திருகோணமலை மாவட்டத்தில் இருந்து ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் இருவரும்,இலங்கை தமிழ் அரசு கட்சியில் ஒருவரும்,பொதுஜன பெரமுனவில் ஒருவரும் நாடாளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ளார்கள்.
-
7 ஆக., 2020
பதுளையில் செந்தில் தோல்வி! - வடிவேல் சுரேஸ், அரவிந்தகுமார் வெற்றி
Jaffna Editor.
நாடாளுமன்றத் தேர்தலில் பதுளை மாவட்டத்தில் நிமல் சிறிபால 141,901 அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ள நிலையில், இதொகாவின் செந்தில் தொண்டமான் தோல்வியடைந்துள்ளார்.
நுவரெலியவில் 5 தமிழ்ப் பிரதிநிதிகள்! - ஜீவன், திகா, ராதாகிருஷ்ணன் வெற்றி
Jaffna Editor
நாடாளுமன்றத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் ஜீவன் தொண்டமான் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றுள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிட்ட ஜீவன் தொண்டமான் 1
மரண அறிவித்தல் /கண்ணீர் அஞ்சலி
சுப்பிரமணியம் குகதாசன் புங்குடுதீவு 6 /கனடா
வேலணை மத்திய கல்லூரியில் எங்களோடு விடுதி வாழ்க்கை வாழ்ந்த தோழன்.விடுதியிலும் கல்லூரியிலும் நடைபெறும் அத்தனை விழாக்களிலும் நாங்கள் ஒரு குழுவாக இயங்கி நாடகம் ,வில்லுப்பாட்டு என்றெல்லாம் கலையுலகை அத்திவாரமிடட கோலங்கள் என் கண்முன்னே கண்ணீரை வரவைக்கிறது என் நண்பனே . கல்வி உறக்கம் இவை இரண்டை தவிர மீதி நேரம் முழுவதுமே கலை.சமூகசேவை ஊரில் அக்கறை என்றே தான் எங்கள் பேச்சும் செயலும் இருந்தது .வெளிக்கிடடி விசுவமடு நாடகத்தை பிரதி பண்ணி எத்தனை தடவை எத்தனை இடங்களில் களமாடி உள்ளோம் ,எத்தனை நாடகங்கள் எத்தனை நகைச்சுவை அரங்கேற்றங்கள் ,வில்லிசை நிகழ்ச்சிகள் . நீ என் நெறியாள்கை வெறிக்கு கிடைத்த கருங்கல் நண்பா உன்னை செதுக்கி செதுக்கியே உயர்ந்தவன் நானும் நண்பர்களும் தான் .அத்தனை வேடத்தி லும் நீ தந்த நடிப்பு உச்சம் விடுதி ஆசிரியர்களையெல்லாம் உருகவைக்கும் . எங்கள் ஏக்கத்தின் அவதாரம் தானே இன்று கலங்கரை விளக்காக ஒளிரும் ஐங்கரன் சனசமூக நிலையம் .விதி என் செய்வேன் சுமார் 45 வருடங்களாகியும் உன்னை தரிசிக்க முடியா மல் விடை பெற்று விட்டாய் . இன்னொரு பிறப்பு இருந்தால் வா நண்பா சேர்ந்தே சந்திரகலாமணி வில்லிசை செய்வோம் . சகோதரன் கோகிலதாசன் ,திருச்செல்வம், பஞ்சலிங்கம், ஜெயதாசன் ,செல்வா ,மகேஸ்வரன் ,(கேசவன்) நாமெல்லாம் கூடுவோம் ,பாடுவோம் , நாடகம் ஆடுவோம் எழுந்து வா என்னுயிரே
rபாராளுமன்றம் செல்வோர் விபரங்கள்
Jaffna Edito
நடைபெற்று முடிந்த 2020 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கான அனைத்து மாவட்டங்களுக்குமான விருப்பு வாக்கு விபரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.
அதன் அடிப்படையில் தேர்தலில்
யாழ் மாவட்ட விருப்பு வாக்கு விபரங்கள்
Jaffna Editor
2020 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கான யாழ் மாவட்டத்திற்கான விருப்பு வாக்கு விபரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.
கொழும்பு மாவட்ட விருப்பு வாக்கு விபரங்கள்
2020 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கான கொழும்பு மாவட்டத்திற்கான விருப்பு வாக்கு விபரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.
