தினமும் மக்கள் குறைகளை அமைச்சர் ஒருவர் கேட்டறிவார்! சனிக்கிழமை நான் கேட்பேன்! கெஜ்ரிவால் அறிவிப்பு!
டெல்லியில் தினந்தோறும் மக்கள் குறைகளை அமைச்சர் ஒருவர் கேட்டறிவார் என அம்மாநில முதல் அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார். மேலும், சனிக்கிழமைதோறும் பொதுமக்கள் குறைகளை தான் கேட்டறிவதாகவும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.