புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 ஏப்., 2020

இலங்கை காவல்துறை நவீனமயமாகிறது
சிறிலங்கா காவல் துறையின் சீருடையில் புகைப்படக்கருவி இணைப்பு

இலங்கையிலுள்ள சிறிலங்கா காவல் துறை , நவீன தொழில் நுட்பங்களை தமது கடமைகளின் போது பயப்படுத்த வேண்டுமென்ற நோக்கில், சீருடையின் ஒரு பகுதியாக பயன்படுத்தக்கூடிய புகைப்படக் கருவியொன்றை(கெமரா) வழங்குவதற்கு ஆலோசிக்கப்பட்டுள்ளது.

சீருடையின் ஒரு பகுதியாக பயன்படுத்தக்கூடிய இந்த புகைப்படக் கருவியானது (கெமரா), பிரச்சினைகளை தீர்வுக்கும் முகாமைத்துவம், போக்குவரத்து வாகன முகாமைத்துவத்துக்கும் பெரிதும் உதவக்கூடிய வகையில் அமையுமென எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், இதற்காக பயன்படுத்தக்கூடிய ஒரு தொகை புகைப்படக்கருவிகள் (கெமரா) இலங்கை மொபிட்டல் நிறுவனத்தினால் சிறிலங்கா காவல் துறையிடம் கையளிக்கட்டுள்ளமையும் குறிப்பிடதக்கது

ad

ad