வினா 4- நல்லாட்சி அரசில் கூட்டமைப்பு பெற்ற பலன்கள் என்ன ?
விடை 4- நல்லாட்சி அரசு காலத்தில் கூட்டமைப்பு விரும்பி இருந்தால் அரசோடு இணைந்து அமைச்சு பதவிகளை பெற்று டக்ளசின் பாணியில் மக்களிடம் வாகு வங்கியை சேர்க்கும் நோக்கில் வேலைவாய்ப்பு அபிவிருத்தி என்று தாராளமாக செய்திருக்கலாம் .ஆனால் அமைச்சு பதவிகளை பெற்றால் அரசோடு இணைத்ததுக்கு சமம் . அவர்களோடு நறுக்க பேரம் பேசவோ தீர்வுதிடடம் பற்றி உயர்தர கேள்விகளை முன்வைக்கவோ முடியாது .இதனால் எந்தவொரு வேளையிலும் தீர்வு கோரி வாதாடுவதில் பின்னிக்கவில்லை . மாறாக அபிவிருத்தி நடவடிக்களுக்கும் தாராளமயமானா நிதி ஒதுக்கீடுகளை பெற்றார்கள் . பாராளுமன்ற உறுப்பினர் நிதி கம்பெரேலியா நிதி என கிடைக்கப்பெற்று சிலவருட காலத்திலேயே வீதிகள் மின்விளக்கு பொருத்துதல் சனசமூக நிலைய உதவிகள் வாவாதார நிதியுதவிகள் என கிராமங்கள் தோறும் செய்துள்ளது கூட்ட்டமைப்பு .இவற்றைக்கூட டக்ளஸ் எய்தார் அங்கஜன் செய்தார் என்று போய் பிரசாரங்களை முன்னெடுத்து வருவது கவனத்துக்குரியது . பல அரசியல் கைதிகள் விடுதலை இராணுவ முகாம்கள் மூடல் கிராமங்கள் விடுபட்டால் என்பவனும் ஏராளமாக நடைபெற்றுள்ளன பலவருட காலமாக அடிவருடிகள் காலத்தில் செய்யமுடியாத அளவுக்கு நிறையவே செய்துள்ளது காணக்கூடியதாக உள்ளது .ஒவ்வொரு கிராமமும் 5 வருடனாளின் முன்பிருந்த நிலையை இப்போது ஒப்பிட்டு பார்த்தல் புரியும்