-
12 செப்., 2012
இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் கொழும்பில் நடைபெற்றமுஸ்லிம் காங்கிரஸ் கூட்டம் எந்த இறுதி முடிவும் எடுக்க முடியாத நிலையில் மீண்டும் நாளை கூடுவதென ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணசபையில் ஆட்சி அமைப்பது தொடர்பாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் கொழும்பில் நடைபெற்ற கூட்டம் எந்த இறுதி முடிவும் எடுக்க முடியாத நிலையில்
கிழக்கு மாகாண சபைக்கு அண்மையில் தெரிவு செய்யப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு மாகாணசபை உறுப்பினர்களின் வீடுகளுக்கு நேற்றிரவு சென்ற சிலர் ஆளும் கட்சிக்கு ஆதரவளிக்க வேண்டும் என அச்சுறுத்தியுள்ளனர்.
மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை ஆகிய மூன்று மாவட்டங்களிலும் தெரிவு செய்யப்பட்டவர்களின் வீடுகளுக்கு கொழும்பிலிருந்து ஜனாதிபதி செயலகத்திலிருந்து வந்திருக்கிறோம் என கூறிக்கொண்டு சிலர் சென்றுள்ளனர்.
தெரிவு செய்யப்பட்ட மாகாணசபை உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி செயலகத்திலிருந்து வந்தவர்களால் விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்களை அடுத்து கிழக்கு மாகாணசபைக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பில் தெரிவுசெய்யப்பட்ட 11 உறுப்பினர்களும் திருகோணமலைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான அவசர கூட்டம் இன்று இரவு திருகோணமலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது. ஆர்.சம்பந்தன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஷ்
மோசடிகள் இடம்பெறாவிட்டால் த.தே.கூ. 12 ஆசனங்களை பெற்றிருப்போம்- சம்பந்தன்
கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ் மக்கள் பலம் வாய்ந்த ஆணையை தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு தந்துள்ளனர். தமிழ் மக்கள் வழங்கிய ஜனாநாயகத் தீர்ப்புக்கு போதுமான மதிப்பு கொடுக்கப்பட வேண்டும். தவறினால் அதிகாரப்பகிர்வு மற்றும் ஜனநாயக நடைமுறையில்
கொழும்பு, ஹவலொக் டவுனில் நிறுத்தி வைக்கப்பட்ட காரொன்றிலிருந்து சடலமொன்றை கண்டெடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இன்று மாலை 5 மணியளவில் எமக்கும் கிடைத்த தகவலொன்றின்படி கொழும்பு, ஹவலொக் டவுனில் அமைந்துள்ள தனியார் சுப்பர் மார்க்கெட் ஒன்றிற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிவப்பு நிற காரொன்றிலிருந்து ஆணொருவரின் சடலத்தை கண்டெடுத்தோம்.ஜனாதிபதி மகிந்த, பிரணாப் முகர்ஜி, மன்மோகன் சிங் ஆகியோரை எதிர்வரும் 20ம் திகதி சந்திப்பார்: பீரிஸ்
இந்தியாவுக்கான விஜயத்தினை மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, இந்திய புதிய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மற்றும் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட பலரை சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார் என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
11 செப்., 2012
அரசாங்கத்துடன் இணைந்து மு.கா. கிழக்கில்ஆட்சியமைத்தால் அது முஸ்லிம் சமூகத்துக்கு செய்யும் துரோகம்: அசாத்சாலி
அரசாங்கத்தோடு இணைந்து ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கில் ஆட்சி அமைக்குமென்றால் அது முஸ்லிம் சமூகத்திற்கு செய்யும் துரோகமாகும் ௭ன முன்னாள் கொழும்பு மாநகரசபை பிரதி மேயரும், கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் காங்கிரஸில் போட்டியிட்ட வேட்பாளருமான
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)