வன்னி மாவட்ட விருப்பு வாக்கு விபரங்கள்குலசிங்கம் திலீபன் - 3,203 வாக்குகள்
Jaffna Editor
2020 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கான வன்னி மாவட்டத்திற்கான விருப்பு வாக்கு விபரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.
அம்பாறைமொவட்ட தமிழ்மக்கள் மீண்டும் அரசியல் அநாதைகளாக்கப்பட்டுள்ளனர்.
Jaffna Editor திகாமடுல்ல மாவட்டத்தில் இம்முறை நான்கு முஸ்லிம் உறுப்பினர்களும் மூன்று சிங்கள உறுப்பினர்களம்
5 ஆக., 2020
யாழ்ப்பாணத்தில் கள்ள வாக்கு போட்ட மர்ம நபர் யார்?செய்யப்பட்டுள்ளமை தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Jaffna Editor
இதனால் குறித்த தொகுதியில் வாக்களிக்க வந்தவர்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பிற்பகலுக்கு பின்னர் தபால் மூல பெறுபேறு
Jaffna Editor
தபால் மூல வாக்களிப்பின் தொகுதி மட்டத்திலான முதலாவது உத்தியோகபூர்வ பெறுபேற்றை நாளை நண்பகல் 12.00 மணிக்கு பின்னர் வெளியிடக்கூடியதாக இருக்கும் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மாற்று அணிகள் வாக்கு வங்கியை எங்கே திரட்டுவது ? எது யதார்த்தம் ?எது சாத்தியம் ? தீவகம் ஒரு சாட்சி .
மாற்று அணிகள் என்று புறப்படடவை முன்வைக்கும் கோட்பாடுகள் என்ன ?கூட்டமைப்போடு என்ன முரண்பாடுகள் கண்டு வெளியேறினார்கள் ? நீங்கள் புறப்படட நோக்கம் அதற்கண வேலைத்திட்டங்களை ஒழுங்காக செய்து கொண்டிருக்கிறீர்களா ? ஆம் எனில் அப்போ என் உங்களுக்கான வாக்கு வாங்கி ஒன்றை நிரந்தரமாக கட்டி எழுப்ப முடியவில்லை ? நீங்கள் எடுத்துக்கொண்ட காலம் போதுமானது தானே .யாழ் இடம்பெயர்வுக்கு பின்னர் பெரும்பாண்மை கட்சிகளும் அடிவருடிகளாக இருந்த ஈபிடிபி கட்சியும் எமது மண்ணை ஆக்கிரமித்து தமக்கென எதோ ஒரு வழியில் வாக்கு வங்கியை தக்க வைத்துக்கொண்டன. 1991 க்கு பின்னர் பிறந்த யாழ் மாவடட தமிழன் யாரும் விடுதலை உணர்வோ தனிநாட்டு என்னமோ இல்லாது வளர ஒழுங்காக திடடமிட்டு வளர்த்தெடுத்தான் . அதன் நிமிர்த்தமே அவனுக்கு இப்போதும் வாக்குகள் விழுந்துகொண்டிருக்கின்றன விடுதலைப்புலிகளின் காலத்துக்கு முன்னர் வடக்கில் பெரும்பாண்மை காட்சிகள் ஒரு வேட்ப்பாளரை கூட தேர்தலில் நிறுத்தாது நிறுத்தினாலும் வாக்குகள் கிடைக்காது அந்த உணர்வின் எழுச்சி அத்திவாரத்தை உடைத்து வைத்திருந்தார்கள் இடம்பெயர்வுக்கு பின்னர் இந்த அடிவருடிகள் . பின்வந்த காலத்தில் கூட்ட்டமைப்பினர் உள்ளே நுழையவோ தேர்தலில் பிரசாரம் செய்யவோ பகிரங்கமாக வன்முறை மூலம் தடை போதுதான் உதாரணம் அல்லைப்பிட்டியில் வைத்து கூடட மைப்பினரை தாக்கிய சம்பவம் .