அனுமதி பெற்ற எல்லா செய்தியாளர்களுக்கும் இலங்கை வீசா கொடுக்க வேண்டும்!- பிரிட்டன் தெரிவிப்பு
இலங்கையில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடக்கவுள்ள காமன்வெல்த் மாநாட்டுக்குச் செல்ல கொமன்வெல்த் செயலகத்தின் அனுமதியை பெறுகின்ற எல்லா வெளிநாட்டு ஊடகவியலாளர்களுக்கும் இலங்கை அரசாங்கம் வீசா அனுமதி கொடுக்க வேண்டும் என்று பிரிட்டன் தெரிவித்துள்ளது.