புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 ஜன., 2016

இனப்பிரச்சினைக்கான தீர்வு, அரசியல் அமை ப்புச் சீர்திருத்தம் என்ற விடயங்கள் இந்த ஆண்டின் பேசுபடு பொருளாகியுள்ளன. இலங்கையில் நடந்த போர்க்குற்றம் தொடர்பில் சர்வதேச விசாரணை தேவை என்ற அழுத்தங்களைச் சமாளிப்பதற்காக உலக நாடுகள் இலங்கை அரசுக்கு சில கட்டாய அறிவுரைகளை வழங்கியுள்ளன. இவற்றை நிறைவேற்ற வேண்டிய தார்மீகப் பொறுப்பு இலங்கை அரசுக்கு உண்டு. இதில் ஒன்று இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பது என்ற விடயமாகும். இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணத்தவறி னால், அடுத்த ஜெனிவா கூட்டத்தொடரில் உலக நாடுகளைச் சமாளிப்பது முடியாத காரியம் என்ற அடிப்படையில், எப்பாடுபட்டாகிலும் பிரச்சினைக்குத் தீர்வு கண்டாக வேண்டும் என்பதில் அரசு உறுதியாக இருக்கிறது. இதன் காரணமாக 2016ஆம் ஆண்டில் ஏதோ ஒருவகையில் பிரச்சினைக்குத் தீர்வு கண்டாகுதல் என்ற விடயம் முன்னெடுக்கப்படுகிறது. இதில் இனப்பிரச்சினைக்கான தீர்வு என்ன என்பதை தீர்மானிக்கின்ற தமிழ் சக்திகளை தம் வசப்படுத்துவதில் அரசின் இராஜதந்திரம் கடுமையாக வேலை செய்யத் தலைப்பட்டுள்ளது. அதாவது தமிழ் அரசியல் தலைமையை தம் வசப்படுத்தினால் எல்லாம் சரியாகி விடும் என்ற நினைப்போடு இலங்கை அரசின் காய்நகர்த்தல்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இக் காய்நகர்த்தலில் எங்கள் அரசியல் தலைமையைச் சேர்ந்த சிலர் சிக்குண்டுவிட்டனர் என்பதை இவ்விடத்தில் கூறித்தானாக வேண்டும். தமிழ் அரசியல் தலைமையை தம்வசம் வளைத்துப்போட்டு, தருவதை வாங்குங்கள் என்று சொல்வதற்கான திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. அரசின் இந்த ஏற்பாட்டை உடைக்கின்ற ஒரு சக்தியாக தமிழ் மக்கள் பேரவை உதயமாகியது. தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வு இப்படியாகத் தான் இருக்கவேண்டும் என்று வலியுறுத்துவதற்கு தமிழர் தரப்பில் எவரும் இல்லை என்ற கட்டத்தில் தமிழ் மக்கள் பேரவையின் உதயம் இனப்பிரச்சினைக்கான தீர்வு என்ற விடயத்தில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தவுள்ளதென்பதை அண்மைக் கால நிகழ்வுகள் உறுதிசெய்துள்ளன. யுத்தத்தால் தமிழ் மக்கள் சந்தித்த இழப்புக்கள், சொத்தழிவுகள், இடப்பெயர்வுகள் என்ற மிகப் பெரியதொரு துன்பப்பட்டியல் எங்கள் கண்முன் இருக்கின்றபோது, எந்தத் தமிழ் அரசியல் தலைமையும் தன்னிச்சையாகச் செயற்பட முடியாது. எனவே அனைத்துத் தமிழ்த் தரப்பும் ஒன்று பட் டுச் செயற்பட வேண்டும் என்பது இங்கு முக்கியமானது. இவ்விடத்தில்தான் எங்கள் புலம்பெயர் உறவுகளின் ஒன்றுபட்ட குரல் தேவைப்படுகிறது. வன்னிப்பெரு நிலப்பரப்பில் தமிழ் மக்களுக்கு நடந்த பேரழிவுகளை வெளிப்படுத்தி சர்வதேசத்தின் பார்வையை இலங்கை மீது திசை திருப்பியவர்கள் எங்கள் புலம்பெயர் உறவுகள். எனவே இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்படுவதற்கான ஆயத்தங்கள் நடக்கின்ற இவ்வேளையில், எங்கள் புலம்பெயர் உறவுகள் உலக நாடுகள் மூலமாக இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுப்ப தையும் தமிழினம் ஒன்றுபட்டு தமது உரிமையைக் கேட்பதற்கு வலியுறுத்தவும் முன்வர வேண்டும். இது காலத்தின் கட்டாய தேவை.

