புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 ஜன., 2016

பொன்சேகாவின் செயலாளர் சேனக டி சில்வா ஐ.தே.கவுடன் இணைக்கிறார்


ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி சேனக டி சில்வா தலைமை வகிக்கும் ‘அபே ஜாதிக பெரமுன கட்சி, ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டணியமைக்க தீர்மானித்துள்ளதாக அந்தக் கட்சியின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சேனக டி சில்வா, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் பிரத்தியேக செயலாளராக பணியாற்றியதுடன், 2010ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் பின்னர், இவர்கள் இருவரும் கடந்த அரசாங்கத்தினால் சிறைபிடிக்கப்பட்டனர் என்பது நினைவூட்டத்தக்கது.
சரத் பொன்சேகாவின் ஜனநாயகக் கட்சியும், இன்னும் சில நாட்களில் ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டணியுடன் இணைவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்த்தில் கையெழுத்திடவுள்ளது.
இந்த இரண்டு கட்சிகளின் தலைமைகளும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையுடன் தற்போது இது குறித்து பல சுற்றுப் பேச்சுக்களை நடத்தி, இணக்கத்திற்கு வந்துள்ளதாக அந்தக் கட்சிகளின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ad

ad