தபால் மூல வாக்களிப்பின் தொகுதி மட்டத்திலான முதலாவது உத்தியோகபூர்வ பெறுபேற்றை நாளை நண்பகல் 12.00 மணிக்கு பின்னர் வெளியிடக்கூடியதாக இருக்கும் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
-
5 ஆக., 2020
மாற்று அணிகள் வாக்கு வங்கியை எங்கே திரட்டுவது ? எது யதார்த்தம் ?எது சாத்தியம் ? தீவகம் ஒரு சாட்சி .
மாற்று அணிகள் என்று புறப்படடவை முன்வைக்கும் கோட்பாடுகள் என்ன ?கூட்டமைப்போடு என்ன முரண்பாடுகள் கண்டு வெளியேறினார்கள் ? நீங்கள் புறப்படட நோக்கம் அதற்கண வேலைத்திட்டங்களை ஒழுங்காக செய்து கொண்டிருக்கிறீர்களா ? ஆம் எனில் அப்போ என் உங்களுக்கான வாக்கு வாங்கி ஒன்றை நிரந்தரமாக கட்டி எழுப்ப முடியவில்லை ? நீங்கள் எடுத்துக்கொண்ட காலம் போதுமானது தானே .யாழ் இடம்பெயர்வுக்கு பின்னர் பெரும்பாண்மை கட்சிகளும் அடிவருடிகளாக இருந்த ஈபிடிபி கட்சியும் எமது மண்ணை ஆக்கிரமித்து தமக்கென எதோ ஒரு வழியில் வாக்கு வங்கியை தக்க வைத்துக்கொண்டன. 1991 க்கு பின்னர் பிறந்த யாழ் மாவடட தமிழன் யாரும் விடுதலை உணர்வோ தனிநாட்டு என்னமோ இல்லாது வளர ஒழுங்காக திடடமிட்டு வளர்த்தெடுத்தான் . அதன் நிமிர்த்தமே அவனுக்கு இப்போதும் வாக்குகள் விழுந்துகொண்டிருக்கின்றன விடுதலைப்புலிகளின் காலத்துக்கு முன்னர் வடக்கில் பெரும்பாண்மை காட்சிகள் ஒரு வேட்ப்பாளரை கூட தேர்தலில் நிறுத்தாது நிறுத்தினாலும் வாக்குகள் கிடைக்காது அந்த உணர்வின் எழுச்சி அத்திவாரத்தை உடைத்து வைத்திருந்தார்கள் இடம்பெயர்வுக்கு பின்னர் இந்த அடிவருடிகள் . பின்வந்த காலத்தில் கூட்ட்டமைப்பினர் உள்ளே நுழையவோ தேர்தலில் பிரசாரம் செய்யவோ பகிரங்கமாக வன்முறை மூலம் தடை போதுதான் உதாரணம் அல்லைப்பிட்டியில் வைத்து கூடட மைப்பினரை தாக்கிய சம்பவம் .ஈபிடிபி தீவகத்தில் தனது முழு அரச சக்தி பலத்தை கொண்டு இது தமது கோடடை என்று சொல்லிக்கொண்டு கைப்பற்றி கோலோச்சி வந்த காலம் அது .யாரும் நம்பமுடியாத அளவுக்கு அந்த அசுரர் கோடடையை வியூகம் அமைத்து உடைத்து மங்காவை செய்த கட்சி கூட்டமைப்பு மட்டுமே . 2013 க்கு பின்னர் எங்கெல்லாம் தனக்கு வாக்கு வங்கியை வேலை வாய்ப்பு வீட்டுத்திடட்டும் வன்முறை என சில சலுகை மாயையை காட்டி உருவாக்கி வைத்திருந்தது அங்கெல்லாம் கூட்ட்டமைப்பு ஈபிடிபி யை விட முன்னணி வெற்றியை பெற்றது .இவ்வாறு தான் வாக்கு வங்கியிற் வளர்ந்திருக்க வேண்டும் மாற்று அணிகள். தீவகத்தில் கடந்த பிரதேச சபை தேர்தலில் கூட எதிரியானவன் எல்லாவித சக்திகளையும் பாவித்து சில பகுதிகளில் வெற்றி கண்டான் . நயினாதீவு அனலைதீவு எழுவைதீவு வேலணை சில பகுதிகள் காவலூர் என இன்னமும் கால் பதித்துள்ளான் மாற்று அணி என மார்தட்டுவோர் உங்களால் என் அந்த பகுதிகளில் நுழைந்து அவனது வாக்கு வங்கியை உடைக்க முடிய வில்லை ,கொள்கை வழியில் உங்கள் எதிரி சிங்களமா கூடடமைப்பா ? ஐ தே க ஸ்ரீ ல சு க மொட்டு அணி ஈபிடிபி என்றெல்லாம் எதனை பிரிவுகளாக எதிரி வாக்கு வங்கியை வைத்திருக்கிறான் உங்களால் அவனது வாக்கு வங்கியிற் கைப்பற்ற போராட முடியவில்லையே கூட்டமைப்பின் வாகு வங்கியை தான் பிரிப்போம் என்று பிரசாரம் செய்கிறீர்கள் . பிரிப்பதோடு எதிரியின் வெற்றிக்கும் காரணகர்த்தாவாக இருக்கிறீறீர்கள் . எதிரியின் வாக்குப்பலத்தை கைப்பற்றி கூட்ட்டமைப்புக்கு சவாலாக சமமாக முன்னேறலாம் . அப்புறம் கூட்ட்டமைப்பும் நீங்களும் தானே கோலோச்சலாம் .தீவகத்தில் ஒரு மாவீரர் நிக்கலவை கூட நடத்தமுடியாமல் இராணுவ கடல் படை ல த்தின் நடுவிலே கூட்ட்டமைப்பும் செண்பகம் அமைப்பும் சந்தித்த சோதனைகளை மக்கள் அறிவார்கள் . கை கட்டி பார்த்துக்கொண்டிருந்தீர்களே சாட்டியில் துயிலுமில்லம் அமைத்து சாதனை படைக்கும்வரை எங்கே இருந்தீர்கள் ஆசனம் வேண்டும் பதவி வேண்டும் பொது மட்டுமா மக்கள் வேண்டும் .முடிந்தால் மிச்சம் இருக்கும் எதிரியின் பலத்தை அடித்து உடையுங்கள் முட்டி மோதி மக்கள் மனதில் இடம் பிடியுங்கள் .இப்போதும் எதிர்க்கு ஆதரவு கொடுப்போரின் மனசில் இடம் பிடியுங்கள் அவர்கள் மனதை மாற்ற முயட்சியுங்கள் மாற்ற முடிந்தால் தான் நீங்கள் மாற்று அணி
4 ஆக., 2020
3 ஆக., 2020
Jaffna Editorவிமர்சிக்கப்படும் கூட்டமைப்பு . விடை காணா வினாக்களா ? எஸ். எஸ். தீவகன்
வினா 5- மாற்று அணியில்லாத காலத்தில் அரச சார்பு ,பெரும்பான்மை சார்பு சக்திகளை முறியடிக்க முடிந்ததா ?
