புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 டிச., 2012



இமாச்சலப் பிரதேசத்தில் 37 தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலை
முதல்வர் பிரேம்குமார் துமல் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெறும் இமாச்சலப் பிரதேசத்தில் மொத்தமுள்ள 68 தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த நவம்பர் 4ஆம் தேதி நடைபெற்றது. இத்தேர்த-ல் 74.6 சதவீத வாக்குகள் பதிவாகின.

வாக்கு எண்ணிக்கை இன்று (20.12.2012) காலை தொடங்கியது. காங்கிரஸ் கட்சி 37 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. பாஜக 22 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இதர கட்சிகள் 5 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. 
இலங்கை கஅரசின் உயரிய விருதான கலாபூஷணம்  பட்டமளிப்பின் பின்னர் மயில்வாகனத்துடன் (எழுத்தாளர் ஒலிபரப்பாளர் ஊடகவியலாளர் ) என் இனிய நண்பர் தம்பியையா தேவதாஸ் -சிவ-சந்திரபாலன் 

லண்டனில் சிங்கக் கொடியை பள்ளிக்கூடத்தில் இருந்து அகற்றிய 14 வயது மாணவன் !


தேசிய அவசர நிலைமையை பிரகடனப்படுத்தக் கோரிக்கை
இயற்கையில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக நாட்டில் பல பாகங்களிலும் பெய்து வரும் அடைமழையை அடுத்து ஏற்பட்டுள்ள மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கால்  மக்கள் பெரும் சிரமங்களுக்கு முகம் கொடுத்துவருகின்றனர்.இதனைக் கருத்தில் கொண்டு தேசிய அவசர நிலைமையை பிரகடனப்படுத்துமாறு ஐ.தே.க வலியுறுத்தியுள்ளது.ஐக்கிய தேசியக்கட்சியின் பிரதித்தலைவர் சஜித் பிரேமதாஸ, அரசிடம் இந்தக் கோரிக்கைவிடுத்துள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக இதுவரையில் 23 பேர் உயிரிழந்துள்ளதுடன் 36 பேர் காயமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, 15 பேர் காணாமல் போயுள்ள நிலையில், 68 ஆயிரத்து 904 குடும்பங்களைச் சேர்ந்த 2 இலட்சத்து 66 ஆயிரத்து 740 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதில் 5 ஆயிரத்து 231 குடும்பங்களைச் சேர்ந்த 18 ஆயிரத்து 753 பேர் 102 தற்காலிக நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.இந்நிலையில், 358 வீடுகள் முழுமையாகவும் ஆயிரத்து 907 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக அந் நிலையம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

சீரற்ற காலநிலை : புத்தளம் மாவட்டத்தில் 10 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் இடம்பெயர்வு

தற்போது நாட்டிலேற்பட்டுள்ள காலநிலை மாற்றத்தையடுத்து ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் புத்தளம் மாவட்டத்தில் 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்துள்ளதாக புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய பணிப்பாளர் கேர்ணல் ரணவீர தெரிவித்தார்.

இலங்கை வந்துள்ள இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் பிக்ரம் சிங் நாளை ஜனாதிபதி மகிந்த ராஜ பக்ஷ மற்றும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ ஆகியோரை சந்திக்கவுள்ளார்.இதேவேளை, மூன்று நாட்கள் இலங்கையில் தங்கியிருக்கும் இந்திய இராணுவத் தளபதி வட பகுதி உட்பட நாட்டிலுள்ள பிரதான இராணுவத் தளங்களுக்கு விஜயம் செய்யவுள்ளார்.இந்நிலையில் வெள்ளிக்கிழமை வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாமுக்கு விஜயத்தை மேற்கொள்ளும் ஜெனரல் பிக்ரம்சிங், அங்கு புனர்வாழ்வு பெறும் முன்னாள் புலிப்போராளியான தமிழினி உட்பட ஏனைய முன்னாள் புலிப் போராளிகளையும் சந்தித்து உரையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சிலாபம் முன்னேஸ்வரம் குளம் உடைப்பெடுத்ததால் அப்பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதேவேளை பொலிஸார் மற்றும் கடற்படையினரின் உதவியுடன் வள்ளங்கள் மூலம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை மீட்டெடுத்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.