ஈபிடிபி தீவகத்தில் தனது முழு அரச சக்தி பலத்தை கொண்டு இது தமது கோடடை என்று சொல்லிக்கொண்டு கைப்பற்றி கோலோச்சி வந்த காலம் அது .யாரும் நம்பமுடியாத அளவுக்கு அந்த அசுரர் கோடடையை வியூகம் அமைத்து உடைத்து மங்காவை செய்த கட்சி கூட்டமைப்பு மட்டுமே . 2013 க்கு பின்னர் எங்கெல்லாம் தனக்கு வாக்கு வங்கியை வேலை வாய்ப்பு வீட்டுத்திடட்டும் வன்முறை என சில சலுகை மாயையை காட்டி உருவாக்கி வைத்திருந்தது அங்கெல்லாம் கூட்ட்டமைப்பு ஈபிடிபி யை விட முன்னணி வெற்றியை பெற்றது .இவ்வாறு தான் வாக்கு வங்கியிற் வளர்ந்திருக்க வேண்டும் மாற்று அணிகள். தீவகத்தில் கடந்த பிரதேச சபை தேர்தலில் கூட எதிரியானவன் எல்லாவித சக்திகளையும் பாவித்து சில பகுதிகளில் வெற்றி கண்டான் . நயினாதீவு அனலைதீவு எழுவைதீவு வேலணை சில பகுதிகள் காவலூர் என இன்னமும் கால் பதித்துள்ளான் மாற்று அணி என மார்தட்டுவோர் உங்களால் என் அந்த பகுதிகளில் நுழைந்து அவனது வாக்கு வங்கியை உடைக்க முடிய வில்லை ,கொள்கை வழியில் உங்கள் எதிரி சிங்களமா கூடடமைப்பா ? ஐ தே க ஸ்ரீ ல சு க மொட்டு அணி ஈபிடிபி என்றெல்லாம் எதனை பிரிவுகளாக எதிரி வாக்கு வங்கியை வைத்திருக்கிறான் உங்களால் அவனது வாக்கு வங்கியிற் கைப்பற்ற போராட முடியவில்லையே கூட்டமைப்பின் வாகு வங்கியை தான் பிரிப்போம் என்று பிரசாரம் செய்கிறீர்கள் . பிரிப்பதோடு எதிரியின் வெற்றிக்கும் காரணகர்த்தாவாக இருக்கிறீறீர்கள் . எதிரியின் வாக்குப்பலத்தை கைப்பற்றி கூட்ட்டமைப்புக்கு சவாலாக சமமாக முன்னேறலாம் . அப்புறம் கூட்ட்டமைப்பும் நீங்களும் தானே கோலோச்சலாம் .தீவகத்தில் ஒரு மாவீரர் நிக்கலவை கூட நடத்தமுடியாமல் இராணுவ கடல் படை ல த்தின் நடுவிலே கூட்ட்டமைப்பும் செண்பகம் அமைப்பும் சந்தித்த சோதனைகளை மக்கள் அறிவார்கள் . கை கட்டி பார்த்துக்கொண்டிருந்தீர்களே சாட்டியில் துயிலுமில்லம் அமைத்து சாதனை படைக்கும்வரை எங்கே இருந்தீர்கள் ஆசனம் வேண்டும் பதவி வேண்டும் பொது மட்டுமா மக்கள் வேண்டும் .முடிந்தால் மிச்சம் இருக்கும் எதிரியின் பலத்தை அடித்து உடையுங்கள் முட்டி மோதி மக்கள் மனதில் இடம் பிடியுங்கள் .இப்போதும் எதிர்க்கு ஆதரவு கொடுப்போரின் மனசில் இடம் பிடியுங்கள் அவர்கள் மனதை மாற்ற முயட்சியுங்கள் மாற்ற முடிந்தால் தான் நீங்கள் மாற்று அணி
4 ஆக., 2020
3 ஆக., 2020
Jaffna Editorவிமர்சிக்கப்படும் கூட்டமைப்பு . விடை காணா வினாக்களா ? எஸ். எஸ். தீவகன்
வினா 5- மாற்று அணியில்லாத காலத்தில் அரச சார்பு ,பெரும்பான்மை சார்பு சக்திகளை முறியடிக்க முடிந்ததா ?
வினா 5- மாற்று அணியில்லாத காலத்தில் அரச சார்பு ,பெரும்பான்மை சார்பு சக்திகளை முறியடிக்க முடிந்ததா ?