வினா 5- மாற்று அணியில்லாத காலத்தில் அரச சார்பு ,பெரும்பான்மை சார்பு சக்திகளை முறியடிக்க முடிந்ததா ?
விடை 5- வடக்கு இடம்பெயர்வின் பின்னர் டக்லஸ் போன்றோரின் ஆயுத முனை அரசியலில் மக்கள் பயந்து வாய்மூடிகளாக வாக்கு போடுடா காலம் . வேலைவாய்ப்புக்களை வழங்கி தமக்கென ஒரு இளம் ஆயுத கலாசார இளைஞர் அணியை வைத்திருந்த காலம் . தீவகம் போன்ற இடங்களில் தங்கள் கோடடை அசைக்க முடியாது என்று வீரம் பேசிய காலம் .அத்தனையையும் கூட்டமைப்பு எதிர்த்தோடி எல்லா தேத்தல் தொகுதிகளிலும் அவர்களை பின்தள்ளி வெற்றிவாகை சூட்டியுள்ளது டக்ளஸ் வியாஜயகலா போன்றோர் கூட முழு மாவடட வாக்குகளையும் அன்கொன்றும் இன்கொன்றுமாக கூட்டி அல்லி மொத்தாமாக்கி கிடைத்த ஒவ்வொரு உறுப்பினர் தான் . இப்போதைய விகிதாசார டெஹ்ரதல் முறையில் இது சாத்தியம் .ஒவ்வொரு டெஹ்ரதல் தொகுதியிலும் கூட்ட்டமைப்பு முதலிடத்தை அடைந்த நிலை பழைய தேர்தலாக இருந்தால் அத்தனை தொகுதிகளில் வெற்றி அடைந்திருக்கும் இனி அரசியல் சர்வதேச பார்வையில் கூட்ட்டமைப்பு ஒரு மாபெரும் சக்தியாக தமிழரின் ஒரேயொரு அங்கீகரிக்கப்படட கட்சியாக பார்க்கப்பட்ட்து எல்லா ராஜா தந்திரிகளும் பெரும்பான்மை அரசியலவாதிகளுமே கூட்டமைப்புக்கு உயர் அந்தஸ்தையும் முன்னுரிமையையும் கொடுத்து பார்த்த காலம் அது . வெளிநாட்டு பிரதிநிதிகள் ஜனாதிபதியை சந்துக்கும் அதே வேளை கூட்டமைப்பினரையும் சந்தித்தே செல்லவும் நிலை . இனிவரும் காஙக்ளில் கூட்ட்டமைப்பு உடைக்கப்பட்டு மாற்று அணியினரும் ஓரிரு உறுப்பினர்கள் கிடைக்கபெற்றிந்தால் ஏகோபித்த தமிழரின் அணி எதுவென்று கணிப்பார்கள் .யாரோடு பேசுவது இவரை பார்ப்பது . ஆக தலைவர் மன்னித்து மறந்து எல்லா காட்சிகளையும் ஒன்றாக்கி வாய்த்த நோக்கம் மீண்டும் பல கட்சிகளாகி அதே வருடத்த்க்கு பின்னோக்கி சென்று நிக்கப்போவதே உண்மை
விமர்சிக்கப்படும் கூட்டமைப்பு . விடை காணா வினாக்களா ? எஸ். எஸ். தீவகன்
வினா 4- நல்லாட்சி அரசில் கூட்டமைப்பு பெற்ற பலன்கள் என்ன ?
வினா 4- நல்லாட்சி அரசில் கூட்டமைப்பு பெற்ற பலன்கள் என்ன ?
