-
24 ஏப்., 2020
இம்மாத இறுதியில் சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள்
இம்மாதம் இறுதியில் கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளை வெளியிட எதிர்பார்த்திருப்பதாக பரீட்சைகள் திணைக்கள பிரதி ஆணையாளர் நாயகம் பிரணவதாசன் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இராணுவம் குவிப்பு
இலங்கை நாடாளுமன்றத்தின் பாதுகாப்புக்காக நேற்று மாலை முதல் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
பொதுத் தேர்தலை நடத்துவதற்காக அரசியலமைப்புச் சட்டத்தில் தனக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரங்களுக்கு
மேலும் 30 கடற்படையினருக்கு தொற்று உறுதி!- எகிறும் கொரோனா
வெலிசற கடற்படை முகாமில் மேலும் 30 கடற்படையினருக்கு இன்று கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா சற்று முன்னர் தெரிவித்துள்ளார்.
வெலிசற கடற்படை கடற்படை முகாமில் 4000 பேர் தனிமைப்படுத்தல்
வெலிசறை கடற்படை முகாமில் உள்ள கடற்படையினர் மற்றும் அவர்களது குடும்பத்தினர் 4,000 பேரும், சுய தனிமைப்படுத்தலில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மறப்போமா உம்மை
-----------------------------------
இறைவனடி சேர்ந்த எங்கள் உறவு என்றுமே மறக்க முடியாத மனிதன் . சொந்தங்களோடு அன்பாகவும் நகைச்சுவையாகவும் பேசி இதயங்களை கொள்ளை கொண்டதோர் நெஞ்சம் . இவரது எதிர்பாராத மறைவு எங்கள் குடும்பத்தை ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்திவிட்டது . எனது அன்னை , என் மனைவியின் தந்தை ,இவரது மனைவியின் தந்தை மூவரும் சகோதரர்கள் . மறுபுறத்தே இவரது அன்னையும் என் மனைவியின் அன்னையும் சொந்த சகோதரிகள் . அத்தனை பந்தங்களையும் ஒரு நொடியில் அறுத்தெறிந்து விடடது விதி . அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டி நிற்கிறோம் .சாந்தி. சாந்தி .சாந்தி . தங்கை ,மைத்துனன் ,மருமக்கள்
23 ஏப்., 2020
1500 பிரெஞ்சு இராணுவத்தினருக்கு கொரோனா தொற்று.
1500 பிரெஞ்சு இராணுவத்தினருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இராணுவ அமைச்சம் இத்தகவலை இன்று வெளியிட்டுள்ளது. பிரான்சில் கொரோனா தொற்றினால்
தாக்குதலுக்கு இலக்கான காவல்நிலையம்! - மேலும் பல வன்முறை சம்பவங்கள்.
பரிஸ் புறநகரில் நேற்று நள்ளிரவு மீண்டும் கலவரம் இடம்பெற்றுள்ளது. 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரதானமாக Hauts-de-Seine மாவட்டத்தில் இந்த கலவரம் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக Champigny-sur-Marne
கொழும்பில் இருந்து யாழ். தப்பி வந்த 7 பேர் - கைது செய்யும் முயற்சியில் படைத்தரப்பு
கொழும்பில் கொரோனா வைரஸ் பரவல் ஆபத்து வலயமாக அறிவிக்கப்பட்ட, பகுதியில் இருந்து உரிய அனுமதியின்றி, ஏழு பேர் யாழ்ப்பாணத்துக்கு தப்பிச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வடகொரியாவின் அடுத்த தலைவர் யார்? மர்ம தேசத்தின் அதிபருக்கு நடந்தது என்ன?
காலா காலமாக மர்மதேசமாக விளங்கிக் கொண்டிருக்கும் வட கொரியாவின் அரச தலைவருக்கு உண்மையில் என்ன நடந்தது என்பதும் மர்மமாகவே நீடித்துக் கொண்டிருக்கிறது.
'ஈரான் படகுகள் அனைத்தையும் சுட்டு வீழ்த்துங்கள்
அமெரிக்க கப்பல்களை அச்சுறுத்தும் வகையில் செயல்படும் துப்பாக்கிய ஏந்திய ஈரான் படகுகள் அனைத்தையும் சுட்டு வீழ்த்த கடற்படைக்கு அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
பலாலி அம்பலமானதால் கோத்தா சீற்றம்?
பலாலி தனிமைப்படுத்தல் மையம் தொடர்பில் ஊடகங்களிலும் சமூக ஊடகங்ளிலும் வெளியாகிய தகவல்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை சீற்றமடைய வைத்ததாக தகவல்கள் கசிந்துள்ளன.
சீனாவில் இருந்து சுவிட்சர்லாந்துக்கு இரண்டு முகக்கவச தயாரிப்பு இயந்திரங்கள் வந்து சேர்ந்தன
இன்று மாலை சூரிச்சுக்கு சீனாவில் இருந்து வரவழைக்கபப்ட்ட இரண்டு முகக்கவச இயந்திரங்கள் வந்துள்ளன செங்காளன் மாநில பிளாவில் நகரில் உள்ள தொழிலகத்தில் இந்த இயந்திரங்கள் மூலம் மே நடுப்பகுதியில் இருந்து முகக்கவச தயாரிப்பு எவளைகள் ஆரம்பமாகும் 8 லட்ஷம் பிராங்குகள் பெறுமதியான இந்த இயந்திரங்கள் மூலம் நாளொன்றுக்கு ppf 2 தர கவசங்கள் 1 லட்ஷம் தயாரிக்கப்டும் இவை வைத்தியசாலைகளில் பாவிக்கப்படும் தரம் கொண்டவை
இன்று மாலை சூரிச்சுக்கு சீனாவில் இருந்து வரவழைக்கபப்ட்ட இரண்டு முகக்கவச இயந்திரங்கள் வந்துள்ளன செங்காளன் மாநில பிளாவில் நகரில் உள்ள தொழிலகத்தில் இந்த இயந்திரங்கள் மூலம் மே நடுப்பகுதியில் இருந்து முகக்கவச தயாரிப்பு எவளைகள் ஆரம்பமாகும் 8 லட்ஷம் பிராங்குகள் பெறுமதியான இந்த இயந்திரங்கள் மூலம் நாளொன்றுக்கு ppf 2 தர கவசங்கள் 1 லட்ஷம் தயாரிக்கப்டும் இவை வைத்தியசாலைகளில் பாவிக்கப்படும் தரம் கொண்டவை
கனடாவில் ஒரே நாளில் 144 பேர் மரணம்! - கியூபெக்கில் மட்டும் 102 பேர்
கனடாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் நேற்று மட்டும், 144 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, அங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, 1834 ஆக அதிகரித்துள்ளது. கியூபெக்கில் மாத்திரம் நேற்று 102 பேர்
கொரோனாவை பிரித்தானியா கையாள்வது தொடர்பாக விசாரணை..! பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு நெருக்கடி
கொரோனா வைரஸை தனது அரசாங்கம் கையாண்டது தொடர்பான விசாரணைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதால் பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)