கடந்த டிசம்பர் மாதம் நடைப்பெற்ற கா.பொ.த சாதாரண பரீட்சையில் 7 இலட்சத்து 17 ஆயிரத்து 7 பேர் தோற்றியிருந்தனர்.
இந்நிலையில் பெறுபேறுகளை வெளியிடுவதற்கான இறுதி மதிப்பீட்டு நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.
நாட்டில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள போதிலும் , குறுகிய அளவான உத்தியோகஸ்தர்களை பயன்படுத்தி பெறுபேறுகளை வெளியிடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள கா.பொ.த உயர்தர பரீட்சை மற்றும் தரம் 5 ற்கான புலமைப்பரிசில் பரீட்சைகள் ஒரு போதும் ஒத்திவைக்கமாட்டாது என்றும் கல்வி அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன