நாட்டில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் கோத்தபாய வெற்றிபெற்று ஜனாதிபதியாக பதவியேற்றதை தொடர்ந்து தென்னிலங்கை அரசியல் வட்டாரம் மேலும் பரபரப்பாகியுள்ளது.
ஜனாதிபதியாக கோத்தாபய ராஜபக்ஷ பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ள நிலையில், அவர் தலைமையில் அமையவுள்ள காபந்து அரசாங்கத்தின் பிரதமராக, தினேஷ் குணவர்தன நியமிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கத்தின் பதவிக்காலம் முடியும் வரை பாராளுமன்றத்தை கொண்டு செல்வதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்றக் குழுக் கூட்டத்தில் இணக்கம் காணப்பட்டுள்ளது.
இலங்கையின் ஜனாதிபதியாக கோத்தபாய ராஜபக்ஷ தேர்ந்தெடுக்கப்பட்டதை அறிந்து மிகுந்த ஏமாற்றமடைந்துள்ளதாக கனடா ஆளும் லிபரல் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.
கோத்தபாய தனது பதவியை பொறுப்பேற்றுக்கொண்டிருந்த அதேவேளை மேற்குலக ராஜதந்திரிகள் வெவ்வேறு தமிழ் தரப்புக்களை தேர்தலின் பின்னரான சூழல் பற்றி பேச்சுக்களை நடத்த தொடங்கியுள்ளது.
தன்னை துட்டகெமுனு மன்னனது வாரிசென அடையாளப்படுத்த முற்பட்டுள்ள கோத்தபாய எல்லாளனை வெற்றி கொண்ட பின்னர் அனுராதபுரத்தில் கட்டப்பட்ட விகாரை முன்றலில் தனது பதவியே பொறுப்பேற்றுள்ளார்.
சூட்டொடு சூடாக பாராளுமன்ற தேர்தலையும் நடத்த திடடம்
ரணிலை ராஜினாமா செய்ய வற்புறுத்தப்படுவதாக செய்தி பாராளுமன்ற பெரும்பான்மை இல்லாது மகிந்த பிரதமராக முடியுமா பாராளுமனறத தைக் கலைக்க தான் முடியும் தேர்தலுக்கு உத்தரவிடலாம்
இலங்கையின் அடுத்த ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச என்பது உறுதியாகின்றது வடக்கு கிழக்கில் சஜித்துக்கு அமோக வெற்றி இருந்தாலும் இலங்கை முழுவதுமாக தோல்வி நிலையில் உள்ளார் வடகிழக்கு தவிர்ந்த தொகுதிகளில் கோத்தபாய சஜித்தை விட பல்லாயிரக்கணக்கில் வித்தியாசம் எடுத்து வெற்றி பெறுவதால் அடுத்த ஜனாதிபதி கோத்த என்பது ஓரளவு உறுதியாகிவிட்ட்து
தனது கோட்டை என மார்தட்டிய டக்ளஸுக்கு நெத்தியடி கொடுத்த தீவகம் தீவகத்தை நம்பி இருந்த டக்ளசுக்கு மக்கள் கொடுத்த நெத்தியடி முடிவு அவருக்கு தலையிடியை கொடுத்துள்ளது
காலி மாவட்டம் கடும் போட்டியின் பின்னனர் சஜித் 140 வாக்குகளால் வெற்றி
சஜித் பிரேமதாஸ - 31248
கோத்தாபய ராஜபக்ச - 31108
அனுர குமாரதிஸாநாயக்க - 3044
மொனராகலை மாவட்டம் தபால் மூல வாக்களிப்பு முடிவுகள்
சனி நவம்பர் 16, 2019
மொனராகலை மாவட்ட தபால் மூல வாக்குப் பதிவில் கோத்தாபய ராஜபக்ஷ முன்னிலையில் உள்ளார்.
அதன்படி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கோத்தாபய ராஜபக்ஷ 13,754 வாக்குகளையும், புதிய ஜனநாயக முன்னணியின் சஜித் பிரேமதாச 6,380 வாக்குகளையும், தேசிய மக்கள் சக்தியின் அனுரகுமார திஸாநாயக்க 1,340 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.