புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 மே, 2014



தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு!
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று முதல் நாளை மறுநாள் வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் வீர பாண்டிய கட்டபொம்மன் குல தெய்வமான வீர சக்கதேவி கோயில் திருவிழா இன்று துவங்குகிறது.
இதன் காரணமாக இன்று, மாலை 6 மணிமுதல் மே 10, மாலை ஆறு மணிவரை தூத்துக்குடி மாவட்டத்தில் 144 தடையுத்தரவினை கலெக்டர் ரவிக்குமார் பிறப்பித்துள்ளார்.


கோயில் திருவிழாவின் போது தங்களது வீரத்தினை காட்டுவதற்காக கத்தி, சுருள் கத்தி, வேல்கம்பு போன்ற ஆயுதங்களுடன் பக்தர்கள் வருகை தருவார்கள். இம்முறை ஆயுதங்களை எடுத்து வர தடை விதிக்கப் பட்டுள்ளது. 

ad

ad