சர்வதேசப் பொறியமைவின் மூலம் மட்டுமே தமிழர்களுக்கு நீதியினைப் பெறமுடியும் !!
சரணடைந்த ஆயிரக்கணக்கான தமிழர்கள் இப்போது உயிருடன் இல்லை என்ற சிறீலங்காப் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் கூற்றினைத்

புலம்பெயர் தமிழ் மக்களின் ஒன்றுபட்ட அழுத்தம் தேவை

இனப்பிரச்சினைக்கான தீர்வு, அரசியல் அமை ப்புச் சீர்திருத்தம் என்ற விடயங்கள் இந்த ஆண்டின் பேசுபடு பொருளாகியுள்ளன.

மக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பில் யாழில் உயர்மட்டக் கூட்டம்

இராணுவத்தினரின் வசமுள்ள மக்களின் காணிகள் படிப்படியாக விடுவிக்கப்பட்டு வரும் நிலையில், யுத்தத்தால் இடம்பெயர்ந்த ஏனைய

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது 40000 பேர் உயிரிழந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு கற்பனைக் கதை– பரணகம

இறுதிக் கட்ட யுத்தத்தின் பேர்து 40,000 பொதுமக்கள் உயிரிழந்தனர் என கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் வெறும் கற்பனைக்

பெப்ரவரி 04ஆம் திகதி விடுதலை வேண்டும்! இல்லையெனில் போராட்டம் தொடரும்

எதிர்வரும் பெப்ரவர் மாதம் 04ஆம் திகதி (இலங்கை சுதந்திர தினம்) தம்மை விடுவிக்காவிடின் போராட்டம் தொடரும் என தமிழ் அரசியல்

தமிழகத்தில் மாற்றத்தைத் தர மக்கள் முடிவு செய்துவிட்டார்கள்: வைகோ

தமிழகத்தில் மாற்றத்தைத் தர மக்கள் முடிவு செய்துவிட்டார்கள் என்று மதிமுக பொதுச்செயலளார் வைகோ கூறியுள்ளார்.

அதிமுகவில் இருந்து பழ.கருப்பையா நீக்கம்


அதிமுகவில் இருந்து எம்.எல்.ஏ. பழ.கருப்பையா கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.  கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு

நடிகர் சங்க தேர்தல் விவகராமே என் நீக்கத்துக்கு காரணம் : எர்ணாவூர் நாரயணன் விளக்கம்


நடிகர் சரத்குமார் தலைமையிலான சமத்துவ மக்கள் கட்சி கடந்த 2011 ஆம் ஆண்டில் அதிமுக வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது.

அசோக்நகரில் துணிகரம் ஓய்வுபெற்ற பி.எஸ்.என்.எல் அதிகாரி வீட்டில் கொள்ளை மாடி வழியாக புகுந்த கொள்ளையன் பொருட்களை மூட்டை கட்டி அள்ளிச்சென்றான்

சென்னை அசோக்நகரில் ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல் அதிகாரி வீட்டில் மாடி வழியாக புகுந்த கொள்ளையன் பணம், நகை உள்ளிட்ட

27 ஜன., 2016

சமத்துவ மக்கள் கட்சியில் இருந்து எர்ணாவூர் நாராயணன் எம்.எல்.ஏ நீக்கம்

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியில் இருந்து பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் உள்பட 7 முக்கிய நிர்வாகிகள் பாரதீய ஜனதாவில்

சமஸ்டியை ஏற்கச் செய்யுமாறு தலைமைகளை வலியுறுத்துங்கள்! சிங்கள மக்களிடம் கூட்டமைப்பு கோரிக்கை!