விடை 4- நல்லாட்சி அரசு காலத்தில் கூட்டமைப்பு விரும்பி இருந்தால் அரசோடு இணைந்து அமைச்சு பதவிகளை பெற்று டக்ளசின் பாணியில் மக்களிடம் வாகு வங்கியை சேர்க்கும் நோக்கில் வேலைவாய்ப்பு அபிவிருத்தி என்று தாராளமாக செய்திருக்கலாம் .ஆனால் அமைச்சு பதவிகளை பெற்றால் அரசோடு இணைத்ததுக்கு சமம் . அவர்களோடு நறுக்க பேரம் பேசவோ தீர்வுதிடடம் பற்றி உயர்தர கேள்விகளை முன்வைக்கவோ முடியாது .இதனால் எந்தவொரு வேளையிலும் தீர்வு கோரி வாதாடுவதில் பின்னிக்கவில்லை . மாறாக அபிவிருத்தி நடவடிக்களுக்கும் தாராளமயமானா நிதி ஒதுக்கீடுகளை பெற்றார்கள் . பாராளுமன்ற உறுப்பினர் நிதி கம்பெரேலியா நிதி என கிடைக்கப்பெற்று சிலவருட காலத்திலேயே வீதிகள் மின்விளக்கு பொருத்துதல் சனசமூக நிலைய உதவிகள் வாவாதார நிதியுதவிகள் என கிராமங்கள் தோறும் செய்துள்ளது கூட்ட்டமைப்பு .இவற்றைக்கூட டக்ளஸ் எய்தார் அங்கஜன் செய்தார் என்று போய் பிரசாரங்களை முன்னெடுத்து வருவது கவனத்துக்குரியது . பல அரசியல் கைதிகள் விடுதலை இராணுவ முகாம்கள் மூடல் கிராமங்கள் விடுபட்டால் என்பவனும் ஏராளமாக நடைபெற்றுள்ளன பலவருட காலமாக அடிவருடிகள் காலத்தில் செய்யமுடியாத அளவுக்கு நிறையவே செய்துள்ளது காணக்கூடியதாக உள்ளது .ஒவ்வொரு கிராமமும் 5 வருடனாளின் முன்பிருந்த நிலையை இப்போது ஒப்பிட்டு பார்த்தல் புரியும்
2 ஆக., 2020
விமர்சிக்கப்படும் கூட்டமைப்பு . விடை காணா வினாக்களா ? எஸ். எஸ். தீவகன்
வினா 2-சுமந்திரன் இப்போதைய ஸ்ரீதரன் போன்ற விடுதலை போன்ற எதிர்ப்பாளர்களை ஏன் வைத்துள்ளீர்கள் ?
வினா 2-சுமந்திரன் இப்போதைய ஸ்ரீதரன் போன்ற விடுதலை போன்ற எதிர்ப்பாளர்களை ஏன் வைத்துள்ளீர்கள் ?
விடை 2- சுமந்திரன் ஆரம்பத்தில் நல்ல சடடவலராகவும் மும்மொழி திறன் கொண்டவராகவும் கட்சியில் நுழைந்தார் . அவருக்கு தேசியப்பட்டியல் நியமனம் வழங்கப்பட்டு உலாவங்கப்படார் .அப்புறம் அடுத்த தேர்தலில் அவரை மக்கள் முன் சென்று வேறுதான் வரவேண்டும் என தேர்தலில் பங்கு பற்றி மக்கள் தான் அவரை தெரிவு செய்தனர் .பின் வந்த காலங்களில் புலிகள் எதிர்ப்பு ஒவ்வாமை கருத்தியலை பகிரங்கமாக பல இடங்களில் வெளிப்படுத்தினார் சிலவேளை மழுப்பல் பதில்களையும் வாரி வழங்கினார் ஆனாலும் இனிவரும் காலங்களில் இவரால் கட்சிக்கு ஆபத்தான கட்டிடம் என்பதால் கட்சிக்குள்ளேயே விமர்சனங்கள் பகிரங்கமாக முன்வைக்கப்பட்டு மக்கள் முன் விளக்கம் கோரப்படுகின்ற து இது கட்சிக்குள் உள்ளே உள்ள ஜனநாயக மரபு இப்போது மக்கள் முன் நிறுத்தி வைக்கப்பட்டுளார் மக்கள் அவரை நிராகரிக்கவேண்டும் அடுத்து ஸ்ரீதரன் .எல்லோரும் கட்சிக்குள்ளே வரும்போது நல்ல பிள்ளைகளாக தான் வருவார்கள் கட்சி செல்வாக்கு கட்சி வாக்கு வாங்கி என வளர்ந்து முகவரி தேடிக்கொண்ட பின்னர் தான் சுரூப வெளிவரும் அப்படி தான் ஐவரும் இவருக்கென்று பெரிய வாக்கு வங்கியை உருவாக்கிய இறுமாப்ப்பில் சுமந்திரனோடு அணி சென்ற்து புலி எதிர்ப்பு பக்கமாக நடிக்கிறார் .இவருக்கும் மக்கள் பதில் சொல்வார்கள். இவர் வெற்றி பெற்றாலும் 75 கள்ள வாகு பிரச்சினை சனியனாகா மாறும் அதனை விட இவரது ஒழுக்கற்றல் சம்பந்தமாக மாவை நடவடிக்கை எடுப்பதாக வேறு கூறியுள்ளார் யாழ் கிளி மாவட்த்தில் 10 வேட்ப்பாளர் கூட்ட்டமைப்பில் உள்ளனர் மக்கள் சுமந்தினையும் ஸ்ரீதரனையும் தெரிவு செய்யாமல் விடலாம் தானே இது மக்களின் கவனத்துக்கு
விமர்சிக்கப்படும் கூட்டமைப்பு . விடை காணா வினாக்களா ? எஸ். எஸ். தீவகன்
வினா 1.நல்லாட்சி அரசில் என்ன கிழித்தீர்கள் ?
