இலங்கை விவகாரம் தொடர்பிலான பிரேரணை ஒன்று ஐக்கிய அமெரிக்க பாராளுமன்றில் முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த பிரேரணையின்படி இலங்கையின் தற்போதைய நிலை குறித்து அமெரிக்க பாராளுமன்றில் விவாதம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசேடமாக மீள்குடியேற்றம், உள்ளக புனர்வாழ்வு, புனரமைப்பு, நல்லிணக்கம் போன்றவை பற்றி விவாதிக்கப்படவுள்ளதாக தெரியவருகிறது.
இந்த பிரேரணை மூலம் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரை நிறைவேற்றம் குறித்தும் அரசியல் தீர்வு குறித்தும் இலங்கைக்கு வலியுறுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.