மன்னார் சௌத்பார் பிரதான வீதியில் அமைந்துள்ள இரண்டு மதுபான சாலைகளையும், கள்ளு விற்பனை நிலையத்தையும் உடன் அகற்றக்கோரி மன்னாரில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று இன்று இடம்பெற்றது.

பனங்கட்டுக்கோட்டு மீனவர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 7 கிராம மக்கள் கலந்துகொண்டு தமது எதிர்ப்புகளை வெளியிட்டனர்.



இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய இராணுவத் தளபதி பிக்ரம் சிங், இலங்கை இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரியவை சந்தித்துள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான இராணுவ உறவுகளை மேலும் வலுப்படுத்திக் கொள்ளும் வகையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இராணுவத் தலைமையகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஜேவிபி தலைவர் உயிருடன் எரிக்கப்பட்டது பற்றி ஒரு சாட்சியம்.


சிறிலங்கா இராணுவத்தின் மீதான குற்றப்பட்டியல் தமிழர்கள் மீதான வன்முறை என்பதோடு மட்டும் மட்டுப்படுத்திவிட முடியாது.
சிறிலங்காவிற்கு வெளியே, ஐ.நா.அமைதி

ஸ்.பி.பியே சின்ன பட்ஜெட் படங்கள் என்றாலோ, இன்னும் வளர்ந்து வெற்றி பெறாத இசையமைப்பாளர்கள் என்றாலோ 'ஐம்பதாயிரம் கொடுங்க. அது போதும்' என்று இன்முகத்தோடு பெற்றுக் கொள்கிறாராம். ஆனால் ஹரிகரன், பிரசன்னா, மது பாலகிருஷ்ணன் போன்ற முன்னணி பாடகர்கள் யாரும் இவ்வித சலுகைகளை அளிப்பதே இல்லை. அவர்களுக்கென தனி ரேட் இருக்கிறது. அதை அவர்கள் குறைப்பதும் இல்லை. 
சின்ன பட்ஜெட் படங்களுக்கும் பெரிய பட்ஜெட் படங்களுக்கும் ஒரே சம்பளத்தை கேட்டு வாங்குகிறார்கள் சினிமா தொழிலாளர்கள்.
இன்று 19.12.12 கோபாலகிருஷ்ணன் கழுத்து அறுக்கப்பட்டு நிலையில் கொலை செய்யபட்டுள்ளார்


சாதிவெறியின் இன்னொரு உக்கிரம்.
கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யபட்ட
தலித் இளைஞன் கோபாலகிருஷ்ணன்.
சாதிவெறியின் இன்னொரு உக்கிரம். 
கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யபட்ட 
தலித் இளைஞன் கோபாலகிருஷ்ணன்.

கடலூர் மாவட்டம் சேத்தியார் தோப்பு சென்னிநத்தம் சார்ந்த கோபாலகிருஷ்ணன் (தலித் இளைஞன் )அதே மாவட்டத்தை சார்ந்த பரதூர் சாவடி சார்ந்த கவிதா (வன்னியர் பெண்மணி )ஸ்ரீமுஷ்ணம் ஆசிரியர் பயிற்சி பள்ளியில் இருவரும் படித்து வந்து இருகின்றனர் .இருவருக்குள் காதல் மலர்ந்தது . நான்கு நாட்களுக்கு முன்னாடி கவிதா தன் வீட்டுக்கு செல்ல பேருந்து வராததால் கோபால் கிறிஷ்ணனின் இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்கு விடும்படி கேட்டுள்ளது .கோபால கிருஷ்ணனும் வீட்டிற்கு அழைத்து சென்று இருக்கிறான் .வீட்டில் இருத்த அவளின் பாட்டி என்ன சாதி என்று கேட்டு இருக்கிறார் அவன் தலித் என்று சொன்ன உடனே அடித்து இருக்கிறார் அவளின் பாட்டி .நான்கு நாள் ஆகியும் அவன் காணவில்லை இன்று 19.12.12 தேடிபார்த்தால் கழுத்து அறுக்கப்பட்டு கோபாலகிருஷ்ணன் கொலை செய்யபட்டுள்ளார் .