விடை .பலமாக இருந்த புலிகளின் காலத்திலேயே பேச்சுவார்த்தை உலக நாடுகளின் மத்தியஸ்தம் என்று சென்றும் வருடங்களை இழுத்தடித்து தீர்வு கொடுக்காத ஸ்ரீலங்கா புலிகளின் மௌனிப்புக்கு பின்னர் பலவீனமான நிலையில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எளிதில் ஏதும் கொடுக்கவா போகிறார்கள் அதுவும் சில வருடங்களில் . ஒரு அரசு சொற்ப பலத்துடன் இருக்கும்போது தான் பேரம் பேசி இணங்க வைக்க கூடிய காலமாகும் அதனையே விட ஸ்ரீலங்கா வரலாற்றிலேயே இரண்டு பெரிய பெரும்பான்மை கட்சிகளும் இணைத்து ஆட்சி செய்த ஒரே காலம் அந்த காலத்தில் தான் ஏதும் ஒரு தீர்வு கிடைக்குமானால் கிழித்தெறியப்படாத ஒப்பந்தமாகும் நம்பியே கூட்டமைப்பு இணைக்க நிலையை எடுத்தது . சிலர் கூறுவது போல கேட்ட்து தாராவிடடாள் ராஜினாமா செய்யலாமா ? செய்தால் என்ன நடக்கும் பாராளுமன்றில் மகிந்த தரப்பு நல்லாட்சியை கவிழ்க்கும் . அதாவது கூட்டமைப்பு இல்லாவிடின் பெரும்பான்மை கிடைக்கும் கூட்டமைப்பு வைக்கலாவிடினும் இதே நிலைமை தான் உதாரணம் வேலணை பிரதேச சபை தவிசாளர் டேகிர்வில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினை ர் செந்தூரன் வேண்டுமென்றே வாக்கெடுப்பு முடிந்த பின் வந்து மறைமுகமாக ஈபிடிபிக்கு உதவியது போல .ஆக எடுத்தேன் கவிழ்த்தேன் என்று உள்ள உறுப்பினர் பலமும் போய் நல்லாட்சியும் கவிழ்ந்து 1-2 வருடங்களின் முன்னேயே குழப்பநிலை வந்து எமக்கு என்ன பலன் .
அதே தீர்வு கோரிக்கையோடு கம்பெரேலியா பாராளுமன்ற உறுப்பினருக்கான நிதி என்பவதரியும் பயன்படுத்தி போருக்கு பின்னர் அழிந்து போயுள்ள எமது நிலத்தை ஓரளவாது நிவர்த்தி செய்து மக்களை மூச்சுவிட செய்ய முடிந்தது அல்லவா ஈபிடிபி போன்றோரின் கட்டுப்பாட்டில் பலவருடங்களாக கிடைக்காத அபிவிருத்தி சிலவருடங்களில் கிடைத்துள்ளதை சீர்தூக்கிப்பார்க்கலாம் இப்போது கூக்குரலிடும் மாற்று அணிகள் இரண்டும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களை கொண்டவர்கள் தான் அவர்களும் அங்கெ சென்று எதனை செய்தார்கள் அவர்களின் காலத்தில் என்றும் கேட்கலாம் மக்களே சரி இந்த தடவை வெற்றி பெற்று போனாலும் அடுத்த மாதங்களிலேயே அதுவும் கோத்தாவின் ஆட்ச்சியில் தீர்வு கொண்டு வருவார்களா ? அல்லது சமஸடி எடுப்பார்களா ?அல்லது உடனேயே ராஜினாமா செய்வார்களா ? ஒற்றையாட்சி சடடதுக்கு கீழே தான் சாத்தியப்பிரமணமே எடுக்க வேண்டும் மறந்து விடாதீர்கள் 22.14.16 என்று போனபோதே அப்போதைய அரசுகளே கொடுக்காத தேர்வினை கோத்த என்னும் கடும்புக்குவாதி கொடுப்பாரென்று நம்புவீர்களா ?
சைக்கிள் கட்சியின் புலிவேசம் எப்போது கலையும்
தேர்தலில் டக்ளஸ் விஜயகலா அங்கஜன் தோல்வி காணலாம் .தமிழ் தேசியக்கட்சிகளுள்ளேயே 7 ஆசனங்களும் பங்கிடப்படலாம் எளிமைக்கு மாவை வரலாறு அனுபவம் நீண்டநாள் கட்சி பனி தலைமைக்கு மாவை கோடை ஊடகப்பிரசாரம் சரவணபவன் மகளிர் கணவனின் அனுதாபம் சசிகலா கிளிநொச்சி தனிமை சரியாருக்கு
நாடாளுமன்றத் தேர்தலில் இம்முறை யாழ் மாவட்டத்தில் ஈபிடிபி செயலாளர் டக்ளஸ் தேவானந்தா, ஐக்கிய தேசியக் கட்சியின் விஜயகலா மகேஸ்வரன், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அங்கஜன் ஆகியோர் ஆசனங்களைப் பெறுவார்களா என்பது சந்தேகமே.