விடை 5- வடக்கு இடம்பெயர்வின் பின்னர் டக்லஸ் போன்றோரின் ஆயுத முனை அரசியலில் மக்கள் பயந்து வாய்மூடிகளாக வாக்கு போடுடா காலம் . வேலைவாய்ப்புக்களை வழங்கி தமக்கென ஒரு இளம் ஆயுத கலாசார இளைஞர் அணியை வைத்திருந்த காலம் . தீவகம் போன்ற இடங்களில் தங்கள் கோடடை அசைக்க முடியாது என்று வீரம் பேசிய காலம் .அத்தனையையும் கூட்டமைப்பு எதிர்த்தோடி எல்லா தேத்தல் தொகுதிகளிலும் அவர்களை பின்தள்ளி வெற்றிவாகை சூட்டியுள்ளது டக்ளஸ் வியாஜயகலா போன்றோர் கூட முழு மாவடட வாக்குகளையும் அன்கொன்றும் இன்கொன்றுமாக கூட்டி அல்லி மொத்தாமாக்கி கிடைத்த ஒவ்வொரு உறுப்பினர் தான் . இப்போதைய விகிதாசார டெஹ்ரதல் முறையில் இது சாத்தியம் .ஒவ்வொரு டெஹ்ரதல் தொகுதியிலும் கூட்ட்டமைப்பு முதலிடத்தை அடைந்த நிலை பழைய தேர்தலாக இருந்தால் அத்தனை தொகுதிகளில் வெற்றி அடைந்திருக்கும் இனி அரசியல் சர்வதேச பார்வையில் கூட்ட்டமைப்பு ஒரு மாபெரும் சக்தியாக தமிழரின் ஒரேயொரு அங்கீகரிக்கப்படட கட்சியாக பார்க்கப்பட்ட்து எல்லா ராஜா தந்திரிகளும் பெரும்பான்மை அரசியலவாதிகளுமே கூட்டமைப்புக்கு உயர் அந்தஸ்தையும் முன்னுரிமையையும் கொடுத்து பார்த்த காலம் அது . வெளிநாட்டு பிரதிநிதிகள் ஜனாதிபதியை சந்துக்கும் அதே வேளை கூட்டமைப்பினரையும் சந்தித்தே செல்லவும் நிலை . இனிவரும் காஙக்ளில் கூட்ட்டமைப்பு உடைக்கப்பட்டு மாற்று அணியினரும் ஓரிரு உறுப்பினர்கள் கிடைக்கபெற்றிந்தால் ஏகோபித்த தமிழரின் அணி எதுவென்று கணிப்பார்கள் .யாரோடு பேசுவது இவரை பார்ப்பது . ஆக தலைவர் மன்னித்து மறந்து எல்லா காட்சிகளையும் ஒன்றாக்கி வாய்த்த நோக்கம் மீண்டும் பல கட்சிகளாகி அதே வருடத்த்க்கு பின்னோக்கி சென்று நிக்கப்போவதே உண்மை
விமர்சிக்கப்படும் கூட்டமைப்பு . விடை காணா வினாக்களா ? எஸ். எஸ். தீவகன்
வினா 4- நல்லாட்சி அரசில் கூட்டமைப்பு பெற்ற பலன்கள் என்ன ?
வினா 4- நல்லாட்சி அரசில் கூட்டமைப்பு பெற்ற பலன்கள் என்ன ?
