புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 டிச., 2013

புலி­களின் நாண­யத்தின் மறு­பக்­க­மா­கவே தமிழ் தேசியக் கூட்டமைப்பு செயற்­ப­டு­கி­றது: சபையில் கெஹ­லிய
தமிழர் தாயகக் கொள்­கையை தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு இன்னும் கைவி­ட­வில்லை. அது தொடர்ந்­த­வண்­ணமே இருக்­கின்­றது. அந்த வகையில் புலி­களின் நாண­யத்தின் மறு­பக்­க­மா­கவே தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு செயற்­பட்­டு­வ­ரு­கின்­றது என்று அமைச் சரவை பேச்­சா­ளரும் அமைச்­ச­ரு­மான கெஹ­லிய ரம்புக்வெல நேற்று சபையில் தெரி­வித்தார்.
பாரா­ளு­மன்­றத்தில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை இடம்­பெற்ற 2014ஆம் ஆண்­டுக்­கான வரவு - செல­வுத்­திட்­டத்தில் நிதி ஒதுக்­கீடு தொடர்­பான இரண்டாம் நாள் விவா­தத்தில் பேசு­கை­யி­லேயே அவர் இதனை தெரி­வித்தார்.
அமைச்சர் கெஹ­லிய மேலும் கூறு­கையில்,
ஜனநாயகம், சுயா­தீ­ன­மான தேர்தல், புனர்­வாழ்வு மற்றும் மனித உ ரிமைகள் குறித்து பல்­வேறு விட­யங்கள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா. சம்­பந்தன் இந்த சபையில் உரை­நி­கழ்த்­தி­யி­ருந்தார்.
அவ­ரது அனைத்து எடுத்­துக்­காட்­டல்­களும் வடக்கில் இருந்து இரா­ணு­வத்தை வெளி­யேற்றும் நோக்­கமே அடங்­கி­யி­ருந்­தது. சம்­பந்­தனைப் பொறுத்­த­வ­ரையில் அவ­ரது உரை­யா­னது புலம்­பெயர் தமி­ழர்­க­ளுக்­கா­கவே அமைந்­தி­ருந்­தது.
யுத்­தத்தில் புலிகள் தோற்­க­டிக்­கப்­பட்டு விட்ட போதிலும் நாண­யத்தின் இன்­னொரு பக்­க­மாக புலம்­பெ­யர்ந்தோர் இன்னும் செயற்­பட்டு வரு­கின்­றனர். அவற்றின் பிர­தி­ப­லிப்­பில்தான் ஐ.நா. மனித உரி­மைகள் உயர்ஸ்­தா­னிகர் நவ­நீ­தம்­பிள்ளை மற்றும் பிரித்­தா­னிய பிர­தமர் டேவிட் கமரூன் ஆகி­யோரின் செயற்­பா­டு­களும் அமைந்­தி­ருந்­தன.
மேலும் கூட்­ட­மைப்பின் சிறி­தரன் எம்.பி. புலி­களின் தலை­வரை போராட்ட வீர­ராக வர்­ணித்­தி­ருந்தார்.
கே.பி.யை தெரி­யாது என்று சம்­பந்தன் எம்.பி. கூறி­னாலும், பிர­பா­க­ர­னுக்கு ஆத­ர­வாக செயற்­ப­ட­வில்லை என்று அவரால் கூற­மு­டி­யாது. அப்­படி சொல்­வா­ரெனில் சிறி­தரன் எம்.பி. யின் உரையை அவர் வாபஸ் பெற­வேண்டும்.
மேலும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பா­னது தமிழர் தாயகக் கொள்கையை இன்னும் கைவிட்­ட­தாக இல்லை. அது தொடர்ந்து கொண்­டுதான் இருக்­கின்­றது. அந்த வகையில் பார்க்கும் போது புலி­களின் நாண­யத்தில் மறு­பக்­க­மா­கவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இருக்கின்றது.
பாதுகாப்புப் படை இந்நாட்டுக்குப் பெற்றுக் கொடுத்த சுதந்திரமானது. தற்காலிகமானது என்பதையே இது சுட்டி நிற்கிறது. இதற்கு இடம்கொடுக்க முடியாது என்றார்.

ad

ad