தேர்தலில் நிறைய சுயேச்சை குழுக்களும் தேசியக்கட்சிகளும் ஐ தே க இரண்டு அணிகளாகவும் போட்டி இடுகின்றன ,இதனால் இந்த காட்சிகள் அல்லது சுயேச்சைகள் பெரும் வாக்குகள் மொத செல்லுபடியான வாக்குகளில் 5 வீதத்துக்கு குறைவாக இருந்தால் அந்த வாக்குகள் கழிக்கப்படும் மீதி மொத்த வாக்குகளில் 6 ஆசனகளுக்கக்கா ஆரால் வகுக்கப்படும் வாக்குகளின் எண்ணிக்கையில் ஆசனகள் கட்சிகளுக்கு பங் கீடாகும் விஜயகாலவின் 20 ஆயிரம் வாக்கு வாங்கி இரண்டாக உடையும் தொலைபேசிக்ககா பிரியும் . அங்கஜன் அணியும் டக்ளஸ் அணியும் ஒரே கோத்தாவின் அணி என்பதால் அவர்களுக்குள்ளேயே இழுபறி வாக்கு வங்கி சிதறும் . கூடுதல் வாக்குகöலாய் கூட்ட்டமைப்பே பெயரம் கணிப்பு இருப்பதால் கூட்டமைப்புக்கு ஒரு போனஸ் ஆசனம் எடுத்து வைக்கப்படும் மீதம் ஆறில் கூட்டமைப்பு 3 ம் சைக்கிள் மீன் அணிகள் தலா ஒவ்வொன்ருமாக பங்கு போட்டுக் கொள்ளலாம் முக்கியமாக கூடடைப்புக்கு அடுத்து இரண்டாம் மூன்றாம் இடங்களை சொற்ப வாக்கு வித்தியாசத்திலாவது அடையும் கட்சிக்கே 6 , 7 ஆம் ஆசனங்கள் கிடைக்கும் உதாரணமாக சைக்கிள் 20000 வீணை 19600 மீன் 19200 மொட்டு 19100 யானை 18 900 -சைக்கிளும் வீணையும் ஒவ்வொன்று மற்றவைக்கு இல்லை அதே போல் சற்று மாறி சைக்கிள் 20000 மீன் 19800 வீணை 19300 என்றால் டக்ளஸ் தோல்வி
இனி கூட்ட்டமைப்பை பொறுத்தவரை சுமந்திரன் தோல்வி நிச்சயமாகி விட்ட்து ஸ்ரீதரனின் வாக்கு வாங்கி அவரது வாய்கொழுப்பாலும் சுமந்திரன் இணைப்பு கொளகையாலும் சந்திரகுமாரின் பிரிப்பாலும் சரிவு காணப்படும் இருந்தாலும் தட்டி தடுமாறி வெல்லலாம் சசிகலா விருப்பு வாக்கில் முன்னேறினால் ஸ்ரீதரனுக்கு சரிவு நிச்சயம் .மாவை சித்தர் சரவணபவன் நான்காம் இடம் ஸ்ரீதரன் அல்லது சசிகலா இது ஒரு கட்டிடம் அல்லது மாவை சித்தர் ஸ்ரீதரன் நான்காம் இடம் சரவணபவன் அல்லது சசிகலா என்ற நிலை உருவாகும் கஜதீபனுக்கும் கணிசமான வாக்கு வாங்கி கிடைக்கும் இருந்தாலும் சித்தரின் வங்கியை உடைத்தால் சித்தருக்கும் நட்டம்
விஜயகலா மகேஸ்வரன் தோல்வியடைந்து டக்ளஸ், அங்கஜன் ஆகியோர் ஆசனங்களைப் பெறக் கூடிய வாய்ப்புகள் இருப்பதாகக் கருதினாலும், கடந்த 2015ஆம் ஆண்டு தேர்தல் முடிவுகளோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது இது சாத்தியமற்றதே.
கோட்டாபய ஜனாதிபதியாக இருப்பதால் சலுகை, நிவாரண அரசியலுக்குப் பழக்கப்பட்ட வாக்காளர்கள் கூட, இம்முறை அங்கஜன், டக்ளஸ் ஆகியோருக்கு வாக்களிப்பர் என்று கூற இயலாது. விஜயகலா மகேஸ்வரனுக்கு வாக்களிப்பர் என்று சொல்லவும் முடியாது.
டக்ளஸ் தேவானந்தாவோடு செயற்பட்ட சந்திரகுமார் சுயேட்சையாகப் போட்டியிடுவது. ஈபிடிபிக்குப் பெரும் சவாலாகும். தமிழரசுக் கட்சியைத் தவிர்த்து சிறிதரனின் தனிப்பட்ட வாக்குச் சரிவுக்கும் இது காரணமாக அமையலாம்.
ஆகவே தமிழரசுக் கட்சி, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி ஆகிய மூன்று கட்சிகளுமே இம்முறை ஆசனங்களைப் பங்கிட்டுக்கொள்ள முடியும். முதற் சுற்று ஆசனப் பங்கிட்டில் தமிழரசுக் கட்சிக்கே ஆசனங்களும் போனஸ் ஆசனமும் கிடைக்கலாம்.
2015ஆம் ஆண்டுத் தேர்தலில் ஆசனம் ஒன்றைப் பெறுவதற்கு ஒருவர் 48ஆயிரத்து முந்நூற்றி 60 வாக்குகளைப் பெற வேண்டிய நிலை இருந்தது. இதனால் இரண்டு இலட்சத்து ஏழாயிரத்து ஐநூற்றி ஏழு வாக்குகளைப் பெற்ற தமிழரசுக் கட்சி, முதல் சுற்று ஆசனப் பங்கீட்டில் நான்கு ஆசனங்களைப் பெற்றது. 14ஆயிரத்து 137வாக்குகள் எஞ்சியிருந்தன.
இரண்டாம் சுற்று ஆசனப் பங்கீட்டில் 30ஆயிரத்து 232 வாக்குகளைப் பெற்ற டக்ளஸ் தேவானந்தாவும், 20ஆயிரத்து 25வாக்குகளைப் பெற்றிருந்த விஜயகலா மகேஸ்வரனும் ஒவ்வொரு ஆசனங்களைப் பெற்றிருந்தனர்.
17ஆயிரத்து 309 வாக்குகளைப் பெற்றிருந்த அங்கஜன், 15ஆயிரத்து 22 வாக்குகளைப் பெற்றிருந்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆசனங்களைப் பெறமுடியவில்லை.
கூடுதல் வாக்குகளைப் பெற்ற தமிழரசுக் கட்சி மேலதிகமாக ஒரு போனஸ் ஆசனத்தையும் பெற்று ஐந்து ஆசனங்களைத் தனதாக்கிக் கொண்டது.
2015ஆம் ஆண்டு அங்கஜன் தோல்வியடைந்தாலும், தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினராகிப் பிரதியமைச்சராகப் பதவி வகித்திருந்தபோது, தனது அமைச்சின் மூலமாகக் குறைந்த பட்சம் உதவிகளைச் செய்திருக்கிறார்.
