புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 அக்., 2013

இந்தியா தனிமைப்படுத்தப்படுமா? : இலங்கைத் தூதருக்கு கண்டனங்கள்!
கொமன்வெல்த் அமைப்பில் இருந்து  இலங்கையை நீக்கி வைக்க வேண்டும் என்று நேற்று தமிழக சட்டைசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து இலங்கை தூதர் பிரகாஷ் கரரியவசம், கொமன்வெல்த் மாநாட்டை பிரதமர் புறக்கணித்தால் இந்தியா தனிமைப்படுத்தப்பட்டு விடும் என்று எச்சரித்துள்ளமைக்கு கண்டனங்கள் எழுந்துள்ளன.
பீட்டர் அல்போன்ஸ் (காங்கிரஸ் மூத்த தலைவர்)
இந்தியப் பேரரசு இலங்கைத் தூதுவர் ஒருவர் சொல்கிறார் என்பதற்காக ஒரு முடிவினை எடுக்காது. இந்த விசயத்தை பொறுத்தவரை இந்தியப் பேரரசு எடுக்கின்ற முடிவு தமிழக மக்களின் உணர்வுகளை உள்வாங்கிக் கொண்டதாகத்தான் இருக்கும்.
இந்த கருத்தைதான் பாரத பிரதமர் டாக்டர் கலைஞருக்கு எழுதிய கடிதத்திலே குறிப்பிட்டிருக்கிறார்.
தமிழக அரசியல் தலைவர்களுடைய உணர்வுகளையும், தமிழர்களின் உணர்வுகளையும், உள்வாங்கிக் கொண்டு சரியான முடிவெடுப்பேன் என்று தெரிவித்திருக்கிறார். ஆதலால் இலங்கைத்தூதரின் கருத்தை நாம் முக்கியமானதாக கருதவேண்டியதில்லை.
மனுஷ்யபுத்திரன் (எழுத்தாளர்)
இலங்கை தூதரின் கருத்தை பொருட்படுத்த வேண்டியதில்லை என்று பீட்டர் அல்போன்ஸ் சொல்லியிருக்கிறார். உண்மையிலேயே காங்கிரஸ் அரசாங்கம் இலங்கை அரசினுடைய எல்லா கருத்துக்களையுமே பொருட்படுத்தி வந்திருக்கிறது. மாறாக தமிழகத்தில் இருந்து நிறைவேற்றப்படுகின்ற தீர்மானங்கள், தமிழகத்தில் இருந்து சொல்லப்படுகின்ற உணர்ச்சிகள், இதைத்தான் காங்கிரஸ் அரசாங்கம் இதுவரை பொருட்படுத்தாமல் இருந்து வந்திருக்கிறது. அந்த வகையில்தான் மிக செல்லமாக காங்கிரஸ்காரர்கள் இதை தட்டிவிட விரும்புகிறார்கள்.
உண்மையில் தமிழகத்தில் இருக்கக்கூடிய, ஒரு மாநிலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருசட்டமன்றம், ஒரு தீர்மானத்தை நிறைவேற்றுகின்றது என்றால், அந்த தீர்மானத்திற்கு பதில் அளிக்க வேண்டியது இந்திய அரசாங்கமும், காங்கிரஸ் கடியுமே தவிர, இலங்கைத்தூதர் அல்ல.
அப்படி என்றால் இந்தியாவில் இருந்துகொண்டே இலங்கை தொடர்பான அத்துனை விசயங்களுக்கும் இவர் கருத்து தெரிவிப்பாரேயானால், சிங்களர்களையும் தமிழர்களையும் பிரிக்கும் முயற்சியில் இதே நபர் முன்பு ஈடுபட்டார். இது போல திட்டமிட்டு தொடர்ந்து தமிழர்கள் சார்ந்த விசயங்களில் விஷமப் பிரச்சாரம் செய்வதற்காக இலங்கைத்தூதர் செயல்பட்டு வருகிறார்.
உண்மையில் இது அவருடைய பொறுப்பிற்கு மிகவும் சம்பந்தமில்லாத விசயம். இதற்கு கடுமையான எதிர்வினையாற்றாவிட்டால் அவர்கள் தொடர்ந்து தமிழர்களுக்கு எதிரான விசயங்களில் அதிகார மட்டங்களில் செய்துகொண்டிருப்பார்கள்.
வானதி ஸ்ரீனிவாசன் (பாஜக - தமிழக செயலாளர்)
இந்திய நாட்டிலேயே இருந்து கொண்டு இந்தியாவுக்கு சவால் விடுக்கும் அளவில் பேசியிருக்கக்கூடிய இவரை இலங்கை அரசாங்கம் கண்டிக்க வேண்டும். ஒரு நாடு முடிவு எடுக்கும் முன்பு இவர் தலையிட்டு, தனது பொறுப்பிற்கும் கொஞ்சமும் சம்பந்தம் இல்லாமல் பேசியதை இலங்கை அரசாங்கம் கடுமையாக இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன்
இலங்கையில் நடைபெறும் கொமன்வெல்த் மாநாட்டை புறக்கணித்தால் இந்தியா தனிமைப்படுத்தப்படும் என்று இந்தியாவுக்கான இலங்கை தூதர் கரியவாசம் எச்சரிக்கை விடுத்திருப்பதற்கு மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது இவ்வாறு அவர் கூறினார். 
 இது போன்ற கருத்துக்களை தவிர்க்க வேண்டும் என்றும் வாசன் கேட்டுக் கொண்டார்.
கொமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்வது தொடர்பாக உரிய நேரத்தில் மத்திய அரசு நல்ல முடிவு எடுக்கும் என்றும் வாசன் கூறினார்.

ad

ad