தீர்வு வழங்குவதில் அரசு தோல்வி - தாதியர்கள் நாளை சத்தியாக்கிரகம்
இலங்கை அரசிடமிருந்து தாதியர்களின் மகப்பேற்று பயிற்சி நெறி தொடர்பான சர்ச்சைக்கு இதுவரை தீர்ப்பு வழங்காமையினால் சுகாதார அமைச்சிற்கு முன்பு நாளைய தினம் தாதியர்கள் பாரிய சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அரச தாதியர் உத்தியோகத்தர் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னபிரிய தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவா; மேலும் தெரிவிக்கையில்,
தாதியர்கள் மூன்று நாட்களாக மகப்பேற்று பயிற்சியினை இடை நிறுத்தாமல் வழங்குமாறு கோரி பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டோம். இருப்பினும் மக்களுடைய அசௌகரியங்களை கருத்திற் கொண்டும் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட நிதி அமைச்சின் செயலாளர் பி.பி. ஜயசுந்தர தலைமையிலான குழுவின் மீது நம்பிக்கை வைத்து போராட்டத்தை கைவிட்டோம்.
இருப்பினும் குறித்த பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவதில் அரசு தோல்வி கண்டுள்ளது. இதுவரையில் அதற்கான சாத்தியக்கூறுகளும் தென்படவில்லை. இந்த நிலையிலேயே நாளைய தினம் தாதியர்கள் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்தார்.