இதனால் இம்முறை தேர்தலில் அங்கஜன் நம்பிக்கையோடு போட்டியிட்டுப் பிரச்சாரம் செய்கிறார். ராஜபக்ச அரசாங்கத்துக்கு ஆதரவு என்பதில் இருந்து விலகித் தன்னைத் தனித்துவமாகவும் காண்பிக்கிறார் அங்கஜன்.
டக்ளஸ் தேவானந்தா, விஜயகலா மகேஸ்வரன் ஆகியோரின் வாக்கு வங்கிகளையே இலக்குவைத்தும் அங்கஜன் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார்.
இதனால் டக்ளஸ். விஜயகலா ஆகியோரின் வாக்குகள் இம்முறை சிதைவடையப் போகின்றன. ஏனெனில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி ஆகியவற்றின் வாக்குகளை அங்கஜனால் உடைத்தெடுப்பது கடினமானது.
நிவாரணம், சலுகை அரசியலுக்குப் பழக்கப்பட்ட மக்களே டக்ளஸ் தேவானந்தா, விஜயகலா ஆகிய இருவருக்கும் வாக்களிப்பது வழமை. ஆனால் இம்முறை அங்கஜன் அந்த வாக்குகளைப் பெறும் நோக்கில், இவர்கள் இருவரையும் விட மேலதிகமாக ஏதோ புதிய வடிவம் ஒன்றை அமைத்துள்ளார்.
அத்துடன் அங்கஜனுடைய இளமைத்துடிப்பினால் கவர்ச்சியடைந்த இளம் ஆதரவாளர்களும் இம்முறை அவருக்கு வாக்களிக்கக் கூடும். ஆகவே அவ்வாறு வாக்களிக்கும்போது ஏற்படும் வாக்குச் சிதைவுகளினால் குறித்த முன்று பேருமே இம்முறை ஆசனங்களைப் பெற முடியாமல் போகலாம்.
இதற்குச் சந்திரகுமாரும் விதிவிலக்கல்ல.
அப்படி இல்லையேல் விஜயகலா மகேஸ்வரன் மாத்திரம் தோல்வியடைந்து டக்ளஸ் அல்லது சந்திரகுமார் ஆகிய இருவரில் ஒருவரும் அங்கஜனும் இரண்டாம் சுற்று ஆசனப் பங்கீட்டில் தெரிவாகலாம்.
அவ்வாறு இருவர் தெரிவாகும் நிலை ஏற்பட்டால், அது தமிழரசுக் கட்சியின் பாரம்பரிய வாக்குகளில் ஏற்பட்ட சரிவாகவே கருதமுடியும். ஏனெனில் தமிழரசுக் கட்சி, கடந்த அரசாங்கத்துடன் சேர்ந்து இயங்கியதால் ஏற்பட்ட விளைவாகவே அதனைக் கருத வேண்டும்.
தமிழரசுக் கட்சியின் அரசாங்கச் சார்புக் கொள்கைகளை (இணக்க அரசியல்) சாதகமாகப் பயன்படுத்தியே, அதாவது அரசாங்கத்துடன் தமிழரசுக் கட்சி இணைந்து செயற்பட்டிருந்தாலும், அவர்கள் உங்கள் பிரதேசங்களில் அபிவிருத்தி செய்யவில்லை என்று குற்றம் சுமத்தியே அங்கஜன் பிரச்சாரம் செய்கிறார். டக்ளஸ். சந்திரகுமார் ஆகியோரும் அவ்வாறுதான் பிரச்சாரம் செய்கின்றனர்.
இவ்வாறான பிரச்சாரங்களை தமிழரசுக் கட்சி ஆதரவாளர்களில் குறிப்பிடக்கூடிய பலர் நம்புகின்றனர். ஆனாலும் டக்ளஸ் சந்திரகுமார் ஆகிய இருவரையும்விட, கவர்ச்சிகரமான தோற்றத்தோடு உலா வரும் அங்கஜனுக்கே அந்தப் பிரச்சாரங்களை நம்பும் தமிழரசுக் கட்சி ஆதரவாளர்களும் வேலை வாய்ப்புகள் கிடைக்குமென நம்பியிருக்கும் சிலரும் வாக்களிக்கும் கள நிலைமை காணப்படுகின்றது.
தமிழரசுக் கட்சியின் அரசாங்கச் சார்புக் கொள்கையினால் அதிருப்தியடைந்த ஏனைய ஆதரவாளர்கள் பலர், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணிக்கும் வாக்களிப்பர். மேலும் சிலர் வாக்களிக்கச் செல்வதைத் தவிர்த்துக் கொள்வர்.
இம்முறை அனேகமான இளம் வாக்காளர்கள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கே வாக்களிக்கும் கள நிலையும் உண்டு.
2018ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வடக்குக் கிழக்கில் சுமார் ஒரு இலட்சம் வாக்குகளையும் யாழ்ப்பாணத்தில் 63ஆயிரம் வாக்குகளையும் பெற்ற தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, இம்முறை தமிழரசுக் கட்சி மீதான அதிருப்தி வாக்குகளைத் தமக்குச் சாதகமாக்க முடியுமெனப் பலமாக நம்புகின்றது.
2018ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வடக்குக் கிழக்கில் மொத்தமாக 82 ஆசனங்களை சுரேஸ் பிரேமச்சந்திரன் அணியும் பெற்றுள்ளது. இதனால் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியும் அவ்வாறு எதிர்பார்க்கிறது.