விடை 4- நல்லாட்சி அரசு காலத்தில் கூட்டமைப்பு விரும்பி இருந்தால் அரசோடு இணைந்து அமைச்சு பதவிகளை பெற்று டக்ளசின் பாணியில் மக்களிடம் வாகு வங்கியை சேர்க்கும் நோக்கில் வேலைவாய்ப்பு அபிவிருத்தி என்று தாராளமாக செய்திருக்கலாம் .ஆனால் அமைச்சு பதவிகளை பெற்றால் அரசோடு இணைத்ததுக்கு சமம் . அவர்களோடு நறுக்க பேரம் பேசவோ தீர்வுதிடடம் பற்றி உயர்தர கேள்விகளை முன்வைக்கவோ முடியாது .இதனால் எந்தவொரு வேளையிலும் தீர்வு கோரி வாதாடுவதில் பின்னிக்கவில்லை . மாறாக அபிவிருத்தி நடவடிக்களுக்கும் தாராளமயமானா நிதி ஒதுக்கீடுகளை பெற்றார்கள் . பாராளுமன்ற உறுப்பினர் நிதி கம்பெரேலியா நிதி என கிடைக்கப்பெற்று சிலவருட காலத்திலேயே வீதிகள் மின்விளக்கு பொருத்துதல் சனசமூக நிலைய உதவிகள் வாவாதார நிதியுதவிகள் என கிராமங்கள் தோறும் செய்துள்ளது கூட்ட்டமைப்பு .இவற்றைக்கூட டக்ளஸ் எய்தார் அங்கஜன் செய்தார் என்று போய் பிரசாரங்களை முன்னெடுத்து வருவது கவனத்துக்குரியது . பல அரசியல் கைதிகள் விடுதலை இராணுவ முகாம்கள் மூடல் கிராமங்கள் விடுபட்டால் என்பவனும் ஏராளமாக நடைபெற்றுள்ளன பலவருட காலமாக அடிவருடிகள் காலத்தில் செய்யமுடியாத அளவுக்கு நிறையவே செய்துள்ளது காணக்கூடியதாக உள்ளது .ஒவ்வொரு கிராமமும் 5 வருடனாளின் முன்பிருந்த நிலையை இப்போது ஒப்பிட்டு பார்த்தல் புரியும்
2 ஆக., 2020
விமர்சிக்கப்படும் கூட்டமைப்பு . விடை காணா வினாக்களா ? எஸ். எஸ். தீவகன்
வினா 2-சுமந்திரன் இப்போதைய ஸ்ரீதரன் போன்ற விடுதலை போன்ற எதிர்ப்பாளர்களை ஏன் வைத்துள்ளீர்கள் ?
வினா 2-சுமந்திரன் இப்போதைய ஸ்ரீதரன் போன்ற விடுதலை போன்ற எதிர்ப்பாளர்களை ஏன் வைத்துள்ளீர்கள் ?
விடை 2- சுமந்திரன் ஆரம்பத்தில் நல்ல சடடவலராகவும் மும்மொழி திறன் கொண்டவராகவும் கட்சியில் நுழைந்தார் . அவருக்கு தேசியப்பட்டியல் நியமனம் வழங்கப்பட்டு உலாவங்கப்படார் .அப்புறம் அடுத்த தேர்தலில் அவரை மக்கள் முன் சென்று வேறுதான் வரவேண்டும் என தேர்தலில் பங்கு பற்றி மக்கள் தான் அவரை தெரிவு செய்தனர் .பின் வந்த காலங்களில் புலிகள் எதிர்ப்பு ஒவ்வாமை கருத்தியலை பகிரங்கமாக பல இடங்களில் வெளிப்படுத்தினார் சிலவேளை மழுப்பல் பதில்களையும் வாரி வழங்கினார் ஆனாலும் இனிவரும் காலங்களில் இவரால் கட்சிக்கு ஆபத்தான கட்டிடம் என்பதால் கட்சிக்குள்ளேயே விமர்சனங்கள் பகிரங்கமாக முன்வைக்கப்பட்டு மக்கள் முன் விளக்கம் கோரப்படுகின்ற து இது கட்சிக்குள் உள்ளே உள்ள ஜனநாயக மரபு இப்போது மக்கள் முன் நிறுத்தி வைக்கப்பட்டுளார் மக்கள் அவரை நிராகரிக்கவேண்டும் அடுத்து ஸ்ரீதரன் .எல்லோரும் கட்சிக்குள்ளே வரும்போது நல்ல பிள்ளைகளாக தான் வருவார்கள் கட்சி செல்வாக்கு கட்சி வாக்கு வாங்கி என வளர்ந்து முகவரி தேடிக்கொண்ட பின்னர் தான் சுரூப வெளிவரும் அப்படி தான் ஐவரும் இவருக்கென்று பெரிய வாக்கு வங்கியை உருவாக்கிய இறுமாப்ப்பில் சுமந்திரனோடு அணி சென்ற்து புலி எதிர்ப்பு பக்கமாக நடிக்கிறார் .இவருக்கும் மக்கள் பதில் சொல்வார்கள். இவர் வெற்றி பெற்றாலும் 75 கள்ள வாகு பிரச்சினை சனியனாகா மாறும் அதனை விட இவரது ஒழுக்கற்றல் சம்பந்தமாக மாவை நடவடிக்கை எடுப்பதாக வேறு கூறியுள்ளார் யாழ் கிளி மாவட்த்தில் 10 வேட்ப்பாளர் கூட்ட்டமைப்பில் உள்ளனர் மக்கள் சுமந்தினையும் ஸ்ரீதரனையும் தெரிவு செய்யாமல் விடலாம் தானே இது மக்களின் கவனத்துக்கு
விமர்சிக்கப்படும் கூட்டமைப்பு . விடை காணா வினாக்களா ? எஸ். எஸ். தீவகன்
வினா 1.நல்லாட்சி அரசில் என்ன கிழித்தீர்கள் ?