19 டிச., 2012


பாரிசில் பரிதி அவர்களின் 45 ஆம் நாள் நினைவில் மாபெரும் அமைதிப் பேரணி! (காணொளி இணைப்பு)

அன்றையதினம் பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழுப் பொறுப்பாளர்  பரிதி அவர்களின் நினைவு சுமந்த பாடல் இறுவெட்டு வெளியீடும் இடம்பெறவுள்ளது.கடந்த 08.11.2012 அன்று பிரான்சில் சிறிலங்கா அரச பயங்கரவாதத்தால் படுகொலை செய்யப்பட்ட

கணவரின் சகோதரருடன் கள்ளத்தொடர்பு. கள்ள காதலுக்கு இடைஞ்சலாக இருந்த கணவனை 11 துண்டுகளாக வெட்டிக் கொன்ற மனைவி.மும்பையில் பரபரப்பு.

மும்பையில் கணவரின் சகோதரருடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த பெண் தனது கணவரை ஆள் வைத்து கொன்று உடலை 11 துண்டுகளாக வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாலியல் ரீதியாக துன்புறுத்தி பின்னர் மனநோயாளி என்று அனுமதித்துள்ளார்கள் 
பலவந்தமாக இராணுவத்தில் இணைக்கப்பட்ட 100 பெண்களில் 21 பெண்களுக்கு என்ன நடந்தது ? 30 பெண்களை கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதித்தோம் என்று இராணுவம் கூறியது பொய் ! அப்படி என்றால் 9 பெண்களுக்கு என்ன நடந்தது ? பாதிக்கப்பட்ட பெண் ஒருவரின் தந்தை வழங்கிய இரகசியத் தகவல் ! இந்தப் பெண்கள் கற்பழிக்கப்பட்டிருக்கலாம் ! 

இராணுவத்தினர் தமிழ் பெண்கள் 100 பேரை தாம் தமது படையணியில் இணைத்திருப்பதாக திடீர் என்று அறிவித்த விடையம் யாவரும் அறிந்ததே.
கொழும்பு – பதுளை இரவுநேர தபால் ரயில் ஒஹிய பகுதியில் தடம்புரண்டுள்ளது நுவரெலிய- பதுளை வீதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது . இலங்கையில் கடந்த சில தினங்களாக கடும் சீரற்ற காலநிலை காணப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

இந்திய ஜெனரல் யாழ் விஜயம்: பாக் உளவுத்துறை இயங்குவது தொடர்பாக ஆராய்வாரா இந்திய இராணுவத் தளபதி, ஜெனரல் பகரம் சிங் இன்று கொழும்பு செல்லவிருக்கிறார். இன்று முதல் 22ம் திகதிவரை அவர் இலங்கையில் தங்கியிருப்பார் என்று

இலங்கை இராணுவத்தின் தகவலின் அடிப்படையில் தமிழகத்தில் ஈழத்தமிழ் அகதிகள் நால்வர் கைது!


சிறீலங்கா படையினரின் புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில் சென்னை பல்லாவரம் பகுதியில் இருந்த ஈழத்தமிழ் அகதிகள் நால்வர் கியூபிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து தமிழகத்தில் இருந்து கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில்

புலிகளின் தலைவர்களை பாதுகாப்பாக வெளியேற்ற அமெரிக்கா முயன்றது - இராணுவ ஆய்வாளர் சாமிந்ர பெர்னான்டோ!


போரின் இறுதிக்கட்டத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரை பாதுகாப்பாக வெளியேற்றுவது தொடர்பான களநிலவரங்களை மதிப்பிடுவதற்கு அமெரிக்கப் படை அதிகாரிகளின் நிபுணர் குழுவொன்று சிறப்பு விமானத்தில் இரகசியமாக

ad

ad