இதனாலேயே முதற் சுற்று ஆசனப் பங்கீட்டில் தெரிவாகும் தமிழரசுக் கட்சி கூடுதல் ஆசனங்களைப் பெறமுடியாத நிலை உருவாகும். யாழ் மாவட்டத்தில் மொத்த வாக்களிப்பு வீதம் குறைவடைந்தால், தமிழரசுக் கட்சியின் நிலை மேலும் சிக்கலாகும்.
காரணம், அதிருப்தியால் வாக்களிப்பைத் தவிர்ப்போர், தமிழரசுக் கட்சி ஆதரவாளர்களாகவே இருப்பர். இதனால் 2015ஆம் ஆண்டைப் போன்று ஐந்து ஆசனங்களை தமிழரசுக் கட்சியால் இம்முறை பெறமுடியாது
31 ஜூலை, 2020
தேசியம் ,ஒரு தேசம், இரு நாடுகள், தனிநாடு ,தமிழீழம் என்றெல்லாம் உணர்ச்சி அரசியல் செய்து கொண்டு பாராளுமன்ற பதவிக்காக அலையும் வேட்பாளர்களே .நீங்கள் வெற்றி பெற்றால் ஒற்றையாட்சி சடட விதிகளுக்கு கீழே அவற்றை ஏற்றுக்கொண்டு சத்தியப்பிரமாணம் எடுக்க தான் போகின் றீர்கள் முடிந்தால் சத்தியப்பிரமாணம் செய்ய மேடன் என்று பதவி பறிபோக விட்டுவிட்டு வீட்டுக்கு திரும்பி வருவீர்களா ? வீரமணி கட்சி போல பெரியார் வழியிலேயே தேர்தலில் போட்டி போடாமல் வாழ்க்கையை ஓட்டிட முடியுமா ?
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்கள் கடன்வாங்கப்பட்டவர்கள் அல்லர் – இரா.சாணக்கியன்
Jaffna Editor
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்கள் கடன்வாங்கப்பட்டவர்கள் அல்லர் என கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
இது கூட்டமைப்பு - உட்கட்சி ஜனநாயகம் .கட்சிக்குள்ளேயே யாரும் யாரையும் விமர்சிக்கலாம் . யாரும் சுயமாக வெளியேறலாம் . வெளியேறியவர்கள் பாராளுமன்ற பிரதேச சபை மாநகரசபை மாகாண சபை உறுப்பினராக இருந்தால் கூட உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படமாடடாது கால அவகாசம் மீண்டும் இணையலாம் பெரிய பதவியை அலங்கரித்தால் கட்சியை உறுப்பினர்களை என் தலைமையையே விமர்சிக்கலாம் உதாரணம் வியாழேந்திரன் , விக்கினேஸ்வரன் .வளர்த்த கடாக்களே நெனசில் மிதிக்கலாம் . பற்றைக்குள் கிடந்தாலும் தூக்கி மெத்தையில் வளர்க்கலாம் விரும்பினால் பற்றைக்குள் ஓடலாம் (விக்கி ). முகவரி இல்லாதவர்கள் இங்கே வந்து முகவரி தேடிக்கொண்டு வெளியேறலாம் . முகவரி கொங்சம் கிடைத்ததும் பெரிய பதவிக்காக ஆசைப்பட்டு துரோகம் செய்யலாம் (அனந்தி ). மாற்றுக்கூடடணி அமைக்கலாம் கட்சிக்குள் இருந்து கொண்டே இத்தனையும் செய்யலாம்(விக்கி ) . கூட்டமைப்பு முகவரி பெற்ற பின் தான் வெளியேறினால் தான் அரசியல் செய்யலாம் தாங்களாகவே அடிமடட தொண்டனாக இருந்து கட்சி ஆரம்பிக்க தேவையில்லை சொந்தக்காசை செலவழிக்காது பிழைத்துக்கொள்ளலாம் ( ஸ்ரீகாந்தா , சிவாஜி,கஜேந்திரன் கஜன் ,பிரேம் )
30 ஜூலை, 2020
சுவிஸின் காவல்துறையில் புதிதாக ஒரு ஈழத்து தமிழன்.மண்ணுக்கு பெருமை சேர்த்த இளவலை வாழ்த்துவோம்
புலம்பெயர் நாடுகளில் எல்லாம் தமிழன் பல சாதனைகளை படைத்துவருகின்றான் . ஈழத்து தமிழன் எடடாத துறைகள் இல்லைகிடடாத பதவிகள் இல்லை . புலம்பெயர் நாடுகளில் சுவிட்சர்லாந்தில் அண்மைக்காலங்களில் எமது பரம்பரை இளவல்கள் அதியுன்னத தொட்டு வருகின்றனர் .இந்த வகையில் சுவிஸின் பாதுகாப்பு , நம்பிக்கை , ரகசியம் பேணல் ,,தூய்மை , துணிச்சல் ,உறுதி ,தேசியப்பற்று என தொட்டு நிற்கும் துறை காவலர் பதவி .25 வயதிலேயே பாசல் மாநகரில் வாழ்ந்து வந்த சுப்பிரமணியம் புதல்வன் நிலவன் இப்போது அந்த உன்னதத்தை அடைந்து சாதித்திருக்கிறான் . ஈழத்தில் புங்குடுதீவை சேர்ந்த இவரது பெற்றோர் சுவிஸில் 30 வருடங்களுக்கு மேலாக வாழ்ந்து வருகின்றார்கள் . இவர்களும் தாயகத்துக்கு பல்வேறு வழிகளிலும் பங்களிப்பு செய்து வருவோர் என்பதும் குறிப்பிடத்தக்கது . நிலவன் அவர்கள் இந்த உன்னத துறையில் மென்மேலும் சிறந்திட வாழ்த்துகிறோம்