விடை .பலமாக இருந்த புலிகளின் காலத்திலேயே பேச்சுவார்த்தை உலக நாடுகளின் மத்தியஸ்தம் என்று சென்றும் வருடங்களை இழுத்தடித்து தீர்வு கொடுக்காத ஸ்ரீலங்கா புலிகளின் மௌனிப்புக்கு பின்னர் பலவீனமான நிலையில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எளிதில் ஏதும் கொடுக்கவா போகிறார்கள் அதுவும் சில வருடங்களில் . ஒரு அரசு சொற்ப பலத்துடன் இருக்கும்போது தான் பேரம் பேசி இணங்க வைக்க கூடிய காலமாகும் அதனையே விட ஸ்ரீலங்கா வரலாற்றிலேயே இரண்டு பெரிய பெரும்பான்மை கட்சிகளும் இணைத்து ஆட்சி செய்த ஒரே காலம் அந்த காலத்தில் தான் ஏதும் ஒரு தீர்வு கிடைக்குமானால் கிழித்தெறியப்படாத ஒப்பந்தமாகும் நம்பியே கூட்டமைப்பு இணைக்க நிலையை எடுத்தது . சிலர் கூறுவது போல கேட்ட்து தாராவிடடாள் ராஜினாமா செய்யலாமா ? செய்தால் என்ன நடக்கும் பாராளுமன்றில் மகிந்த தரப்பு நல்லாட்சியை கவிழ்க்கும் . அதாவது கூட்டமைப்பு இல்லாவிடின் பெரும்பான்மை கிடைக்கும் கூட்டமைப்பு வைக்கலாவிடினும் இதே நிலைமை தான் உதாரணம் வேலணை பிரதேச சபை தவிசாளர் டேகிர்வில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினை ர் செந்தூரன் வேண்டுமென்றே வாக்கெடுப்பு முடிந்த பின் வந்து மறைமுகமாக ஈபிடிபிக்கு உதவியது போல .ஆக எடுத்தேன் கவிழ்த்தேன் என்று உள்ள உறுப்பினர் பலமும் போய் நல்லாட்சியும் கவிழ்ந்து 1-2 வருடங்களின் முன்னேயே குழப்பநிலை வந்து எமக்கு என்ன பலன் .
அதே தீர்வு கோரிக்கையோடு கம்பெரேலியா பாராளுமன்ற உறுப்பினருக்கான நிதி என்பவதரியும் பயன்படுத்தி போருக்கு பின்னர் அழிந்து போயுள்ள எமது நிலத்தை ஓரளவாது நிவர்த்தி செய்து மக்களை மூச்சுவிட செய்ய முடிந்தது அல்லவா ஈபிடிபி போன்றோரின் கட்டுப்பாட்டில் பலவருடங்களாக கிடைக்காத அபிவிருத்தி சிலவருடங்களில் கிடைத்துள்ளதை சீர்தூக்கிப்பார்க்கலாம் இப்போது கூக்குரலிடும் மாற்று அணிகள் இரண்டும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களை கொண்டவர்கள் தான் அவர்களும் அங்கெ சென்று எதனை செய்தார்கள் அவர்களின் காலத்தில் என்றும் கேட்கலாம் மக்களே சரி இந்த தடவை வெற்றி பெற்று போனாலும் அடுத்த மாதங்களிலேயே அதுவும் கோத்தாவின் ஆட்ச்சியில் தீர்வு கொண்டு வருவார்களா ? அல்லது சமஸடி எடுப்பார்களா ?அல்லது உடனேயே ராஜினாமா செய்வார்களா ? ஒற்றையாட்சி சடடதுக்கு கீழே தான் சாத்தியப்பிரமணமே எடுக்க வேண்டும் மறந்து விடாதீர்கள் 22.14.16 என்று போனபோதே அப்போதைய அரசுகளே கொடுக்காத தேர்வினை கோத்த என்னும் கடும்புக்குவாதி கொடுப்பாரென்று நம்புவீர்களா ?
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)