கடும் வெப்பத்துக்கு மத்தியில் ஆஸி. ஓபன் 3 ஆவது சுற்றுக்குள் முன்னணி வீரர்கள்
அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் 3 ஆவது சுற்றுக்குள் முன்னணி வீர, வீராங்கனைகளான ரோஜர் பெடரர், ரபேல் நடால் மற்றும் நடப்பு சம்பியன் அஷரென்கா, செரீனா வில்லியம்ஸ், மரியா ஷரபோவா
ஆகியோர் நுழைந்துள்ளனர்.ஆண்டின் முதலாவது கிரா ண்ட்ஸ்லாம் போட்டியான அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் அவுஸ்திரேலியாவில் நடைபெற்றுவருகின்றது. இதில் தற்போது அங்கு நிலவும் 40 டிகிரி செல்சியஸைத் தாண்டிய வெப்பநிலை வீரர்களுக்கும் ரசிகர்களுக்கும் கடும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் கிராண்ட் ஸ்லாம் போட்டி அமைப்பாளர்கள் தீவிர வெப்ப கொள்கையை அறிமுகப்படுத்தியுள்ள தாக நேற்று அறிவித்துள்ளனர். அதன்படி நேற்று திறந்தவெளி மைதானத்தில் ஆடப்பட்ட போட்டிகள் சிலமணி நேரம் நிறுத்தப்பட்டன. ரோட் லவர், ஹிசென்ஸ் அரங்க ங்களின் மேற்புற கூரை மூடப்பட்டு அதன்பின் அங்கு ஆட்டங்கள் தொடரப்படும் என்றும் அவர்கள் குறி ப்பிட்டுள்ளனர்.
ஏனைய திறந்தவெளி ஆடுகளங்களில் ஆடுவதற்குரிய வெப்பநிலை காணப்பட்ட பின்னரே அங்கு மீண்டும் போட்டிகள் நடத்தப்ப டும் என்றும் அவர்களது இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.