புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 மே, 2014

கரப்பந்தாட்டத்தில்


கரப்பந்தாட்டத்தில் கலக்கிய வைகோ  (30-16)விருதுநகரில் ?
கலிங்கப்பட்டி வையாபுரியார் நினைவு கைப்பந்தாட்டக் கழகம் சார்பில் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு இடையிலான வாலிபால் போட்டிகளில் வைகோ பங்கேற்று விளையாடியுள்ளார்.
மதிமுக பொதுச்செயலரும், வையாபுரியார் நினைவு கைப்பந்துக் கழகத் தலைவருமான வைகோ இப்போட்டியினை தொடங்கி வைத்துள்ளார்.
இப்போட்டிகளின் 5வது சுற்றில் பாளையங்கோட்டை அன்புநகர் பி.சி.பி. அணியும், கலிங்கப்பட்டி வையாபுரியார் கைப்பந்துக் கழக அணியும் விளையாடியுள்ளன.
இதனையடுத்து, கலிங்கப்பட்டி அணியில் வைகோவும் களம் இறங்கி விளையாடியுள்ளார். வாலிபால் போட்டியில் பங்கேற்று விளையாடிய அவரை பார்த்த பார்வையாளர்கள் கை தட்டி உற்சாகப்படுத்தியுள்ளனர்.
மேலும், இந்த போட்டியில் 30க்கு 16 என்ற புள்ளி கணக்கில் வைகோ களம் இறங்கிய கலிங்கப்பட்டி அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

ad

ad