புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 மே, 2014


ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலைதிருவனந்தபுரம் : ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலை
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள கல்லயத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.


கல்லயத்தைச் சேர்ந்த மனோகரன் (வயது 66), அவரது மனைவி மகேஸ்வரி (61). மகன் பிஜு (36), சஜு (33), பிஜுவின் மனைவி கிருஷ்னெந்து (வயது 24) ஆகியோர் கூட்டு குடும்பமாக வாழ்ந்து வந்துள்ளனர். மனோகரனுக்கு பணப்பிரச்சினை இருந்துள்ளது. இதனால் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள தீர்மானித்துள்ளார்.
இதனால் அவர் குடும்பத்துடன் விஷம் சாப்பிட்டு தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துள்ளார். அதன்படி தற்கொலை செய்துள்ளனர். அவர்கள் வீடு நீண்ட நேரம் திறக்கப்படாததால் அவரது உறவினர் வீட்டிற்கு வந்து பார்த்துள்ளார். அப்போது அவர்கள் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து அவர் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடல்களை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

ad

ad