சிங்களத் தேசிய தலைவர்களால் முன்மொழியப்பட்ட சமஸ்டி ஆட்சி முறையை நடைமுறைப்படுத்துமாறு உங்கள் தலைவர்களுக்கு அழுத்தம் கொடுத்து

துன்னாலையில் உயிருடன் மனிதரை விழுங்கும் மலைப்பாம்பு – அதிர்ச்சியில் கிராமம்.

jaffna_senik
யாழ்பாணம் வடமராட்சி பகுதி துன்னாலை வடக்கு பருத்திதுறை பொலிஸ் பிரிவில் உயிருடன் மனிதரை விழுங்கும் அனகோண்டா ஒன்று அதிர்ச்சியை

பொன்சேகாவின் செயலாளர் சேனக டி சில்வா ஐ.தே.கவுடன் இணைக்கிறார்


ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி சேனக டி சில்வா தலைமை வகிக்கும் ‘அபே ஜாதிக பெரமுன கட்சி, ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டணியமைக்க தீர்மானித்துள்ளதாக

ஞானசார தேரருக்கு சிறைச்சாலைக்குள் விடுதலை புலிகள் மற்றும் முஸ்லிம்களால் உயிருக்கு அச்சுறுத்தல்

எதிர்வரும் பெப்ரவரி ஒன்பதாம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொதுபலசேனா அமைப்பின் பொது செயலாளர் ஞானசார தேரருக்கு வெலிகடை

போலி பேஸ்புக் மூலம் பலரிடம் பணம் பறிப்பு: சந்தேகநபருக்கு வலைவீச்சு

போலியான பேஸ்புக்கின் மூலம் பலரை அச்சுறுத்தி வந்த நபர் என்று குற்றப்புலனாய்வு பிரிவினரால் சந்தேகிக்கப்படும் நபரை, கைது செய்யுமாறு

தேசிய கீதம் பாடி டுவிட்டரில் இணைந்தார் நடிகர் கமல் ஹாசன்

குடியரசு தினமான இன்று சமூக வலைதளமான டுவிட்டரில் தன்னை இணைத்துக் கொண்டார் நடிகர் கமல் ஹாசன். (@ikamalhaasan)

என்னைப் பற்றி கதைப்பதற்கு ஸ்ரீநேசனுக்கு அருகதையில்லை:- கருணா பதில்!


தமிழைப் பற்றியும் தமிழனைப் பற்றியும் கதைப்பதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசனுக்கு எந்த அருகதையும் இல்லையென முன்னாள்

ஞானசார தேரர் கைது விவகாரம்.. ஹோமாகம நீதிமன்றம் அருகில் கடும் பதற்றம்! கலகம் அடக்கும் பொலிசாரும் குவிப்பு!


கலகொட அத்தே ஞானசார தேரரை விளக்கமறியலில் வை

பிரான்ஸ் ஜனாதிபதியுடன் மதிய விருந்தில் கலந்துகொண்ட நடிகை ஐஸ்வர்யா ராய்

இந்தியா வந்துள்ள பிரான்ஸ் ஜனாதிபதியுடன் நடிகை ஐஸ்வர்யா ராய் மதிய விருந்தில் கலந்து கொண்டுள்ளார்.

மதுரையில் மக்கள் நலக்கூட்டணி மாநாடு



மக்கள் நலக்கூட்டணி சார்பில் மாற்று அரசியல் எழுச்சு மாநாடு இன்று 26.1.2016 அன்று மாலை 5 மணி அளவில் மதுரை

ad

ad