கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு ஜனாதிபதி மஹிந்த நாளை விஜயம்! பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்
மட்டக்களப்பு வந்தாறுமூலையிலுள்ள கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நாளை விஜயம் செய்யவுள்ளதையிட்டு கோலாகல ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கூடங்குளம் பற்றி வெள்ளை அறிக்கை வெளியிடாவிட்டால் போராட்டம்: உதயகுமார் அறிவிப்பு
கூடங்குளம் அணு உலையை மூடக்கோரி அப்பகுதி பொதுமக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அணு உலை முற்றுகை என பல்வேறு பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ள அவர்கள் அடுத்த கட்ட போராட்டம் நடத்துவது குறித்து
"என்னிடம் இழப்பதற்கு எதுவுமில்லை... நான் இந்தியாவை விட்டே வெளியேறுவேன்' என கன்னங்களில் உருளத் துடித்த கண்ணீர்த் துளிகளை கட்டுப்படுத்திக் கொண்டு கமல் பேசிய பேச்சு இந்தியாவையே உலுக்கியெடுத்து விட்டது.
""முஸ்லிம் அமைப்புகளின் கோரிக்கையை ஏற்று "விஸ்வரூபம்' படத்திற்கு இரண்டு வார தடை போட்ட அரசு... தங்களையும் கூப்பிட்டு பேசாமலே முடிவெடுத்ததால்தான் அரசின் தடையை நீக்கச் சொல்லி உயர்நீதிமன்றம் போனது கமல் தரப்பு.
"முஸ்லிம்கள் எதிர்ப்பால் சட்டம்-ஒழுங்கு பாதிக்கக்கூடாது' என்கிற நோக்கம் மட்டுமே அரசுக்கு இருக்கிறது... என நம்பிக் கொண்டிருந்தார் கமல். ஆனால் "விஸ்வரூபம்' படத்திற்கான தணிக்கைச்சான்று உரிய விதிகளின்படி பெறப்படவில்லை' என்கிற வாதத்தை அட்வகேட் ஜெனரல் வைத்தபோதுதான் "படத்தையே முடக்கிப் போட அரசியல் சதி நடக் கிறதோ' என்கிற எண்ணம் கமலுக்கு வந்தது.
"விஸ்வரூபம்' ரிலீஸுக்கு 31 மாவட்ட கலெக் டர்கள் விதித்த 144 தடைக்கு உயர்நீதிமன்ற நீதிபதி வெங்கட்ராமன் இடைக்கால தடை விதித்ததும், அரசு "மேல் முறையீடு செய்வோம்' என்றது.
"மேல் முறையீட்டு மனு விசாரணைக்கு வருவதற்குள் இரண்டு காட்சிகளாவது ஓட்டிவிட வேண்டும்' என கமல் தீவிரமானார். ஆனால் அரசு, போலீஸ், வருவாய்த் துறை மூலம் தியேட்டர்களை முடக்கியது. இந்நிலையில் சில காட்சிகளை நீக்குவதன் மூலம் முஸ்லிம் அமைப்புகளோடு சமரசத்துக்கு தயாராகிவிட்ட கமல்
இதோ இவர்களைப் பாருங்கள்... இவர்கள் வேறு யாருமல்ல, ஏரியா தலையாரி யும் வி.ஏ.ஓ.வும்தான். இவர்கள் உட்கார்ந்திருக்கும் இடம் திருநெல்வேலி பி.வி.டி தியேட்டரின் ஆபரேட்டர் ரூம் அருகே. வருவாய்த்துறையினரான
மதுரை மண்ணை ஏறக் குறைய பத்தாண்டு காலம் கிடு கிடுக்கும்படி தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த பொட்டு சுரேசுக்கு முடிவுரை நாளாக ஜனவரி-31 2013 அமைந்துவிட்டது. யார் இந்த பொட்டு சுரேஷ்?
அண்ணா நினைவிடத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதி மலர் தூவி மரியாதை
அண்ணாவின் 44-வது நினைவுநாள் இன்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி கடற் கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதி மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த
விஸ்வரூபத்திற்கு சிக்கல் தொடர்கிறது : கமலுக்கு எதிராக தமிழ்நாடு பிராமணர்கள் சங்கம் ஆவேசம்
தமிழ்நாடு பிராமணர் சங்க தலைவர் ராமகிருஷ்ணன் . இவர் இன்று மாலை 7 மணி அளவில் சென்னை போலீஸ் கமிஷனரிடமும், உள்துறை செயலாளரிடமும் ஒரு புகார் மனு கொடுத்திருக்கிறார்.
தலிபான், அல்கைதா தடை இலங்கை முஸ்லிகளை பாதிக்கும்: முஸ்லிம் கவுன்ஸில்
தலிபான் மற்றும் அல்கைதா அமைப்புக்களை தடை செய்வது என இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள முடிவை தம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது என்று இலங்கை முஸ்லிம் கவுன்ஸில் தெரிவித்துள்ளது.
வேறொரு பிரபலமான இணையம் இந்த நலன்புரி சங்கம் இங்கிலாந்தில் உள்ளது போல எழுதாமலும் ஸ்ரீதரன் எம் பி தானே தென்னங்ககன்றுகளை தான் செலவில் கொடுத்தது தலையங்கம் தீட்டி உள்ளது. கீழே உள்ளதை கவனியுங்கள் (புங்குடுதீவு கிராமத்திற்கு பா.உறுப்பினர் சிறீதரனால் 1000 தென்னங்கன்றுகள் வழங்கி வைப்பு)புங்குடுதீவு நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் புங்குடுதீவு கிராமத்திற்கு 1000 தென்னங்கன்றுகள் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் ஊடாக மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.)
இங்கிலாந்தின் புங்குடுதீவு நலன்புரிச் சங்கம் சுமார் 1000 பவுண்ட்ஸ் செலவில் புங்குடுதீவு கிராமத்திற்கு 1000 தென்னங்கன்றுகள் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் ஊடாக மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.