புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 நவ., 2015

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் உறுப்­பினர் தமக்­கி­டையில் ஏற்­பட்­டி­ருக்கும் கருத்து முரண்­பா­டு­களை பகி­ரங்­கப்­ப­டுத்தி விவா­திக்­கும்­செ­யற்­பா­டு­களை கைவிட வேண்­டு -சேனா­தி­ராஜா

  • வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்­கி­னேஸ்­வரன், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்­ற­ உறுப்­பினர் எம்.ஏ.சுமந்­திரன்
    ஆகியோர் தமக்­கி­டையில் ஏற்­பட்­டி­ருக்கும் கருத்து முரண்­பா­டு­களை பகி­ரங்­கப்­ப­டுத்தி விவா­திக்­கும்­செ­யற்­பா­டு­களை கைவிட வேண்­டு­மென தமி­ழ­ர­சுக்­கட்­சியின் தலை­வரும் யாழ்.மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான மாவை.சேனா­தி­ராஜா தெரி­வித்­துள்ளார்.
    வடக்கு மாகாண முத­ல­மைச்சர் சி.வி.விக்­கி­னேஷ்­வரன், பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.ஏ.சுமந்­திரன் ஆகியோர் பரஸ்­பரம் குற்­றச்­சாட்­டுக்­களை முன்­வைத்தும் அவற்றை நியா­யப்­ப­டுத்­தியும் வெளியிட்டு வரும் கருத்­துக்­களால் எழுந்­துள்ள முரண்­பா­டுகள் குறித்து வின­வி­ய­போதே மேற்­கண்­ட­வாறு அவர் தெரி­வித்தார்.
    அவர் மேலும் தெரி­விக்­கையில்,
    வடக்கு முதல்வர் சி.வி.விக்­கி­னேஸ்­வரன் மற்றும் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சுமந்­திரன் ஆகி­ய­யோ­ருக்­கி­டையில் ஏற்­பட்­டுள்ள கருத்து முரண்­பா­டுகள் தொடர்­பாக ஊடங்­களில் இரு­வரும் பரஸ்­பரம் கருத்­துக்­களை வௌியிட்டு விவாதம் நடத்தி வரு­கின்­றார்கள்.
    தற்­போதைய நிலையில் இவ்­வாறு பகி­ரங்க விவா­தங்­களை மேற்­கொள்­வது சாலப்­பொ­ருத்­த­மா­ன­தொன்­றல்ல. அவர்கள் தமக்­கி­டையில் ஏற்­பட்­டுள்ள முரண்­பா­டுகள் தொடர்பில் பேச்­சு­வார்த்தை நடத்தி அதற்­கு­ரிய தீர்வைக் காண­வேண்டும்.
    அதற்­கு­ரிய நட­வ­டிக்­கை­களை கட்­சி­யினுள் அல்­லது அமை­தி­யான முறையில் முன்­னெ­டுத்­தி­ருக்க வேண்டும். எதிர்­வரும் நாட்­களில் இவர்­க­ளுக்­கி­டையில் ஏற்­பட்­டுள்ள முரண்­பா­டுகள் தொடர்­பாக கட்­சியினுள் கலந்­து­ரை­யாடி தீர்­வினை பெற்­றுக்­கொள்­ள­வ­தற்­கு­ரிய நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­ப­ட­வுள்­ளன.
    மேலும் தற்­போது ஏற்­பட்­டுள்ள அர­சியல் சூழ்­நி­லை­யில் நீண்­ட­கா­ல­மாக நீடித்து வரும் இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வைப் பெற்­றுக்­கொள்ளல், பாதிக்­கப்­பட்ட தரப்­பா­கிய எமது மக்­க­ளுக்கு நீதியைப் பெற்­றுக்­கொ­டுத்தல், உரி­மைகள்,அபி­லா­ஷை­களைப் பெற்று பாது­காப்­பான சமு­க­மாக எதிர்­கா­லத்தில் தலை­நி­மிர்ந்து வாழ்­வ­தற்­கு­ரிய நிரந்த சூழலை ஏற்­ப­டுத்தல் போன்ற பல்­வேறு விட­யங்­களில் நாம் கவனம் செலுத்தி அதற்­கு­ரிய முன்­ன­கர்­வு­களைச் செய்­ய­வேண்­டி­யுள்­ளது. இவ்­வா­றான நிலையில் மேற்­ப­டி­யான உள்­ளக கருத்து முரண்­பா­டுகள் தொடர்­பாக மீண்டும் மீண்டும் விவா­திப்­பது சாலப்­பொ­ருத்­த­மற்­ற­தாகும்.
    ஆகவே இவ்­வா­றான உள்­ளக முரண்­பா­டு­களை உரிய பேச்­சு­வார்த்தை ஊடாக தீர்ப்­ப­தற்­கு­ரிய செயற்­பா­டு­களை முன்­னெ­டுக்க வேண்டும். நாம் அதற்­கு­ரிய வகை­யி­லான நட­வ­டிக்­கை­களை எதிர்­வரும் நாட்­களில் எடுக்­க­வுள்ளோம் என்றார்.
    வடக்கு முதல்வர் சி.வி.விக்­கி­னேஸ்­வரன் கட்சி வரை­மு­றை­களை மீறி நடந்தார். ஆகவே அவரை கட்சி­யி­லி­ருந்து நீக்­கு­மாறு தலை­வ­ரி­டத்தில் கோரியுள்ளேன் உட்பட முதல்வர் குறித்த பல்வேறு கருத்துக்களை பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அவுஸ்திரேலிய ஊடகமொன்றுக்கு வெளியிட்டிருந்தார். இந்நிலையில் அக்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் முன்தினம் விளக்கமளிக்கும் விரிவான ஊடக அறிக்கையொன்றை வடக்கு முதல்வர் சி.வி.விக்கினேஸ்வரன் வெளி யிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ad

ad