அங்கஜன் அணி புங்குடுதீவில் காசுக்கத்தைகளை தானம் செய்து வாக்கு வேடடை -உள்ளூரில் வேலை கிடைக்கும் என்ற நப்பாசையில் துணை போகும் பெண்கள் நேற்றுமுன்தினம் புங்குடுதீவினுள் நுழைந்த முள்ளிவாய்க்காலில் தமிழ் இனத்தையே கொன்றொழித்த கோத்தாவின் அங்கஜன் அணி மடத்துவெளி ஊரதீவு பகுதிகளில் வீதியெங்கும் நின்றோரை அழைத்து பண்னடுக்க்களை ஆயிரக்கணக்கில் கொடுத்து தமக்கு வாக்களிக்குமாறு பகிரங்கமாக பிரசாரம் செய்தனர் கூப்பிடு தூரத்தில் கடல் படை முகாம்கள் இரண்டு(மடத்துதுறை .மடத்துவெளி )< இருந்தும் இந்த சடடைவிதிமீறல்களை செய்த அங்கஜன் அணிக்கு உள்ளூரில் வேலை கிடைக்கும் என்ற நப்பாசையில் துணை போகும் பெண்கள் சிலரும் இந்த செயலுக்கு துணைபோன துரோகம் கண்டு மக்கள் வெட்கித்தனர் மக்களே முள்ளிவாய்க்கால் 2009 இல் நீங்கள் பட துயரங்கள் அழிவுகளை மறந்திருக்க மாடதீர்கள் இந்த பாதக செயலை செய்த கொடூரப்பிறவிகளுக்கு துணை போகும் இந்த பெண்களை பகிஸ்கரியுங்கள் முகத்தில் காரி துப்புங்கள்
அங்கஜன் அணி புங்குடுதீவில் காசுக்கத்தைகளை தானம் செய்து வாக்கு வேடடை -உள்ளூரில் வேலை கிடைக்கும் என்ற நப்பாசையில் துணை போகும் பெண்கள்
நேற்றுமுன்தினம் புங்குடுதீவினுள் நுழைந்த முள்ளிவாய்க்காலில் தமிழ் இனத்தையே கொன்றொழித்த கோத்தாவின் அங்கஜன் அணி மடத்துவெளி ஊரதீவு பகுதிகளில் வீதியெங்கும் நின்றோரை அழைத்து பண்னடுக்க்களை ஆயிரக்கணக்கில் கொடுத்து தமக்கு வாக்களிக்குமாறு பகிரங்கமாக பிரசாரம் செய்தனர் கூப்பிடு தூரத்தில் கடல் படை முகாம்கள் இரண்டு(மடத்துதுறை .மடத்துவெளி )< இருந்தும் இந்த சடடைவிதிமீறல்களை செய்த அங்கஜன் அணிக்கு உள்ளூரில் வேலை கிடைக்கும் என்ற நப்பாசையில் துணை போகும் பெண்கள் சிலரும் இந்த செயலுக்கு துணைபோன துரோகம் கண்டு மக்கள் வெட்கித்தனர் மக்களே முள்ளிவாய்க்கால் 2009 இல் நீங்கள் பட துயரங்கள் அழிவுகளை மறந்திருக்க மாடதீர்கள் இந்த பாதக செயலை செய்த கொடூரப்பிறவிகளுக்கு துணை போகும் இந்த பெண்களை பகிஸ்கரியுங்கள் முகத்தில் காரி துப்புங்கள்
தமிழர் பிரதிநிதித்துவத்தை அம்பாறையில் இல்லாமலாக்குவதே கருணாவின் நோக்கம்! ஜனநாயகப் போராளி துளசி காட்டம்
Jaffna Editor
அம்பாறை மாவட்டத்தில் தமிழர்களின் வாக்குகளை பிரித்து அங்கு தமிழர் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்துவிட்டு அதாவுல்லாவை கொண்டு வருவதே கருணா அம்மானின் வேலைத்திட்டம் என ஜனநாயகப்
கோட்டாவை எதிர்க்கத் திராணியற்ற கோழைகளுக்காக உங்கள் வாக்கு? -சரவணபவன் கேள்வி
Jaffna Editor
ஜனாதிபதித் தேர்தலின் போது கோட்டாபய ராஜபக்ஷவை எதிர்க்கத் திராணியற்று கோழைகள் போன்று ஒளிந்து ஓடிய விக்னேஸ்வரன் மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கா நீங்கள் வாக்களிக்கப்
மத்திய குழு உறுப்பினரான சுப்பையா பொன்னையா.-மாதாந்தம்; பாதுகாப்பு அமைச்சிலிருந்துஈபிடிபி தலைமைக்கு 84 இலட்சம் தீவகத்தில் நாங்கள் கொள்ளையிட்டு கொடுத்த நகைகள் முதல் அனைத்தையும் டக்ளஸ் முதல் தவராசா,சந்திரகுமார் என அனைவரும் பங்கிட்டுக்கொண்டனர்.
மத்திய குழு உறுப்பினரான சுப்பையா பொன்னையா.-மாதாந்தம்; பாதுகாப்பு அமைச்சிலிருந்துஈபிடிபி தலைமைக்கு 84 இலட்சம் தீவகத்தில் நாங்கள் கொள்ளையிட்டு கொடுத்த நகைகள் முதல் அனைத்தையும் டக்ளஸ் முதல் தவராசா,சந்திரகுமார் என அனைவரும் பங்கிட்டுக்கொண்டனர்.ஈபிடிபி
29 ஜூலை, 2020
திருமலையில் சம்பந்தனைச் சந்தித்த சுவிஸ் தூதுவர்
Jaffna Editor
சுவிஸ் நாட்டின் இலங்கைக்கான தூதுவர் ஹன்ஸ்பீட்டர் மொக் நேற்று திருகோணமலைக்கு விஜயம் செய்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை சந்தித்து கலந்துரையாடினார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)