புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 அக்., 2013

பொலிஸ் அதிகாரத்தை வழங்குங்கள்! முதலமைச்சர் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவார்!- தமிழ் தேசிய கூட்டமைப்பு
பொலிஸ் அதி­கா­ரத்தை தம்வசம் வைத்துக் கொண்டு வடக்கில் சட்டம் ஒழுங்கை நிலை­நாட்­ட­ வேண்­டி­யது முத­ல­மைச்சர் விக்­கினேஸ்­வ­ரனின் கட­மை­யாகும் எனக் கூறு­வது எவ்­வி­தத்தில் நியா­ய­மாகும். எனவே பொலிஸ் அதி­கா­ரத்தை எழுத்து மூலம் முத­ல­மைச்­ச­ருக்கு வழங்க வேண்­டு­ம் என்று தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் ஊடகப் பேச்­சா­ள­ரு­மான சுரேஸ் பிரே­மச்­சந்­திரன் தெரி­வித்துள்ளதாவது,
வடக்கில் சட்டம் ஒழுங்கை நிலை­நாட்ட வேண்­டி­யது முத­ல­மைச்­சரின் கட­மை­யாகும் என்றும் இரா­ணு­வத்­தினை அகற்­று­மாறு யாரும் கோர முடி­யா­தெ­னவும், துயிலும் இல்­லங்கள் புன­ர­மைக்­கப்­ப­ட வேண்டு­மென்­பது மக்கள் கோரிக்கை அல்ல என்றும் பாது­காப்பு செய­லாளர் கோத்தபாய ராஜ­பக்ச தெரி­வித்­துள்ள கருத்­துக்கள் தொடர்­பாக தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் நிலைப்­பாடு குறித்து கருத்து தெரி­வித்த போதே சுரேஸ் பிரே­மச்­சந்­திரன் எம்.பி. மேற்­கண்­ட­வாறு கூறினார்.
அவர் இவ்­வி­டயம் தொடர்பில் மேலும் கருத்து தெரி­விக்­கையில்,
வட மாகா­ணத்தை பொறுத்த வரை இரா­ணு­வத்­தி­னரின் வெற்­றியை முன் வைத்து கிளி­நொச்சி, முல்­லைத்­தீவு, ஆனை­யி­றவு உட்­பட பல்­வேறு பிர­தே­சங்­களில் இரா­ணு­வத்­தி­ன­ருக்­கான நினைவுச் சின்­னங்கள் நிர்­மா­ணிக்­கப்­பட்­டுள்­ளன. அது மட்­டு­மல்­லாது மேலும் பல நினைவுச் சின்­னங்கள் நிர்­மா­ணிப்­ப­தற்கு திட்­ட­மி­டப்­பட்­டுள்­ளன.
விடு­தலைப் புலி­களை வெற்றி கொண்­டதை கொண்­டா­டவே இரா­ணு­வத்­தினர் இந்த நினைவுச் சின்­னங்­களை நிர்­மா­ணிக்­கின்­ற­னரே தவிர, தமிழ் மக்கள் இரா­ணுவச் சின்­னங்­களை நிர்­மா­ணிக்­கு­மாறு ஒரு போதும் கோரிக்­கையை முன்­வைக்­க­வில்­லை­யென்­பது தான் உண்­மை­யாகும்.
பாது­காப்பு செய­லாளராகட்டும், இரா­ணுவத் தள­ப­தி­யா­கட்டும், அர­சாங்­க­மா­கட்டும் அவர்கள் பார்­வையில் பயங்­க­ர­வா­தி­க­ளையே கொலை செய்­துள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.
ஆனால் தமிழ் மக்­களை பொறுத்­த­வ­ரையில் அவர்கள் ஏதோ­வொரு இலட்­சி­யத்­துக்­காக போரா­டிய போரா­ளிகள், அம் மக்­க­ளது பிள்­ளைகள் உற­வுகள் மக்­க­ளுக்­காக கொல்­லப்­பட்­ட­வர்கள் என்­பதே அவர்­க­ளது கருத்­தாகும்.
இவ்­வா­றா­னதோர் சூழ்­நி­லையில் இரா­ணு­வத்­தி­னரால் வடக்­கி­லி­ருந்த அனைத்து மாவீரர் துயிலும் இல்­லங்­களும் இடித்து தரை மட்­ட­மாக்­கப்­பட்­டுள்­ள­துடன், கல்­ல­றை­களை தரை­மட்­ட­மாக்­கப்­ப­டு­வது சர்­வ­தேச சட்­டங்­களை மீறும் செய­லாகும்.
கல்­ல­றை­களை தரை மட்­ட­மாக்­கு­வது சர்­வ­தேச ரீதி­யாக தடை செய்­யப்­பட்­டுள்­ளது. இவ்­வாறு மாவீ­ரர்­களின் துயிலும் இல்­லங்­களை தரை மட்­ட­மாக்­கு­வதால் அவர்­களின் கன­வு­களை சிதைத்து விட முடி­யாது.
