புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலையுடன் தொடர்புடைய ஒன்பதாவது சந்தேகநபர் இன்று பிற்பகல்
இந்நிலையில், வித்தியாவின் கொலை தொடர்பில் வடமாகாண பொலிஸ் மாஅதிபருடன், சட்டத்தரணி தமிழ்மாறன் குறித்த பகுதிக்கு இன்று காலை மீண்டும் சென்று பிரதேச மக்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார். அவ்வேளையில், சந்தேகநபர் மகாலிங்கம் சிவகுமார் கொழும்பு வெள்ளவத்தையில் உள்ளதாகவும், அவர் சுவிஸ்ஸிற்கு இன்று பிற்பகல் தப்பிச் செல்லவுள்ளதாகவும் பிரதேச மக்களுக்கு கிடைத்த செய்தியினை அடுத்து அவர்கள் சட்டத்தரணியிடம் கேள்வியெழுப்பியதுடன், சந்தேகநபரை ஒப்படைக்குமாறும் கோரினர்.
இதனையடுத்து, இரு தரப்பிற்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டதுடன், வி.ரி.தமிழ்மாறனின் வாகனத்தை முற்றுகையிட்டு பிரதேச மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.