மாணவி வித்தியா கொலையின் சந்தேகநபரான சுவிஸ் ஆசாமி மற்றும் சட்டத்தரணி ஆகியோரை இன்று நீதிமன்றத்தில் முற்படுத்த முயன்ற சமயத்தில் அங்கு பெரும் களேபரம் ஏற்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் பல்வெறு தரப்பினராலும் பல்வேறு இடங்களின் இன்று புங்குடுதீவு மாணவியின் வன்புணர்வுக்கெதிரான கர்த்தாலுடன் கூடிய ஆர்பாட்டங்கள் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றது. இந்நிலையில் இந்தப்போராட்டங்களில் சில வன்முறைகளாக மாறி வருகின்றது.
புங்குடுதீவு மாணவி கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டதை கண்டிக்கும் வகையில் குடாநாட்டின் அனைத்து அமைப்புக்களும் இணைந்து கண்டன போராட்டத்தில் குதித்துள்ளனர்.
புங்குடுதீவைச் சேர்ந்த உயர்தர மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து வடக்கிலுள்ள அனைத்துப் பாடசாலைகளிலும் நாளை ஒருமணிநேர புறக்கணிப்புப் போராட்டம் நடத்துவதென்று வடக்கு மாகாண கல்வி அமைச்சு முடிவெடுத்துள்ளது.
படுகொலை செய்'யப்பட்ட வித்தியாவின் வழக்கில் மூத்த சட்டத்தரணி கே.வி. தவராஜா ஆஜராகின்றார் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
புங்குடுதீவு மக்களது முற்றுகைக்குள் அகப்பட்டிருக்கும் தமிழரசுக்கட்சி பிரமுகரும் பிரபல அரசியல் ஆய்வாளருமான வி.ரி.தமிழ்மாறனை விடுவிக்க பேச்சுக்கள் தொடர்கின்றன.வடபிராந்திய பொலிஸ்மா அதிபரது வாகனத்தினுள் சிக்குண்டுள்ள அவரை மீட்டெடுக்க கடந்த நாலுமணி நேரமாக பேச்சுக்கள் தொடர்கின்ற போதும் அது வெற்றி பெற்றிருக்கவில்லைஇது தொடர்பினில் மேலும் தெரியவருகையினில் புங்குடுதீவில்
இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற அசம்பாவிதசம்பவம்கள் போல் எதிர்வரும் நாட்களில் இடம்பெறாவண்ணம் நடந்துகொள்ளுமாறு என் பாசத்திற்குரிய தேச உடன்பிறப்புகளை அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன். 1 கடைகளை பூட்டுமாறு கூறி மக்களின் சொத்துக்களிற்கு சேதம் விளைவித்தமை 2 கடை உரிமையாளர்களை தாக்கியமை 3 மருந்தகம்களை பூட்டுமாறு பணித்தமை எமது கிராமத்திற்கும் ,மக்களிற்கும் ,பாடசாலைக்கும் களங்கத்தினை ஏற்படுத்தாதீர்
புங்குடுதீவு மாணவி படுகொலையை எதிர்த்து யாழில் பல்வேறு பகுதிகளிலும் இடம்பெற்ற போராட்டங்களை அடுத்து நகர்ப் பகுதி முழுவதும் விசேட அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நகர்ப் பகுதியில் பரவலாக இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளதால் அச்ச நிலை உருவாகியுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர். ஆயுதங்கள், கலகம் அடக்கும் உபகரணங்களுடன் குறிப்பிட்ட இடைவெளியில் விசேட அதிரடிப்