புலிகளின் நாணயத்தின் மறுபக்கமாகவே தமிழ் தேசியக் கூட்டமைப்பு செயற்படுகிறது: சபையில் கெஹலிய
தமிழர் தாயகக் கொள்கையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்னும் கைவிடவில்லை. அது தொடர்ந்தவண்ணமே இருக்கின்றது. அந்த வகையில் புலிகளின் நாணயத்தின் மறுபக்கமாகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற்பட்டுவருகின்றது என்று அமைச் சரவை பேச்சாளரும் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல நேற்று சபையில் தெரிவித்தார்.