புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 ஜன., 2014


இயற்கைக்கு மாறாக திடீர் உயிரிழப்பு! சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் பிரேத பரிசோதனையில் தகவல்!
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மத்திய மந்திரி சசி தரூர் மனைவி சுகந்தா புஷ்கரின் பிரேதப் பரிசோதனை முடிந்தது. 
சுனந்தா புஷ்கரின் உடல் பிரேதப் பரிசோதனையை
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை 3 டாக்டர்கள் கொண்ட குழு நடத்தியது. பிரேத பரிசோதனை முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது. பரிசோதனை முடிவில் சுனந்தா விஷம் அருந்தி இறந்ததற்கான எந்த  அடையாளமும் இல்லை என்றும் இயற்கைக்கு மாறாக திடீர் உயிரிழப்பு ஏற்பட்டு உள்ளது என்றும் தெரிவித்து உள்ளனர்.

வெள்ளிக்கிழமை சுனந்தா புஷ்கர் டெல்லியில் ஐந்து நட்சத்திர ஓட்டல் ஒன்றில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இதையடுத்து போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். 
சுனந்தா இறந்து கிடந்த ஓட்டல் அறைக்கு வேறு யாரும் வந்து சென்றார்களா என்பதை அறிய கண்காணிப்பு காமிராவில் பதிவான வீடியோ காட்சிகளை போட்டு பார்க்க போலீசார் முடிவு செய்துள்ளனர். இதை தொடர்ந்து அந்த ஓட்டலில் அன்று பதிவான அனைத்து வீடியோ காட்சிகளையும் போலீசார் கைபற்றி உள்ளனர்.
சசிதரூரின் வீட்டில் பராமறிப்பு பணிகள் நடைபெற்று வந்ததால் சுனந்தா புஷ்கர்  ஓட்டலில் அறை எடுத்து தங்கி உள்ளார் என்று கூறப்படுகிறது. ஓட்டல் ஊழியர்கள், சசி தரூரின் வேலைக்காரர்கள் ஆகியோரிடமும் விசாரணை நடத்தப்பட்டு உள்ளது. ஓட்டல் அறையில் சுனந்தா பயன்படுத்திய அனைத்து பொருட்களையும் போலீசார் கைப்பற்றி சோதனை நடத்தினர்.

சுனந்தா புஷ்கரின் இறுதிச் சடங்குகள் சனிக்கிழமை மாலை நடைபெறும் என்று செய்திகள் வெளியாகி உள்ளன.

ad

ad