதாரம் கிடைத்து உள்ளது. இதனால் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தேசிய குற்ற தடுப்பு முகவர் கூறி உள்ளது.
உதைபந்தாட்ட சங்கம் மற்றும் சூதாட்டம் ஆணைக்குழு ஆகியவற்றுடன் இணைந்து தேசிய குற்ற தடுப்பு முகவர் இந்த சூதாட்டத்தை கண்டுபிடித்து உள்ளது. இது இங்கிலாந்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ad

ad