முதல்-அமைச்சர் வீட்டை முற்றுகையிட முயன்ற 107 பேர் கைது
இந்த நிலையில் போராட்டம் நடத்த இந்திய குடியரசு கட்சியினர் இன்று காலை வழுதாவூர் சாலையில் திரண்டனர். அங்கிருந்து கட்சி தலைவர் ஞானமூர்த்தி தலைமையில் முதல்-அமைச்சர் வீட்டை நோக்கி புறப்பட்டு சென்றனர். அப்போது பிள்ளையார் கோவில் வீதி-வழுதாவூர் சாலை சந்திப்பில் வந்தபோது அவர்களை கோரிமேடு போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். மொத்தம் 72 பெண்கள் உள்பட 107 பேர் கைது செய்யப்பட்டனர்.