புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 பிப்., 2013



அண்ணா நினைவிடத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதி மலர் தூவி மரியாதை
அண்ணாவின் 44-வது நினைவுநாள் இன்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி கடற் கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதி மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த

      
 நிகழ்ச்சியில் ஏராளமான தி.மு.க. நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்து கொண்டனர்.

முன்னதாக தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின் தலைமையில் திருவல்லிக்கேணி போலீஸ் நிலையம் அருகில் இருந்து அண்ணா நினைவு நாள் பேரணி நடந்தது. இப்பேரணியில் 2 ஆயிரம் பேர் பங்கேற்னர். பேரணியில் எம்.பி.க்கள் டி.ஆர். பாலு, டி.கே.எஸ். இளங்கோவன், கனிமொழி, மாவட்டச்செயலாளர் ஜெ.அன்பழகன், வட சென்னை மாவட்ட பொறுப்பாளர் ஆர்.டி. சேகர், முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன், இலக்கிய அணி துணை செயலாளர் பூச்சிமுருகன் உள்பட கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் பேரணியில் கலந்து கொண்டனர்.

பேரணி வாலாஜா ரோடு, கடற்கரை சாலை வழியாக அண்ணா நினைவுவிடத்தை வந்தடைந்தது..

ad

ad