அதிரும் பிரித்தானியப் பாராளுமன்றம்
பிரித்தானியாவில் இன்று காலை 10.00 மணிக்கு உலகத் தமிழர் பேரவையின்(GTF) 3வது கூட்டம் ஆரம்பமாகியுள்ளது. நடைபெறும் இக் கூட்டத்திற்கு பிரித்தானிய உதவிப் பிரதம மந்திரி கலந்துகொள்வது , பிரித்தானியத் தமிழர்களை பெருமிதமடையச் செய்துள்ளது. இலங்கை அரசாங்கமானது இக் கூட்டத்தை எப்படியாவது தடைசெய்யவேண்டும் எனக் கோரியதும் அறியப்பட்ட விடையம் ஆகும். குறிப்பாக பிரித்தானியாவில் நடைபெறும், மகாராணியின் கூட்டம், பாராளுமன்ற அமர்வுகளுக்கே 3 கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொள்வது வழக்கம். ஆனால் பிரித்தானிய வரலாற்றிலேயே இது தான் முதல் தடவையாக, 3 கட்சிகளின் உயர்மட்ட தலைவர்கள் தமிழர்களின் கூட்டத்தில் கலந்துகொள்கிறார்கள்.