சட்டம் ஒழுங்கு
வடக்கில் தற்­போது சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட வேண்­டி­யது முத­ல­மைச்­சரின் கட­மை­யாகும் என பாது­காப்பு செய­லாளர் தெரி­வித்­துள்ளார். இது நகைப்­புக்­கு­ரிய கருத்­தாகும். ஏனென்றால் இலங்­கையின் அர­சி­ய­ல­மைப்பில் 13ஆவது திருத்­தத்தில் பொலிஸ் அதி­கா­ரங்கள் மாகாண சபைக்கு வழங்­கப்­பட வேண்­டு­மென தெளி­வாக குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.
ஆனால் அந்த பொலிஸ் அதி­கா­ரத்தை மத்­திய அர­சாங்­கமும் பாது­காப்பு செய­லா­ளரும் தம்­வசம் வைத்­துக்­கொண்டு வடக்கில் சட்டம் ஒழுங்கை பாது­காக்க வேண்­டி­யது முத­ல­மைச்­சரின் கட­மை­யாகும் என்றால் அது எவ்­வாறு சாத்­தி­ய­மாகும்.
எனவே சட்டம் ஒழுங்கை நிலை­நாட்­டு­வது முத­ல­மைச்­சரின் கட­மை­யாகும் என வெறும் வாய் மூலம் தெரி­விக்­காது பொலிஸ் அதி­காரம் எழுத்து மூலம் முத­ல­மைச்­ச­ருக்கு வழங்­கப்­பட வேண்டும். அதன் பின்னர் வடக்கில் சட்டம் ஒழுங்கை பாது­காக்கும் கட­மையை முத­ல­மைச்சர் முன்­னெ­டுப்பார்.
கொள்­ளைகள்
வட மாகா­ணத்தில் இன்று நாளுக்கு நாள் கொள்ளைச் சம்­ப­வங்கள் அதி­க­ரித்­துக் ­கொண்டே செல்­கின்­றன. ஆனால் இது தொடர்பில் பொலிஸார் தமது கட­மை­களை சரி­வ­ரச்­ செய்­ய­வில்லை. கொள்­ளைக்­கா­ரர்­களை கைது செய்­வதில் அச­மந்தம் காட்­டப்­ப­டு­கி­றது.
இரா­ணுவ மயம்
வட மாகா­ணத்தில் பத்து இலட்சம் தமிழ் மக்கள் வாழ்­கின்­றனர். ஆனால் அம்­மக்­களை 1½ இலட்சம் இரா­ணு­வத்­தினர் ஆக்­கி­ர­மித்­துள்­ளனர். அம்­பாந்­தோட்டை, காலி மாவட்­டத்தில் வாழும் சிங்­கள மக்­களை இவ்­வாறு இரா­ணு­வத்­தினர் ஆக்­கி­ர­மித்­தி­ருந்தால் அதனை அம்­மக்கள் விரும்­பு­வார்­களா? தமிழ் மக்­க­ளா­கட்டும் சிங்­கள மக்­க­ளா­கட்டும் எவரும் இரா­ணுவ ஆக்­கி­ர­மிப்பில் வாழ்­வ­தற்கு விரும்­ப­மாட்­டார்கள்.
தமிழ் மக்கள் ஜன­நா­யக உரி­மை­க­ளோடு வாழ விரும்­பு­கின்­றனர். இரா­ணுவ ஆக்­கி­ர­மிப்பை விரும்­ப­வில்லை. எனவே இதனை பாது­காப்பு செய­லாளர் புரிந்­து­கொண்டு இரா­ணு­வத்­தி­னரை வெளி­யேற்ற வேண்டும்.
காணிகள்
வடக்கில் மக்­களின் காணி­களில் பெரும்­பா­லா­னவை மக்­க­ளிடம் மீள ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ள­தாக பாது­காப்பு செய­லாளர் தெரி­வித்­துள்ளார். ஆனால் இன்றும் இரா­ணு­வத்­தி­னரின் தேவைக்­காக என கூறி மக்களின் காணிகள் கைப்பற்றப்படுகின்றன.
பலாலி, காங்கேசன்துறையில் இன்னமும் தனியாருக்கு சொந்தமான காணிகள் மீள அதன் சொந்தக்காரர்களிடம் கையளிக்கப்படவில்லை. தொடர்ந்தும் இராணுவத்தினரின் வசமே அவை உள்ளன.
யுத்தம் முடிந்து 4 வருடங்கள் கழிந்து விட்டது. ஆனால் எமது மக்கள் தமது காணிகளை பறிகொடுத்த நிலையிலேயே வாழ்கின்றனர்.
நினைவுச்சின்னம்
யுத்தத்தில் கொல்லப்பட்ட மக்களு க்காகவும் போராளிகளுக்காகவும் நினைவுச் சின்னமொன்று நிர்மாணிக்கப்பட வேண்டியது அவசியமாகும். இதனை மாகாண சபை, பிரதேச சபைகள் இணைந்து மேற் கொள்ள வேண்டும் என்றார்.

ad

ad