புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 டிச., 2012


லண்டனில் சிங்கக் கொடியை பள்ளிக்கூடத்தில் இருந்து அகற்றிய 14 வயது மாணவன் !

பாதுகாப்புக் கருதி, இச் சிறுவனின் பெயரையும், அவன் பயிலும் பள்ளிக்கூடத்தின் பெயரையும் நாம் இங்கே வெளியிடவில்லை. இதனை ஒரு முன் உதாரணமாகக் கொண்டு ஏன் ஏனைய தமிழ் இளையோர்கள் இவ்வாறு கொடிப் புறக்கணிப்பில் ஏன் ஈடுபடக் கூடாது ? சமீபத்தில் ரூட்டிங்கில் உள்ள பாடசாலை ஒன்றில் நவம்பர் மாதம் 27ம் திகதி காலை, அசம்பிளி நடந்தவேளை, அன்றைய தினம் அதனை முன் நின்று நடத்திய தமிழ் சிறுவன் ஒருவர், கொல்லப்பட்ட தமிழ் மக்களின் அஞ்சலி நிகழ்வு இன்று, அவர்களுக்காகவும் நாம் 1 நிமிடம் மெளனமாக நிற்ப்போம் என்று கூறியுள்ளார். அப் பள்ளி மாணவர்கள் அனைவரும் அன்றைய தினம் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்கள். இலங்கையை விட்டு பல்லாயிரக் கணக்கான மைல் தொலைவில் நாம் வாழ்ந்தாலும் தமிழர் என்ற உணர்வு எம்மை விட்டுப் பிரியப்போவது இல்லை. அதிலும் இளையோர்கள் இப் போராட்டத்தை தமது கைகளில் எடுத்து வழி நடத்தவேண்டும். இதற்கு பெற்றோர்கள் தடைசொல்லாது இருக்கவேண்டும். புலம்பெயர் நாடுகளில், இளையோர்கள் பாதைமாறிச் செல்ல, மேற்கத்தைய பாணியில் அவர்கள் வளர்க்கப்படுவதே காரணமாக அமைந்துள்ளது.
வெள்ளிக்கிழமைகளில் கோவில், ஞாயிற்றுக் கிழமைகளில் தேவாலையம், சனிக்கிழமை தமிழ் பள்ளிக்கூடம், என்று சென்று வரும் இளையோர்கள், பெரும்பாலும் நல்ல வழியில் நடத்தப்பட்டு வருவதாககவும், அவர்கள் தமிழ் கலாச்சாரங்களோடு இணைந்திருப்பதால், பிற கலாச்சாரப் பழக்கங்களை பின்பற்றுவது இல்லை என்றும் பெற்றோர்கள் தெரிவிக்கிறார்கள். எனவே அவர்களின் ஈடுபாடு பிழையான வழியில் செல்லாமல் இருக்கிறது. இதுவே ஈழத் தமிழர்களின் அடையாளங்களைப் பாதுகாக்க எதிர்காலத்தில் உதவியாக அமையும்.

ad

ad